Sunday, March 17, 2013

மாணவர்களை தூண்டுகிறாரா ஜெயலலிதா? உளவு பார்க்க வந்த உளவுத்துறை!



தமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரத்தின் மேல் பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படம். அதன் கீழே மிரட்டும் விழிகளுடன் ஏழு புலிக்குட்டிகள் இருந்தன. புலியை சரியான நேரத்தில்தானே தொடுகிறார் ஜெயலலிதா?
ஈழப் பிரச்சினையை வைத்து தமிழகம் கொந்தளிக்கும் கடலாக மாறிக்கொண்டு இருக்கும் நேரத்தில், என்னதான் வனத்துறை விழாவாக இருந்தாலும் புலிப் படங்களைப் போட்டு விளம்பரம் செய்வதற்குத் தைரியம் வேண்டும். 'செய்துதான் பார்ப்போமே’ என்ற ஒரு உள்நோக்கமும் இருக்கலாம். இருக்கலாம்!
இதுதான் மத்திய அரசுக்கு, தமிழக அரசு மீது மிகப் பெரிய நெருடலை உருவாக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் நடக்கத் தொடங்கி இருக்கும் மாணவர் போராட்டங்களை, மாநில அரசாங்கமே மறைமுகமாகத் தூண்டிவிடுகிறதோ?’ என்ற அச்சம்தான் அது.
ஆசியத் தடகள சாம்பியன் போட்டியைத் தமிழகத்தில் நடத்த எதிர்ப்பு, உள்துறையின் தேசியத் தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்கக் கண்டனம், மதக் கலவரத் தடுப்பு மசோதா மீது விமர்சனம், ஐ.ஏ.எஸ். தேர்வு விஷயத்தில் மத்திய அரசின் புதிய விதிமுறையை மாற்றக் கோருவது... என்று, அடுத்தடுத்து மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களிலும் தனது எதிர்ப்பை முதல்வர் ஜெயலலிதா பதிவுசெய்து வருவது மத்திய அரசுக்கு நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்குப் பதிலடி கொடுப்பது மாதிரி, மின்சாரம், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விஷயத்தில் ஏற்கெனவே தந்த அளவை மத்திய அரசு குறைத்துக்​கொண்டது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களை, மாநில அரசு நினைத்திருந்தால் என்றோ அடக்கி​யிருக்க முடியும் என்பதும் மத்திய அரசாங்கத்தின் நினைப்பு.
இதன் தொடர்ச்சியாகத்தான் இலங்கைப் பிரச்னையையும் பார்க்கிறார்கள்.
முக்கிய கட்சித் தலைவர் ஒருவர், இன்னொரு தலைவரிடம் பேசும்போது, இந்த மாணவர் போராட்டத்தை அந்த அம்மாவே தூண்டிவிடுவதுபோலத் தெரியுது. மத்திய அரசாங்கத்துக்கு இதன் மூலமா நெருக்கடி கொடுக்க நினைக்குது’ என்று சொன்னாராம்.
இலங்கைப் பிரச்சினையில் நாம்தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அரசியல் நடத்த வேண்டும். ஆனால், நாம் செய்ய வேண்டிய அனைத்தையுமே முதல்வர் ஜெயலலிதா கனகச்சிதமாய் செய்துவருகிறார்’ என்று, ஈழ ஆதரவுத் தலைவர்களும் சொல்கிறார்கள்.
அரசாங்க ஆதரவு இருப்பதால், ஈழ ஆதரவுத் தலைவர்கள் இன்னும் ஆக்ரோஷமாகப் போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டு வருகிறார்கள்’ என்றும் பேச்சு. இந்தத் தகவல்கள் மத்திய அரசுக்குப் போனது.
அதிரடிப் போராட்டங்கள் அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் அரங்கேறலாம்’ என்ற அதிர்ச்சி தகவல்களை ஐ.பி. அதிகாரிகள் மூலம் கேள்விப்பட்ட டெல்லி மேலிடம் அதிர்ந்துபோனது.
அதன் பிறகே, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் மத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதன் பின்னணியை உன்னிப்புடன் கவனிக்க ஆரம்பித்தது.
சமீபத்தில் வேளாங்கண்ணிக்கு வந்த இலங்கைப் பிரமுகர் அடித்து விரட்டப்பட்டார். தப்பித்து திருச்சிக்கு வந்த அவர் மீது முட்டை வீசப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சவின் நெருங்கிய உறவினருக்கு இராமேஸ்வரத்தில் அடி உதை விழுந்தது. இந்தச் சம்பவங்கள் மீடியா முன்னிலையில் நடந்தன.
இலங்கை வீரர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதை ஏன் முன்கூட்டியே தமிழக பொலிஸ் தடுக்கவில்லை என்று தனது அதிருப்தியை மத்திய அரசிடம் பதிவுசெய்தது இலங்கை அரசு.
இதைப் பற்றி தமிழக உள்துறையிடம் விளக்கம் கேட்டபோது, சரிவரப் பதில் வரவில்லையாம். 'எங்களிடம் சொல்லாமல் வருகிறார்கள். மத்திய அரசும் அவர்களின் வருகையை எங்களிடம் சொல்வது இல்லை. தமிழகத்தில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது' என்றெல்லாம் முதல்வர் ஜெய​லலிதா அறிக்கை விட்டதை கோபப் பார்வையுடன் மத்திய அரசு பார்க்கிறது.
முந்தைய போராட்டங்களை பொலிஸ் கண்டுகொள்ளாமல் விட்டதன் தொடர்ச்சிதான், இப்போதைய கல்லூரி மாணவர்களின் உக்கிரப் போராட்டம் என்று மத்திய அரசு கருதுகிறது.
இதைக் கண்டுகொள்ளாமல் பொலிஸை கைகட்டி வேடிக்கைப் பார்க்கச் சொல்லி, இதன் மூலம் மத்திய அரசுக்கு எதிராக மக்களின் மனோநிலை திரும்பட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா நினைப்பதாக அவர்கள் யோசிக்கிறார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது.
மாணவர்கள் மட்டுமா? வக்கீல்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினரும்தானே போராடுகிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழகத்​தையும் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா திருப்பி விடுவதாக மத்திய அரசு நினைக்கிறதோ?
ஆமாம். அந்தப் படலம்தான் இப்போது ஆரம்பமாகிவிட்டது. 'போராட்டங்கள்... தமிழக மாணவர்களின் உளப்பூர்வமான வெளிப்பாடு' என்பதை மத்திய அரசு முழுமையாக நம்பவில்லை.
இறுதிப் போர் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அப்போதெல்லாம் இல்லாத அளவுக்கு இப்போது மூர்க்கத்தனமாக ஏன் போராட்டம் பரவுகிறது?’ என்று, மத்திய உள்துறையிடம் ஆட்சி மேலிடம் கேட்டிருக்கிறது.
ஐ.நா. தீர்மான விஷயத்தில் மத்திய அரசுக்கு தமிழகத்தில் இவ்வளவு எதிர்ப்பா?’ என்று திகைக்கிறார்கள். இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸோ, அதனுடன் கூட்டணி சேரும் கட்சியோ மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.
அதற்கான திட்டங்களை அரங்கேற்றி வருவதாக மத்திய அரசு நினைக்கிறது. இதை, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாற்ற நினைக்கிறார்கள்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கிறதா? மத்திய அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் எங்கெங்கே தாக்கப்பட்டன? அவை மீது பொலிஸ் எடுத்த நடவடிக்கைகள் என்ன? இந்த வன்முறை நிகழ்வுகளின்போது பொலிஸார் கைகட்டி வேடிக்கை பார்த்தார்களா? மாநில அரசு அவர்களுக்கு என்ன உத்தரவு பிறப்பித்திருக்கிறது? என்பதை இரகசிய ஆய்வு செய்ய, மத்திய உள்துறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள உளவுத் துறை அதிகாரிகள் கொண்ட குழு தமிழகம் வந்து சென்றதாக ஒரு தகவல் கோட்டை வட்டாரத்தில் பரவிக்கிடக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களின் பட்டியல்களையும், கூலிப் படை அராஜக சம்பவங்களையும் திரட்டினார்களாம். தாங்கள் திரட்டிய தகவல்களுடன் நேராக டெல்லிக்குப் போய்விட்டார்களாம்.
மத்திய குழு வந்து சென்றது தமிழக முதல்​வருக்குத் தெரிய வந்ததாகவும், மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவதை எரிச்சலுடன் கேட்டதாகவும் சொல்கிறார்கள்.
அடுத்த கட்டமாக, சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுவதால் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை தற்காலிகமாக மூடும்படி தமிழக அரசுத் தரப்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படலாம் என்கிறார்கள். இதுவும் செய்யப்பட்டால், நெருக்கடி இன்னும் முற்றும்.
மத்திய அரசு அலுவலகங்கள், இலங்கை தொடர்புடைய அரசு மற்றும் தனியார் நிறுவனங்​களுக்கு முதல் கட்டமாக பாதுகாப்பு கொடுப்பதற்காக மத்திய அரசு துணை நிலை இராணுவத்தை அனுப்பி வைக்கப் போகிறது.
1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் நடந்தபோது இராணுவம் இங்கு வந்தது. ஒருவித பதற்றமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது என்று சொல்லிவிட்டு, மாறினார் கழுகார்.
இவ்வாறு ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பகுதியில் வெளியிடப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 16, 2013

பெருகி வரும் மாணவர் போராட்டம் கமல் ரஜினி ஆதரவு ?


இலங்கையில் , தனி ஈழமே தீர்வு அதற்க்கு இந்தியா தனியாக பொது வாக்கெடுப்பு நடத்த கோரி ஐநாவின் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று முதன்மையான கோரிக்கையை வைத்து தமிழகத்தில் மூளை முடுக்கெல்லாம் மாணவர்கள் போராட்டம் ,தீவிரம் அடைந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும், பத்து புது கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டத்தை நடத்துகிறார்கள்.
திருச்சியில் விமான நிலையத்தை முற்றுகை இட்டனர்.
மதுரையில் என்றும் காணாதபடிக்கு பத்தாயிரம் மாணவர்கள் வீதியில் பேரணி நடத்தினர் .
மத்திய அரசு அலுவலகங்களை குறி வைத்து மாணவர்கள் நகர்வது அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
இந்நிலையில் , தமது சொந்த,வியாபார , லாப நட்ட பிரச்சினைகளிற்கு வீதிக்கு வந்து போராடும் திரை துறையினர்., உலகம் முழுவதும் இவர்கள் பங்குகொண்ட ,நடித்த தமிழ் திரைப்படம் பார்த்து அவர்களிற்கு ஆதரவு அளிக்கும் தமிழர்களின் முக்கிய பிரச்சினைக்கு இதுவரை மவுனமே காத்து நிற்கின்றனர்.
அவர்களில் சிலர்., சிம்பு, இமான், இன்று அனிருத் போன்றவர்கள் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து உள்ளார்கள்.
தமது படம், விஸ்வரூபம் பிரச்சினைக்கு உள்ளான பொழுது , தமிழர்கள்தான் தமது காசை ஆயிரத்தை, பத்தாயிரத்தை கமலுக்கு அனுப்பி தமது பாசத்தை காண்பித்தார்கள்.
அதே மாதிரி முதன்மை நடிகர் ரஜினியும் தமது படத்தை தமிழில் எடுத்து தமிழ் திரையரங்கதில்தான் வெளியிட்டு வியாபாரம் பார்கிறார்.
இவர்களை எல்லாம் விட , நடிகராக இருந்து தமிழ்மக்களின் ஆதரவு பெற்று எதிர்க்கட்சி தலைவராக உள்ள விஜயகாந்த் இதுவரை கிஞ்சித்தும் இது பற்றி பேசவில்லை .
மற்றொரு நடிகர் மற்றும் கட்சி தலைவரான சரத்குமார் இது ஏதோ நேபாள நாட்டு பிரச்சினை போலவே உள்ளார்.
இங்கே இவ்வளவு போராட்டம் நடைபெறும் பொழுதும, அண்ணா ஹஜாரே வுக்கு டெல்லிக்கு சென்று அளித்த நடிகர் விஜய் , இங்கும் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் விழுப்புரம் சென்று இலவச திருமணம் என்று அரசியல் ஆசையில் படம் காட்டி கொண்டு உள்ளார்.
விஜயும் ஸ்பானிஷ் நடிகர் அல்ல தமிழ் மொழியில் வசனம் பேசி தமிழ் மொழியில் படம் எடுக்கும் நடிகர்தான் .
இவர்கள் முதலான அனைவரும் வீதிக்கு வந்து போராடவேண்டாம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என்று அறிக்கை மட்டுமாவது கொடுக்கட்டும் .
அதுதான் தமிழ் மொழியை வைத்து திரை வியாபாரம் செய்த இவர்கள், உலக தமிழர்களிற்கு காட்டும் நன்றி கடன் என்று சொல்லலாம்.
அதை செய்துதான் ஆகவேண்டும் .
அப்படி இல்லாமல் போனால் இவர்கள் இனிவரும் காலங்களில் , ஆங்கிலத்திலோ அல்லது ஸ்பானிஸ் மொழியிலோ படங்கள் எடுத்து அந்த நாட்டு தியேட்டர்களில்தான் வியாபாரம் பார்க்க முடியும் என்றே நிலைமை உள்ளது.
ஏன் என்றால் மாணவர்கள் போராட்டம் அப்படி உள்ளது. விமான நிலையத்தையே முற்றுகை இடும் இவர்களுக்கு இவர்களின் படம் ஓடும் தியேட்டர் எம்மாத்திரம் என்பதை அவர்கள் வெகு சீக்கிரம் உணர்ந்து , ஆதரவு அளிப்பார்கள் என்றே அனைவரும் எதிர்பார்கின்றனர்.manin

தமிழ்நாடு மாணவர் ஒரு ஐரோப்பிய தமிழ் கலைஞர் இருந்து ஆதரவு குரல்


Thursday, March 14, 2013

டெசோ அல்லது புஸ்ஸோ


அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யேசக்தி!



‘சாந்தா அல்லது பழனியப்பன்’ – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். ‘டெசோ அல்லது புஸ்ஸோ’ – இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம்.
கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி‘தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை.

இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை.
ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது, தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில் அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி.
அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது.
மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்தி கருணாநிதிக்கு இருந்தது.
அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, ‘என்னது… சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது ‘ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்… பச்சைத் துரோகம்!
p38a(1)
p38b(1)
p38c
p38d
முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால், இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடை யத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
”இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார்.
சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில் ‘முதல்வராக’ இருந்தபோது, ”நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப் பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லது வெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்” என்று சொல்லிச் சமாளித்தவர்.
லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச் சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை. ‘கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர் ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். ‘இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். ”பதவி என் தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி” என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!
p38
”இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்” என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார் கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்பதே உண்மை. ‘போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை, ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம்.
தவறில்லை. ”அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்” என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன், பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே… அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன? கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் ‘பாதுகாப்பான இடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டு கள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள் உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.
p38zz
”நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லி உண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால், அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?” என்று மனசாட்சிஉள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, ”மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்” என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள்கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்று நிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்கா வது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. ‘கொன்றுவிட்டார் கள்… கொடுமைப்படுத்தினார் கள்… சித்ரவதை செய்தார்கள்’ என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள்.
முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. அப்போதும் ‘முதல்வர்’ கருணாநிதி, ”இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல” என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார். ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், ”போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல.
இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை” என்றார். அதாவது, இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.
”இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இடம்பெற்றோம்.
இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்” என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும். ‘போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக் காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.
”போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல” என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். ”அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது” என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும். ”ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்” என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.
போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ”முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து” என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ”அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை… பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்” என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப் பட்டபோது, ”இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்” என்று மிரட்டல் விடுத்து, பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக் கொடுத்து… இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.
சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக் கொடுக்கிறது. உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது. ”பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்” என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், ”விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்” என்று கிண்டல் அடித்ததும், ”இன்று அனை வரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்” என்பவர், அன்று, ”ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்” என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.
ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால், பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50 ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக் கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது. அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களை விரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு… என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு, கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது.
தன்னுடைய கடந்த காலத் தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். பெரியாரைக் காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. ”ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை!” என்று தந்தை பெரியார் சொன்னார்.
அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?
நன்றி – ஆனந்த விகடன்