Sunday, May 30, 2010

அடோப் சிஸ்டம்ஸ் - ஆய்வு

Adobe Systems Incorporated
Adobe Systems Logo
வகை Public (வார்ப்புரு:Nasdaq)
துவக்கம் Mountain View, California (1982)
நிறுவனர் Charles Geschke
John Warnock
தலைமையகம் San Jose, California, U.S.
முக்கியமான நபர்கள் Charles Geschke, Founder
John Warnock, Founder
Shantanu Narayen, President & CEO
சேவை இடம் Worldwide
தொழில்துறை Computer software
விற்பனை பொருள் See List of Adobe products
வருவாய் $ 3.579 billion (2008)
இயக்க வருமானம் $ 1.028 billion (2008)
நிகர வருமானம் $ 871.8 million (2008)
ஊழியர்கள் 8,660 (December 2009)
அடைமொழி Better by Adobe
வலைத்தளம் Adobe.com

அடோப் சிஸ்டம்ஸ் இன்கார்பரேட்டட் (ஒலிப்பு: /əˈdoʊbiː/வார்ப்புரு:Respell)(வார்ப்புரு:Nasdaq) அமெரிக்காவில் கணினிக்கான மென்பொருள் உருவாக்கும் ஒரு நிறுவனம், இது கலிபோர்னியாவில், சான் ஹூசேவைத் தலைமையகமாகக் கொண்டது. இந்த நிறுவனம் மல்டிமீடியா மற்றும் ஆக்கபூர்வ மென்பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது, சமீபகாலமாக சிறந்த இணையதள பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறது.

டிசம்பர் 1982 ஆம் ஆண்டு, ஜான் வார்னாக் மற்றும் சார்லஸ் ஜெஸ்க் என்பவர்களால் அடோப் நிறுவனம் உருவாக்கப்பட்டது, போஸ்ட் ஸ்க்ரிப்ட் (PostScript) பக்க விளக்க மொழியை உருவாக்க இவர்கள் ஜெராக்ஸ் பார்க் (Xerox PARC) என்ற நிறுவனத்தை விட்டு விலகி இந்நிறுவனத்தை உருவாக்கினர். 1985 ஆம் ஆண்டு ஆப்பிள் கம்ப்யூட்டர் போஸ்ட் ஸ்க்ரிப்டின் உரிமம் பெற்று, அதனை தனது லேசர்ரைட்டர் அச்சியந்திரங்களுக்கு பயன்படுத்தியது, இது டெஸ்க்டாப் பிரசுரத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இந்நிறுவனத்தின் பெயரான அடோப் என்பது, கலிபோர்னியா, லாஸ் ஆல்டோஸ்சில் (Los Altos) உள்ள அடோப் கிரீக் (Adobe Creek) என்பதிலிருந்து உருவானது, இது இந்நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரது வீட்டிற்கு பின்புறம் ஓடிய ஓடையின் பெயர்.

டிசம்பர் 2005 ஆம் ஆண்டு, அடோப் தனது போட்டி நிறுவனமான மேக்ரோமீடியாவை கையகப்படுத்தியது, இது அடோப் கோல்ட்ப்யூஷன் (Adobe ColdFusion), அடோப் ட்ரீம்வீவர் (Adobe Dreamweaver), அடோப் ஃப்ளாஷ் (Adobe Flash) மற்றும் அடோப் ஃப்ளக்ஸ் (Adobe Flex) என அதனது தயாரிப்புகளின் பட்டியலை அதிகரிக்க உதவியது.

ஆகஸ்ட் 2009 ஆம் வருட கணக்கெடுப்பின்படி, அடோப் சிஸ்டம்சில் 7,564 பணியாளர்கள் பணியாற்றி வந்தனர், அதில் 40 சதவீத மக்கள் சான் ஹூசேவில் பணியாற்றி வந்தனர். அடோப்பின் முக்கிய அபிவிருத்தி செயலாக்க கூடங்கள், ஆர்லான்டோ, ப்ளோரிடா; சியாட்டில், வாஷிங்க்டன்; சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா; ஒட்டாவா; ஆன்டாரியோ; மினியாபோலிஸ், மின்னிசோட்டா; நியூட்டன், மாசஷூசெட்ஸ்; சான் லூயிஸ் ஓபிஸ்போ, கலிபோர்னியா; ஹாம்பர்க், ஜெர்மனி; நாய்டா, இந்தியா; பெங்களூர், இந்தியா; புச்சாரஸ்ட், ரோமானியா; பெய்ஜிங், சைனா ஆகியவை.

வரலாறு

அடோப் சிஸ்டம்ஸ் கலிபோர்னியாவில் உள்ள சான் ஹூசேவைத் தமது தலைமையகமாகக் கொண்டுள்ளது.

அடோப் அதன் போஸ்ட் ஸ்க்ரிப்ட் தயாரிப்பிற்கு பின் டிஜிட்டல் எழுத்துருக்களை உரிம உடமையுடன் டைப் 1 என்ற வடிவில் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் இதற்குப் போட்டியாக எழுத்து வடிவ எல்லைகளை மிகவும் துல்லியமாக பிக்சல் வடிவில் கட்டுப்படுத்தும் ட்ரூ டைப் என்ற மென்பொருளாக வெளியிட்டு இதன் உரிமத்தை மைக்ரோசாப்ட்டிற்கு வழங்கினர். இதற்கு பதிலளிக்கும் வகையில் அடோப், டைப் 1 வடிவ எழுத்துடன் அடோப் டைப் மேனேஜர் என்ற மென்பொருளை வெளியிட்டது, இது ட்ரூ டைப் போன்ற துல்லியமான பிக்சல் கட்டுப்பாடு இல்லாத போதிலும், WYSIWYG அளவுகோல் கொண்ட திரையில் வரும் டைப் 1 வடிவ எழுத்துக்களுடன் இருந்தது. ஆனால் இத்தகைய முயற்சிகள் ட்ரூ டைப்பின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. டைப் 1 கிராபிக்/பிரசுர சந்தையின் தரமாக ஏற்கப்பட்டிருப்பினும் ட்ரூ டைப், வியாபாரச் சந்தை மற்றும் விண்டோஸ் பயன்படுத்துபவரிடையேயும் உபயோகத் தரமாக கொள்ளப்பட்டது. 1996 ஆம் வருடம் அடோப் மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து ஓபன் டைப் வடிவ எழுத்துக்களை வெளியிட்டது, இதனைத் தொடர்ந்து 2003 ஆம் வருடம் அடோப் அதன் டைப் 1 வடிவ எழுத்துக்களின் தொகுப்பை ஓபன் டைப்பாக மாற்றியது.

1980களில், அடோப், ஆப்பிள் மேக்கிண்டோஷ்க்காக அடோப் இல்லஸ்ரேட்டர் என்ற வெக்டர் வடிவ மென்பொருளுடன் நுகர்வோர் சந்தையில் நுழைந்தது. உள் நிறுவன எழுத்துரு-உருவாக்க மென்பொருளிலிருந்து வளர்ச்சியடைந்த இல்லஸ்ரேட்டர், போஸ்ட் ஸ்க்ரிப்டை பயன்படுத்தும் லேசர் அச்சியந்திரங்கள் பிரபலமாக உதவியது. மெக் டிரா, தரமான மேஷிண்டாஷ் வெக்டார் வரைதல் நிரல் போலல்லாது, இல்லஸ்ரேட்டர், வடிவங்களை விளக்க, அதுவரை இல்லாத அளவு மிகவும் துல்லியமான மற்றும் இணக்கமான பேசியர் வளைவுகளை அளித்தது. அடோப், அடோப் டைப் மேனேஜர் வெளியிடும் வரை, இல்லஸ்ரேட்டரின் வடிவ எழுத்துருக்கள், மேஷிண்டாஷின் குயிக் டிரா நூலகங்களைச் சார்ந்தே இருந்தது, போஸ்ட் ஸ்க்ரிப்ட் மாதிரி அணுகுமுறையால் அதனை முறியடிக்க இயலவில்லை.

1989 ஆம் ஆண்டு, அடோப் தனது தயாரிப்பில் முத்திரைப் பதித்த, மேஷிண்டாஷின் கிராபிக்ஸ் திருத்தியமைக்கும் நிரலான போட்டோஷாப்பினை அறிமுகப்படுத்தியது. நிலையான மற்றும் சிறப்பு அம்சங்களுடன், போட்டோஷாப் 1.0 பதிப்பினை அடோப் விற்பனை செய்தது, அது மென்பொருள் சந்தையை ஆட்சி செய்தது.

அடோப்பின் சில தவறான செய்கைகளில் ஒன்று, மேஷிண்டாஷ் தளத்திற்கு டெஸ்க்டாப் பிரசுர நிரலை (DTP) அளிக்காததகும். 1985 ஆம் ஆண்டு ஆல்டஸ், பேஜ் மேக்கரையும், 1987 ஆம் ஆண்டு, குவார்க், குவார்க்எக்ஸ்பிரஸ்சினையும் கொண்டு வந்து, டிடிபி சந்தையில் முன்னிலையை அடைந்தனர். அடோப், வளர்ந்து வந்த விண்டோஸ் டிடிபி (DTP) சந்தையையும் சிறிது தாமதமாகவே சந்தித்தது. எனினும் அடோப், தனது இன் டிசைன் என்ற வெளியீட்டின் மூலமும், கிரியேட்டிவ் சுயிட் என்ற சேவையின் மூலம் இவ்வியாபாரத்தை திறம்பட எதிர்கொண்டது. கணினியாக்கம் செல்லும் திசையை நிர்ணயிக்க முடியாமல், அடோப் ஸ்டீவ் ஜாபின் நெக்ஸ்ட்(NeXT) கணினிக்காக இல்லஸ்ரேட்டரின் முழு பதிப்பை வெளியிட்டது, ஆனால் அது விண்டோஸ்க்கு தரம் தாழ்ந்து தயாரிக்கப்பட்ட பதிப்பாகும்.

இத்தகைய தவறான அடிகளை வைத்த போதும், போஸ்ட் ஸ்க்ரிப்ட் இன்டர்பிரெட்டருக்காகப் பெற்ற உரிமக் கட்டணம், 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் அதன் பல்வேறு போட்டி நிறுவனங்களை எதிர்கொள்ள அல்லது கையகப்படுத்த போதுமானதாக இருந்தது. டிசம்பர் 1991 ஆம் ஆண்டு, அடோப், அடோப் பிரீமியர் என்பதை வெளியிட்டது, 2003 ஆம் ஆண்டு அதனை அடோப் பிரீமியர் ப்ரோ(Adobe Premiere Pro) என மறுபெயரிட்டு வெளியிட்டது. 1994 அடோப் ஆல்டஸ் நிறுவனத்தை கையகப்படுத்தி, அடோப் பேஜ் மேக்கர் மற்றும் அடோப் ஆப்டர் எஃபக்ட்ஸ் இரண்டையும் தனது தயாரிப்புகள் வரிசையில் சேர்த்தது; மேலும் டிஃப் (TIFF) கோப்பு வடிவமைப்பையும் கட்டுப்படுத்தியது. 1995 ஆம் ஆண்டு, அடோப், பிரேம் டெக்னாலஜி கார்ப்பை கையகப்படுத்திய பின் தனது தயாரிப்பு வரிசையில், அடோப் ப்ரேம்மேக்கர் என்ற ஆவண டிடிபி (DTP) பயன்பாட்டைச் சேர்த்தது. அடோப் 1999 ஆம் ஆண்டு, குவார்க் காப்பி டெஸ்க்கிற்கு போட்டியாக அடோப் இன்காப்பி (Adobe InCopy) என்பதை அறிமுகப்படுத்தியது.

முன்னணி போட்டியாளர்கள்

ஹூவரில் வழங்கியபடி, அடோபின் முன்னணி போட்டியாளர்கள்:

  • ஆப்பிள் இன்க்.
  • மைக்ரோசாஃப்ட்
  • குவார்க், இன்க்.

நிறுவன நிகழ்வுகள்

1992

  • ஒ சி ஆர் சிஸ்டம்ஸ், இன்க்கினை கையகப்படுத்தியது.

1999

  • கோ லைவ் சிஸ்டம்ஸ், இன்க்கினை கையகப்படுத்தியது மற்றும் அடோப் கோ லைவ் என்பதை வெளியிட்டது.
  • அடோப் இன் டிசைன் (Adobe InDesign) என்ற மென்பொருளை குவார்க்எக்ஸ்பிரசுக்கு (QuarkXPress) எதிராக மற்றும் பேஜ் மேக்கருக்கு பதிலாக பயன்படுத்தும் வகையில் வெளியிட்டது.

2003

  • மே: சின்டிரில்லியம் சாப்ட்வேர் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தி, அடோப் ஆடிஷனை (Adobe Audition) தனது தயாரிப்புகள் பட்டியலில் இணைத்தது.

2004

  • டிசம்பர்: 3D கூட்டு மென்பொருள் உருவாக்கும் ஒ கே ஒய் ஜீ எஸ். ஏ. (OKYZ S.A.) என்ற பிரான்சு நிறுவனத்தை கையகப்படுத்தியது. இந்த கையாக்கம், 3D தொழிற்நுட் அறிவை அடோப் இன்டலிஜன்ட் டாகுமென்ட் பிளாட்பார்ம்மில் இணைக்க உதவியது.

2005

படிமம்:Adobe formerly macromedia.png
"முன்பு மேக்ரோமீடியா" சின்னமாக இருந்தது
  • டிசம்பர் 12, 2005: பங்குச் சந்தைப் பரிமாற்றத்தில், 3.4 பில்லியன் மதிப்புள்ள தனது முக்கிய போட்டியாளரான மேக்ரோமீடியாவை கையகப்படுத்தி தனது மென்பொருள் தயாரிப்பு பட்டியலில், அடோப் கோல்ட் ப்யூஷன் (Adobe ColdFusion), அடோப் கான்ட்ரிப்யூட் (Adobe Contribute), அடோப் கேப்டிவேட் (Adobe Captivate), அடோப் ஆக்ரோபட் கனெக்ட் (Adobe Acrobat Connect) (முன்பு மேக்ரோமீடியாவின் முக்கிய தயாரிப்பாக இருந்தது), அடோப் டேரக்டர் (Adobe Director), அடோப் ட்ரீம்வீவர் (Adobe Dreamweaver), அடோப் ஃபயர்வொர்க்ஸ் (Adobe Fireworks), அடோப் ஃப்ளாஷ் (Adobe Flash), மேக்ரோமீடியா ஃப்ளாஷ்பேப்பர் (Macromedia FlashPaper), அடோப் ஃப்ளக்ஸ் (Adobe Flex), மேக்ரோமீடியா ப்ரீஹான்ட் (Macromedia FreeHand), மேக்ரோமீடியா ஹோம்சைட் (Macromedia HomeSite), மேக்ரோமீடியா ஜேரன் (Macromedia JRun), அடோப் பிரசண்டர் (Adobe Presenter) மற்றும் மேக்ரோமீடியா ஆத்தர்வேர் (Macromedia Authorware) போன்றவற்றை இணைத்தது.

2007

  • ஜனவரி: அடோப் போட்டோஷாப் லைட் ரூம் என்பதை வெளியிட்டு, நிழற்படம் எடுப்பவர்களுக்கு அதன் டிஜிட்டல் உருவங்களை நிர்வகிக்கவும், புகைப்படம் எடுத்த பின் அதில் பணியாற்றுவதை எளிமையாக்கவும் உதவி செய்தது. இந்தத் தயாரிப்பு, பண்படுத்தப்படாத உருவங்களை எடிட் செய்ய உதவும் ஆப்பிளின் அபெர்ச்சர் என்பதற்கு போட்டியாக கொண்டு வரப்பட்டது.
  • மே 2007: ஸீன்7 என்பதை கையகப்படுத்தியது, இது உருவ செயலாக்கத்திற்கும், வலையில் பல்வேறு தளங்கள் பயன்படுத்தும் நடைமேடையை காண்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.
  • ஜூலை: அடோப், அடோப் சவுன்ட்பூத்தை வெளியிட்டது. இந்தத் தயாரிப்பு ஏற்கனவே உள்ள அடோப் ஆடிஷனுக்குப் பதிலாக கொண்டு வரப்படவில்லை, ஆடியோவைப் பற்றி அதிக புலமை இல்லாதவர்களும் பணியாற்ற ஒரு சூழல் ஏற்படுத்தி தருவதற்காகக் கொண்டு வரப்பட்டது.
  • ஆகஸ்ட் 3, 2007: ஆத்தர்வேர் என்ற "எலக்ட்ரானிக் முறையில் கற்றலை எளிதாக்கி நிறுவன வலைப்பின்னல், சிடி/டிவிடி மற்றும் வலைக்குப் பயன்படும் விஷுவல் படைப்பாக்க கருவி உருவாக்கத்தை நிறுத்தப் போவதாக" அறிவித்தது. ஆத்தர்வேர், மேக்ரோமீடியா/அடோப் சேர்க்கையின் போது கையகப்படுத்திய உருவாக்க கருவிகளில் ஒன்று. இதனை அடோப் கேப்டிவேட் பதிலீடு செய்தது.
  • அக்டோபர் 2007: ஆன்லைன் வார்த்தை செயலாக்கியான பஸ்வோர்ட்டுடன் (Buzzword) விர்ச்சுவல் யுபிக்குட்டியை கையகப்படுத்தியது.
  • நவம்பர் 12, 2007: சி இ ஒ, ப்ரூஸ் ஷிசென் (Bruce Chizen) தனது பதவியிலிருந்து விலகினார். டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து, அவருக்கு பதிலாக ஷாந்தனு நாராயண், அடோப்பின் தற்போதைய தலைவர் மற்றும் தலைமை செயற்பாட்டு அதிகாரியாகப் பதவியேற்றார். ப்ரூஸ் ஷிசென் அடோபின் அவைத் தலைவர்கள் குழுவில் அவரது சேவைக்காலம் முடியும் வரை பணியாற்றிய பின், 2008 நிதியாண்டு முடியும் வரை திட்ட ஆலோசகராக பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2008

  • ஏப்ரல்: அடோப், அடோப் மீடியா பிளேயரை வெளியிட்டது. பல்வேறு வீடியோக்கள் மற்றும் கையேடுகள், பொழுதுபோக்கு அல்லது பயிற்சி செய்ய உதவும் வகையில் உள்ளது.
  • 27 ஏப்ரல்: அடோப் ட்ரீம்வீவருக்காக, தனது கோ லைவ் என்ற எச்டிஎம்எல் (HTML)/ வலை உருவாக்க மென்பொருள் தயாரிப்பதையும் விற்பனை செய்வதையும் நிறுத்தி விட்டது. அடோப் கோ லைவ் பயன்படுத்துபவர்களுக்கு, அவர்கள் ட்ரீம் வீவர் வாங்கினால் விலையில் தள்ளுபடி அளித்ததோடு, கோ லைவ் பயன்படுத்தி வருபவர்களுக்கு ஆன்லைன் கையேடுகள் மற்றும் கோ லைவ் மென்பொருளிலிருந்து ட்ரீம் வீவருக்கு வலை தளத்தை மாற்ற உதவியும் அளித்து வந்தது.
  • 1 ஜூன்: அடோப் இணைந்து பணியாற்றுவதற்கு ஏற்ற வலைப் பயன்பாடுகளின் தொகுப்பு கொண்ட Acrobat.com என்பதை வெளியிட்டது.
  • வடிவமைத்தல், வலை, தயாரிப்பு பிரிமீயம் மற்றும் மாஸ்டர் தொகுப்பு கொண்ட கிரியேட்டிவ் சுயிட் 4 என்பதை அக்டோபர் 2008 ஆம் ஆண்டு பல்வேறு விலை மதிப்பில் ஆறு வித பதிப்புகளுடன் கொண்டு வந்தது, இது யூ எஸ் டாலர் மதிப்பில் 1,700 முதல் 2,500 வரையும் பயன்பாடுகளை தனித் தனியாக வாங்கும் வகையிலும் இருந்தது. விண்டோஸ் பதிப்பில் வெளி வந்த போட்டோ ஷாப் 64-பிட் செயலாக்கத்தில் இருந்தது.
  • டிசம்பர் 3, 2008: அடோப் நலிந்த பொருளாதாரச் சூழலைக் காரணம் காட்டி தனது 600 (பல்வேறு நாடுகளில் பணியாற்றுபவர்களில் 8 சதவீதம்) பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது.

2009

  • கிரியேட்டிவ் சுயிட் 4 தொகுப்பு அதிக அளவு விற்பனையாகவில்லை.
  • ஆகஸ்ட் 29 - அடோப் பிசினஸ் கேடலிஸ்ட் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தியது.
  • செப்டம்பர் 15 - அடோப் ஆம்னிச்சரை கையகப்படுத்தியது.
  • நவம்பர் 10 - அடோப் 680 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது.

2010

  • அடோப், சைனாவில் நிர்வகித்து வரும் கூட்டு நிறுவன கட்டமைப்புக்கு எதிராக நடந்த "ஒருங்கிணைந்த தாக்குதலைப்" பற்றி விசாரித்து வருவதாக அறிவித்தது. இதே தாக்குதல் கூகுள் மற்றும் மேலும் 20 நிறுவனங்களுக்கு எதிராகவும் நடைபெற்றது.

தலைமை நிர்வாகம்

நிர்வாகக் குழு
சார்லஸ் எம். ஜெஸ்க் (Charles M. Geschke) அவையின் இணை இயக்குனர்
ஜான் இ. வார்னாக் (Charles M. Geschke) அவையின் இணை இயக்குனர்
ஷாந்தனு நாராயண் (Shantanu Narayen) தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி
கரேன் காட்டில் (Karen Cottle) மூத்த துணைத் தலைவர், பொது ஆலோசகர் மற்றும் நிர்வாக காரியதரிசி
மார்க் கேரெட் (Mark Garrett) நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைமை நிதி அதிகாரி
டானா மோரிஸ் (Donna Morris) மூத்த துணைத் தலைவர், மனித வளம்
கெவின் லின்ச் (Kevin Lynch) மூத்த துணைத் தலைவர்: அனுபவம் & தொழிற்நுட்ப குழு, தலைமை தொழிற்நுட்ப அதிகாரி

தயாரிப்புகள்

அடோப்பின் தயாரிப்புகளாவன:

  • டெஸ்க்டாப் மென்பொருள்களான, அடோப் போட்டோஷாப் (அடோப் கிரியேட்டிவ் சுயிட் மற்றும் அடோப் அடிஷனின் ஒரு பகுதி)
  • சேவையக மென்பொருளான, அடோப் கோல்ட்ப்யூஷன் மற்றும் அடோப் லைவ் சைக்கிள்
  • தொழிற்நுட்பங்களான போர்டபிள் டாகுமன்ட் ஃபார்மட் (PDF), பிடிஎப்பின் முன்னோடிகளான போஸ்ட் ஸ்க்ரிப்ட் மற்றும் பிளாஷ்
  • வலையேற்ற சேவைகளான, அடோப் கூலர், போட்டோஷாப் எக்ஸ்பிரஸ், மற்றும் Acrobat.com
  • வலை வடிவமைப்பு நிரல்களான: அடோப் ட்ரீம்வீவர் மற்றும் அடோப் கோ லைவ்
  • வீடியோ திருத்தம் மற்றும் விஷூவல் விளைவுகளுக்கு: அடோப் பிரீமியர் மற்றும் அடோப் ஆப்டர் எஃபக்ட் (Adobe After Effects)
  • மின்னணு வழி கற்றலுக்கு, அடோப் கேப்டிவேட்

நிதிசார் தகவல்

1986 ஆம் ஆண்டு அடோப் சிஸ்டம்ஸ் நாஸ்டாக்கில் (NASDAQ) நுழைந்தது. 2006 ஆம் ஆண்டில் அடோப்பின் வருமானம் $2.575 பில்லியன் யூ எஸ் டாலர்கள் (USD).


பிப்ரவரி 2007 ஆம் ஆண்டின் படி, அடோப்பின் சந்தை முதலாக்கம் $23 பில்லியன் யூ எஸ் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது; ஆகஸ்ட் 2007 ஆம் ஆண்டின்படி, இதனுடைய தொழிற் பங்கு நாஸ்டாக்கில் $40 யூ எஸ் டாலர்களுக்கும், பி/இ விகிதம் 49க்கும் மற்றும் இபிஎஸ் $0.80க்கும் விற்பனையாகிக் கொண்டிருந்தது.

மார்ச் 2008 ஆம் ஆண்டின்படி, அடோப்பின் சந்தை முதலாக்கம் தோராயமாக $18 பில்லியன் யூ எஸ் டாலர்களாக இருந்தது; இதனுடைய தொழிற் பங்கு நாஸ்டாக்கில் $33 யூ எஸ் டாலர்களுக்கும், பி/இ விகிதம் 27க்கும் மற்றும் இபிஎஸ் $1.21க்கும் விற்பனையாகிக் கொண்டிருந்தது.

வருவாய்

2000 ஆம் ஆண்டு வரிசையில்

ஆண்டு வருவாய்
2008 $3.58 பில்லியன்
2007 $3.158 பில்லியன்
2006 $2.575 பில்லியன்
2005 $1.966 பில்லியன்
2004 $1.667 பில்லியன்
2003 $1.295 பில்லியன்
2002 $1.165 பில்லியன்
2001 $1.230 பில்லியன்
2000 $1.156 பில்லியன்

1990 ஆம் ஆண்டு வரிசையில்

நிதியாண்டு வருவாய்
1999 $1.015 பில்லியன்
1998 $895 மில்லியன்
1997 $912 மில்லியன்
1996 $787 மில்லியன்
1995 $762 மில்லியன்
1994 $676 மில்லியன்

அடோபின் நிதியாண்டு டிசம்பர் முதல் நவம்பர் வரை செல்லும். உதாரணமாக, 2007 ஆம் வருட நிதியாண்டு நவம்பர் 30, 2007-இல் முடிவடைந்தது.

விருதுகள்

1995 ஆம் ஆண்டு, பார்ச்சூன் (Fortune) அடோபினை பணியாற்ற மிக உன்னதமான இடமாக தனது கணக்கெடுப்பில் குறிப்பிட்டுள்ளது. அடோப் 2003 ஆம் ஆண்டு பணியாற ஐந்தாவது சிறந்த யூ எஸ் நிறுவனமாகவும், 2004 ஆம் ஆண்டு ஆறாவதாகவும், 2007 ஆம் ஆண்டு முப்பத்தி ஒன்றாவதாகவும், 2008 ஆம் ஆண்டு நாற்பதாவதாகவும், 2009 ஆம் ஆண்டில் பதினொன்றாவதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. மே மாதம் 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள அடோப் சிஸ்டம்ஸ் இந்தியா, இந்தியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த இடங்களில், பத்தொன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. அக்டோபர் 2008 ஆம் ஆண்டு, அடோப் சிஸ்டம்ஸ் கனடா இன்க், "கனடாவின் முதல் 100 தொழிலதிபர்களில்" ஒன்றாக மீடியாகார்ப் கனடா இன்க்கால் பெயரிடப்பட்டது, இதனைப் பற்றிய அறிக்கை மெக்லீன் பத்திரிகையிலும் வெளிவந்தது.

விமர்சனம்

அடோப் அதனது மென்பொருளுக்கு நிர்ணயிக்கும் விலை குறித்து விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது, அது தனது தயாரிப்புகளை உள்ளூர் சந்தையில் அளிக்கும் விலையை விட இருமடங்கு அதிகமாக வைத்து வெளிநாடுகளில் விற்பதாக கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 2009 ஆம் ஆண்டு, அடோப் தனது தாயரிப்புகளின் விலையை யூ கே வில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (பி. மே 13, 1956) ஒரு புகழ்பெற்ற இந்திய குரு ஆவார். அவர் தமிழ்நாட்டில் உள்ள பாபநாசத்தில், ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தனது சீடர்களால் ஸ்ரீ ஸ்ரீ என்று மரியாதையுடன் அழைக்கப் படும் இவர், வாழும் கலை என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர். இந்நிறுவனம் பண்டைய இந்திய அறிவுச் செல்வத்தை நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

வாழ்க்கை வரலாறு

ஸ்ரீ ஸ்ரீ, வேங்கட ரத்னம் என்ற மொழி வல்லுனருக்கும் விசாலாட்சி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். அவர் ஆதி சங்கரர் பிறந்த நாளில் பிறந்ததால் அவருக்கு சங்கர் என்று பெற்றோர் பெயரிட்டனர். நான்கு வயதிலேயே பகவத் கீதை என்கிற இந்து புனித நூலை ஒப்பிக்கத் தெரிந்து வைத்திருந்தார். இளமைப் பருவத்திலேயே ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் வல்லமை பெற்றிருந்தார் என்று கருதப்படுகிறது. பதினேழு வயதில் முன்னிலை இயற்பியல் பட்டம் பெற்றார்.


இவர் மகரிஷி மகேஷ் யோகியிடம் சீடராக இருந்தார். அவரது தலைமையில் வேத விற்பன்னர்களை பயிற்றுவித்தார். அவரது அன்புள்ள சீடராகவும் விளங்கினார். பிற்காலத்தில் அவரது பெயரான ரவிசங்கருடன் ஸ்ரீ ஸ்ரீ என்கிற பெயரையும் சேர்த்துக்கொண்டார். ஏனெனில், ரவி சங்கர் என்கிற சித்தார் வல்லுநர் தனது பெயரால் குரு பயன் பெறுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.


1982 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் உள்ள ஷிமோகாவில் பத்ரா நதிக்கரையில் 10 நாள்கள் தனிமை மௌனத்திற்குப் பிறகு இவர் "சுதர்ஷன் க்ரியா" என்கிற ஒரு தாள லயமுள்ள மூச்சுப் பயிற்சியை உணர்ந்தறிந்தார். ஒரு நேர் காணலில் அவர் இந்த பயிற்சி தனக்கு ஒரு "பாடல் அல்லது உத்வேகம்" போல் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார். பிறகு அவர் அதை மற்றவருக்கும் பயிற்றுவிக்கத் தொடங்கினார். அவர் சொல்கிறார்: "ஒவ்வொரு உணர்வும் மூச்சின் ஒவ்வொரு லயத்துடன் தொடர்புடையது. எனவே மூச்சை சமன் செய்வது துன்பத்தைக் குறைக்க உதவும்"

சங்கர் 1982 ஆம் ஆண்டு "வாழும் கலை" நிறுவனத்தைத் தொடங்கினார். தலாய் லாமா மற்றும் வேறு சிலருடன் இணைந்து சர்வதேச மனித மதிப்புகள் கழகத்தை தொடங்கினார். இதன் நோக்கம் "மனித சமுதாயத்தை ஒருமைப்படுத்தும் மதிப்புகளை அறிவதும் வளர்ப்பதுவுமே" ஆகும்.

வாழ்க்கைத் தத்துவம் மற்றும் நடவடிக்கைகள்

சங்கர் மூச்சை உடம்பையும் மனதையும் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ள ஒரு சாதனமாகக் கருதுகிறார். அவர் தியானம் செய்வதுடன் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுருத்துகிறார். அவருடைய நோக்கம் அறிவின் மூலம் மன உளைச்சலும் விரோதமும் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது. அவர் கருத்தின்படி "உண்மை என்பது நேரானதல்ல, உருண்டையானது, எனவே அது இரு எதிர் மாறான துருவங்களைக் கொண்டுள்ளது. எந்த உருண்டையான பொருளும் இரு துருவங்களை கொண்டிருக்கும்."

"9/11" அன்று நியூ யார்க்கிலுள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நிகழ்ந்த பிறகு, அவரது நிறுவனம் அங்கு இலவசமாக மன உளைச்சலைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கொசோவோ போன்ற இடங்களிலும் நிவாரணத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈராக்கிலும் இதன் சேவைகள் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இதன் சேவகர்கள் சுனாமி மற்றும் கத்ரீனா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி புரிந்தனர். இது சிறைக்கைதிகளுக்கும் கூட சில பயிற்சிகளை வடிவமைத்துள்ளது.

சுதர்ஷன் க்ரியா

சுதர்ஷன் க்ரியா என்பது வாழும் கலை நிறுவனப் பயிற்சிகளின் ஒரு முக்கிய அங்கமாகும். இது உடலில் ஆற்றலைப் புகுத்தி, உடல், மனம் மற்றும் உணர்வுகளின் இயற்கையான தாள லயங்களைச் சமன் செய்யக் கூடியதாகக் கருதப் படுகிறது. இதன் பலன்களைப் பற்றி பல்வேறு தனி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இதைத் தவிர வாழும் கலை நிறுவனம் தியானம் மற்றும் குழு சார்ந்த பயிற்சிகளையும் அளிக்கிறது. ஏழ்மை மிக்க கிராம மற்றும் நகரப் பகுதிகளிலும், சிறைச் சாலைகளிலும் கூட சில பயிற்சிகளை இலவசமாக அளிக்கிறது.

வாழும் கலை நிறுவனம் பயிற்சிகள் அளிப்பதுடன், சேவைப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

விமரிசனங்கள்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமது சுதர்சன் கிரியா பயிற்சிக்குக் காப்புரிமை பெற்றுள்ளார்.ஆனால் பழமையான யோகா பயிற்சிகளை மூச்சுப் பயிற்சிகளுடன் இணைத்து ஓர் மாயவலை பின்னணியில் வணிகமாக்கியிருப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தன்னார்வலர்களுடன் அவர் நடத்தும் சமூக மாநாடுகளும் அவரது ஆசிரமத்திற்கு வணிகப் பலன் வேண்டியே நடத்தப்படுவதாகவும் விமரிசனம் உண்டு.

அவரது வலைத்தளங்களிலும் பதிப்புகளிலும் உள்ள பல தரவுகள் சான்றுகள் இல்லாமலும் சரிபார்க்க இயலாதும் உள்ளன.காட்டாக,கொடுக்கப்பட்ட ஓர் பிரசுரத்தில் இளைஞர் விழிப்புணர்ச்சி மாநாடு (Youth Empowerment Seminar) பத்து செருமானிய பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதனை ஆங்கில இதழ் ரீடர்ஸ் டைஜஸ்ட் தம்போக்கில் ஐந்து பல்கலைக்கழகங்களில் சரிபார்த்தபோது, அவை கட்டாயமாக இல்லாமல் கல்வித்திட்டத்திலேயே இல்லாதிருந்தது தெரியவந்தது. டென்னிஸ்,உடற்பயிற்சி போன்ற மனமகிழ் செயல்பாடுகளில் ஒன்றாக விருப்பத் தேர்வாக இருந்தது.

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!

கிளிநொச்சி: இலங்கை கிளிநொச்சி கணேசபுரத்தில் மலக்குழி ஒன்றில் மூட்டை மூட்டையால் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு மலக்குழி ஒன்றில் ஏராளமான சடலங்கள் காணப்படுகின்றன.

குறிப்பிடப்பபட்டுள்ள இடத்தில் துப்புரவு தொழிலாளர்கள் குழியில் நிரப்பப்பட்டிருந்த மணலை வெளியிலெடுக்க முனைந்தபோது, குழியினுள் கறுப்பு பைகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மூட்டைகள் காணப்பட்டுள்ளன. அவற்றினை பிரித்துப் பார்த்தபோது பெண்களின் சடலங்கள் இருந்தன.

ஐந்து மூட்டைகள் வரை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், இன்னமும் அதிகமான சடலங்கள் அதே குழியினுள் இருக்கலாம் என அங்கு சென்ற மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் இருந்து அனைவரையும் வெளியேறுமாறு மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் பெருமளவு மக்கள் திரண்டு அவற்றைப் பார்த்துச் சென்றவண்ணம் உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி மாவட்ட நீதிபதியிடம், யாரும் புகார் கொடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலங்கள் இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றப்படலாம் என்ற அச்ச நிலையும் எழுந்திருக்கின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடங்கிய காலப் பகுதியில் இதே கணேசபுரம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போர்க்காலத்தில் இந்த கொடூரங்கள் நடந்ததா, அல்லது முகாம்களில் அடைக்கப்பட்டு கணக்கில் வராமல் போன தமிழர்களில் ஒரு பகுதியினரது பிணமா இவை என்று கேள்வி எழுந்துள்ளது.

டெல்லி விமான நிலைய அலட்சியம்: வானில் தவித்த விமானங்கள்!

விமானத்தில் எரிபொருள் காலியாகிவிட்ட நிலையிலும் 3 விமானங்களை வானில் வட்டமடிக்கவிட்டு பயணிகளின் உயிரோடு விளையாடியுள்ளது டெல்லி விமான நிலையம்.

மங்களூர் விமான விபத்து நடந்த சில நாட்களில் கடந்த புதன்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அன்றைய தினம் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சீனாவுக்குப் புறப்பட்டார். அதே போல இந்தியா வந்துள்ள துர்க்மேனிஸ்தான் அதிபர் பெர்டிமுன்ஹா மெடோவ் ஆக்ராவுக்குச் சென்றார். இருவரது சிறப்பு விமானங்களும் டெல்லி விமான நிலையத்தில் இருந்து கிளம்ப இருந்ததால், பாதுகாப்பு கருதி மற்ற அனைத்து விமானங்களும் கடைசி நேரத்தில் டெல்லியில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு, ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.

மும்பையில் இருந்து டெல்லி வந்த ஜெட்லைட் நிறுவன போயிங் 737 விமானம் (JLL 108), ஜெய்ப்பூருக்குத் திருப்பிவிடப்பட்டபோது அதில் போதுமான எரிபொருள் இல்லை. இருப்பினும் அந்த விமானம் ஜெய்ப்பூர் செல்ல உத்தரவிடப்பட்டது. இதையடுத்த அந்த விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது. அப்போது அதில் வெறும் 3 நிமிட எரிபொருளே மிச்சமிருந்தது.

அதே போல மும்பையில் இருந்து டெல்லி வந்த கிங்பிஷ்ஷர் ஏர்பஸ் 330 விமானம் (IT 300) ஜெய்ப்பூரில் தரையிறங்கியபோது, அதில் அடுத்த 10 நிமிடம் மட்டுமே பறப்பதற்கான எரிபொருளே மிச்சமிருந்தது.

சென்னையிலிருந்து வந்த ஜெட் ஏர்வேஸ் (9W 2357) நிறுவனத்தின் போயிங் 737 விமானமும் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. அது தரையிறங்கும்போது அதில் 13 நிமிடம் பறப்பதற்கான எரிபொருளே மிச்சம் இருந்துள்ளது.

இந்த மூன்று விமானங்களிலும் 450 பயணிகள் இருந்தனர். இந்த மூன்று விமானங்களின் பைலட்டுகளும் இனிமேல் பறக்க முடியாது என்று எமர்ஜென்சி நிலையை அறிவித்த பிறகே, ஜெய்ப்பூரில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில் அன்றைய தினம் 11 விமானங்கள் சண்டீகர், லக்னெள, ஜெய்ப்பூர் ஆகிய விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன. மேலும் 20 விமானங்கள் தரையிறங்க முடியாமல் டெல்லியை சுமார் 1 மணி நேரம் சுற்றிக் கொண்டே இருந்தன.

காலை 9 மணிக்கு ஆரம்பித்த இந்த நெருக்கடி, பிரதீபாவும் மெடோவும் டெல்லியைவிட்டுக் கிளம்பிய 10 மணி வரை தொடர்ந்தது.

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அப்ரோச் ரேடார் எனப்படும், விமானங்களின் இயக்கத்தை கண்டறியும் ரேடார் இல்லை. விமானங்கள் தரும் தகவலை வைத்தே அவற்றின் வேகம், திசையை ஜெய்ப்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தால் அறிய முடியும்.

அத்தோடு அங்கு தூசிப் புயலும், வேகமான காற்றும் சேர்ந்து கொள்ள ஜெய்ப்பூரில் தரையிறங்க விமானங்கள் மிகவும் சிரமப்பட்டன.

இந்தத் தகவல்களை இந்த 3 விமானங்களின் பைலட்டுகளும் தரையிறங்கவுடன் புகாராகப் பதிவு செய்துள்ளனர். எரிபொருள் குறித்து கவலைப்படாமல் திடீரென விமானங்களை வேறிடத்துக்கு போகுமாறு கூறுவது, வானிலேயே சுற்றவிடுவது ஆகியவை குறித்து விமானப் போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் flight safety report-ல் பதிவு செய்துள்ளனர்.

விஐபிக்கள் விமானங்கள் காரணமாக விமான நிலையம் மூடப்படுவது குறித்து முன்கூட்டியே தரப்படும் 'Notam' (notice to airmen) என்ற தகவல் டெல்லிக்கு வரும் வரை தரப்படவில்லை என்று பைலட்டுகள் புகார் கூறியுள்ளனர்.

ஆனால், விஐபிக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 'Notam' தகவல் தருவது நிறுத்தப்பட்டுவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக விஐபி விமானங்களுக்காக 3 நிமிடங்கள் மட்டுமே விமான நிலையம் மூடப்படும். ஆனால், கடந்த புதன்கிழமை ஆக்ராவில் நிலவிய மோசமன வானிலையால் துர்க்மேனி்ஸ்தான் அதிபரின் விமானம் கிளம்புவது தாமதமாகிவிட்டது. இதனால் தான் விமான நிலையம் 1 மணி நேரம் மூடப்பட்டது என்று கூறியுள்ளனர் அதிகாரிகள்.

இஸ்லாம்



இசுலாம் - இறைவன் ஒருவனே

உலகில் இசுலாமியர் பரவல்

Note: இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது.
இசுலாம்

உள்ளடக்கங்கள் சுருக்கமாக
(அரபியில் அல்லாஹ்)
Allah-eser-green.png
அடிப்படை நம்பிக்கைகள்
அல்லாஹ் ரசூல் (சல்)
மலக்குகள் இறைதூதர்கள்
இறை வேதங்கள்
மறுமை கலாகத்ர்
கட்டாயக் கடமைகள்

இறை நம்பிக்கை தொழுகை
நோன்பு ஜக்காத்து ஹஜ்ஜு

இசுலாமிய வரலாறு

இஸ்லாமிய வரலாறு சஹாபா
ரசூத்தீன் கலிபாக்கள்
ஷியா இமாம்கள்

பிக்ஹு அல்லது ஷரியத்

குர்ஆன் ஹதீஸ்

இஸ்லாமிய பிரிவுகள்

சன்னி ஷியா

கலாச்சாரம்

கலை நாள்காட்டி குழந்தைகள்
மக்கள் பரவல் பண்டிகைகள்
மசூதிகள் தத்துவம்
அரசியல் அறிவியல் பெண்கள்

பா தொ

இசுலாம் அல்லது இஸ்லாம் ( الإسلام, அரபு: الإسلام; al-'islām, Islam) என்பது ஏழாம் நூற்றாண்டில் சவுதி அரேபியாவில் தோன்றிய சமயமாகும். இது கிறித்தவம், யூதம் போன்று ஒரு ஆபிரகாமிய சமயம் ஆகும். இச் சமயம் முகம்மது நபி என்பவரால் பரப்பப்பட்டது. இசுலாமின் மூலமான திருக்குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் தொடக்கம் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது. உலகம் முழுவதும் 180 கோடி மக்கள் இச் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். இசுலாம் கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய சமயமாகும்.

சொல்-வேர்

இஸ்லாம் , மூன்று வேர் கொண்ட ஸ்-ல்-ம் கொண்ட ஒரு வினை பெயர் சொல் . அது அராபிய வினைச் சொல் `அஸ்லாமா` விலிருந்து திரிபு ஆகிரது. அஸ்லாமா ஏற்றுக்கொள்ளுதல், சரணடைதல், கீழ்படிதல் முதலிய பொருள்களில் வரும். அதனால் இஸ்லாம் கடவுளை ஒத்துக் கொண்டு சரணடைதல் ஆகும்,; நம்பிக்கையாளர்கள் கடவுளை வணங்கி நம்பிக்கையை காட்டி, அவர் கட்டளைகளை நிறைவேற்றி, பலதெய்வ வணக்கத்தை ஒதுக்க வேண்டும். இஸ்லாம் என்ற சொல் குரானில் பல பொருள்களை கொடுக்கப் பட்டுள்ளது. சில செய்யுள்களில் (ஆயாத்துகள்), இஸ்லாம் உள் மனத்தின் திட நம்பிக்கையாக அழுத்தம் கொடுக்கப் பட்டுள்ளது. ”யாரை கடவுள் மார்கதர்சனம் காட்ட விரும்புகிறாரோ, அவர்களுக்கு கடவுள் தன் மனதை திறக்கிரார்”. மற்ற செய்யுள்கள் இஸ்லாத்தையும் மார்கத்தையும் ஒன்றாக்குகிரன,. “இன்று நான் உன் மார்கத்தை செம்மையாக்கிவிட்டேன்; உன் மீது என் ஆசியை முடிவுற்றேன், உனக்கு இஸ்லாத்தை மார்கமாக ஆக்கினேன்” . சொல்லளவில் மார்கத்தை வறுப்புருத்துவதர்கு மேலே போய், இன்னும் சில செய்யுள்கள் இஸ்லாத்தை கடவுள் பக்கம் திரும்புவதற்க்கு ஈடாக்குகிரன. இஸ்லாமிய சிந்தனையில், இஸ்லாம் இமான் (நம்பிக்கை), இஹ்சான் (செம்மை) உடன் மூன்றாவதாக சொல்லப் படுகிரது. . அது இஸ்லாம் கடவுள் வணக்க செயல்கள் (இபாதாஹ்) மற்றும் இஸ்லாமிய நீதி (ஷரியா) இவற்றை காண்பிக்கிரது .

இசுலாமிய நம்பிக்கை

இசுலாமின் நம்பிக்கையின்படி இந்த பிரபஞ்சத்திலுள்ளவைகள் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டதாகும். மேலும் அடிப்படையில் நம்பிக்கைக் கொள்ள வேண்டிய விடயங்கள் ஆறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவைகளாவன;

இறைவன் ஒருவனே அவனது தூதர் முஹம்மத் (சல்)

அரபு மொழியில் "லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என கூறப்படும் "வணக்கத்துக்குரிய நாயன் ஏக ஒருவனைத் தவிர வேறு இல்லை; முஹம்மது (சல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆகும்" என்பதை உளப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதே இஸ்லாமியர் என்பதற்கான அடிப்படை தகுதியாகும்.இதை உறுதிபட ஏற்றுக்கொண்டவன் திருக்குர்ஆனிலுள்ள ஏனைய மறைவான விடயங்களை ஏற்றுக்கொள்வது கடமையாகிறது.

மலக்குகள்.

மனிதனது புலனுறுப்புகளால் புரிந்து கொள்ள முடியாத, இறைவனது கட்டளைகளை செயல்படுத்துவதற்காக மட்டும் ஒளியைக் கொண்டு படைக்கப்பட்ட சக்திகளை (திருகுர்ஆன் பிரயோகம்மலக்குகள்) நம்புவது.

முன்னைய வேதங்கள்.

முகம்மது (சல்) அவர்களுக்கு முன்னர் வாழ்ந்த இறைதூதர்களுக்கு வேதங்கள் கொடுக்கப்பட்டது உண்மையே என நம்புதல்.

முன்னைய இறைதூதர்கள்.

முன்னர் வாழ்ந்த இறைத்துதர்களை நம்புவது. திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது: அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் நம்முடைய தூதர் வராத எந்தச் சமுதாயத்தினரும் பூமியில் இருக்கவில்லை(திருக்குர்ஆன்: அல்-பாதிர்: 24)இவ்வாறு கூறப்பட்டவர்களில் 25 தூதர்களுடைய பெயர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளன.

இறப்பின் பின் வாழ்க்கை.

இறப்பிற்கு பின்னுள்ள வாழ்க்கையை நம்புவது. திருக்குர் ஆன் பின்வருமாறு கூறுகிறது: இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும். எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை(திருக்குர்ஆன் 16:38.).

விதி.

"கலாகத்ர்" என திருக்குர் ஆனில் கையாளப்பட்டுள்ள இச்சொல் தமிழில் "விதி" என மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் இறைவன் வகுத்த விதியின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன என இதற்கு விளக்கம் தரலாம். இவ்விதி குறித்து திருக்குர்ஆன் கூறும் போது "உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது (இது இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதி). இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான்.(4:79)" என கூறுகிறது. இதன் விளக்கமானது காரணங்களிலாமல் காரியங்களில்லை என்பதாகும் ஆகும். உதாரணம் : ஒருவன் வீதியை கடக்க எத்தனிக்கிறான்; அந்நேரம் குறுக்கே ஒரு வாகனம் வருகிறது. அவன் சிந்தித்து நிதானித்து கடப்பானானால் அவனுக்கு காயம் ஏற்படாது என்பதே விதி. மாறாக, அவனது அறிவு குறைபாட்டினால் வாகனத்தின் முன் செல்வானானால் அவனுக்கு காயம் ஏற்படும் என்பதே விதி.

திருக்குர்ஆன்


திருமறை - குரான்

திருக்குர்ஆன் என்பது முகம்மது நபிக்கு இறைவனால் அருளப்பட்ட வேதம் ஆகும். இதில் உள்ள அனைத்து வாக்கியங்களும், சொல்களும் இறைவனால் கூறப்பட்டவைகள் ஆகும். இதை இறைவன், மலக்குகள் தலைவன் சிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக முகம்மது நபிக்கு அறிவித்தான். குரானே உலகின் உள்ள அனைத்து புனிதங்களுள் புனிதமானது ஆகும்.

கடமைகள்

கடமைகள் என பார்க்கும்பொழுது இஸ்லாம் பல கடமைகளை மக்களுக்கு கொடுத்துள்ளது. இவைகளின் மிக முக்கியமான ஐந்து கடமைகள் இஸ்லாத்தின் ஐந்து தூண்கள் என விளிக்கபடுகின்றன . மற்ற கடமைகள் பொதுவாக ஷரியத் சட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

நம்பிக்கை (கலிமா)


சவூதி அரேபியா நாட்டு கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் இஸ்லாமின் அடிப்படை கலிமா

"இறைவன் ஒருவனே. அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்." என மனதளவில் ஒவ்வொறு முஸ்லிமும் நம்பவேண்டும்.இது இறை நம்பிக்கை (ஈமான் ) என அழைக்கபடுகிறது. இதுவே இசுலாமின் முதல் மற்றும் மிக முக்கியமான கடமை ஆகும். இந்த நம்பிக்கை கொண்ட ஒருவனே இசுலாமியன் ஆகிறான்.

பிரார்த்தனை (தொழுகை)


1865ம் ஆண்டு ஓவியம் - எகிப்து தலைநகர் கெய்ரோவில் தொழுகை புரியும் இசுலாமியர்கள்.

ஒவ்வொரு முஸ்லிமும் தினமும் ஐந்து முறை தொழுகை நடத்த வேண்டும். மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மற்றவர்களுடன் சேர்ந்து கூட்டமாக ஜும்மா தொழுகையை நிறைவேற்ற வேண்டும். நோயாளிகள் , எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தீட்டு பட்ட பெண்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை தொழுகையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

நோன்பு

ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக ரமலான் மாதத்தில் பகல் வேளையில் உண்ணா நோன்பு இருந்தும், இரவில் கண் விழித்து இறைவனை துதித்த வண்ணமும் இருக்க வேண்டும். நோயாளிகள் , எட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், தீட்டு பட்ட பெண்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

தானம் (ஜக்காத் - Jakkath)

ஒவ்வொரு முஸ்லிமும் ஆண்டுக்கு ஒருமுறை தனது மொத்த செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை(௧௦௦ க்கு ௨.௫௫) ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். மொத்த சொத்து 85 கிராம் தங்கத்திற்கும் அல்லது 595 கிராம் வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் ஒருவனுக்கு இந்த கட்டாய தானம் கடமை ஆகாது.

புனித பயணம் (ஹஜ்)


புனித காபா

வசதி வாய்ப்பு படைத்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும், தனது வாழ்நாளில் ஒருமுறை உலகின் முதல் ஆலயமான சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள காபாவை தரிசிப்பது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்ற நான்கு கட்டாய கடமைகளில் இருந்து இதற்கு சற்று தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. சாமானிய மற்றும் நோய்வாயப்பட்ட மக்களுக்கு இந்த கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.பயணம் செய்ய உடல் தெம்பும் பொருளாதாரமும் உள்ளவர்களுக்கே இது கடமை.

மற்ற கடமைகள்

இறைவனை நினைவுகூர்தல்

இசுலாம் தனது மக்களை, தமது வாழ்வில் அனைத்து நிலைகளிலும் இறைவனை நினைவு கூற வழியுருத்துகிறது.நம்மையும் அண்ட சராசரங்களையும்,மற்றும் அணைத்து உயிருள்ள,உயிரற்ற..அசையக்கூடிய,அசையாத படைப்புகளை படைத்து,உணவளித்து,பரிபாலனம் செய்து...வழி நடத்தும் வல்லமை வாய்ந்த இறைவனை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும்,அவன் சதாவும் நம்மை அவதானித்துக் கொண்டிருக்கிறான் என்ற சிந்தனையை..அதன் அச்சப்பாட்டை உள நிறுத்துவது!.. இது மக்களை பாவம் செய்வதில் இருந்து தடுப்பதாக இசுலாம் கூறுகின்றது. இதன்படி ஒவ்வொரு இசுலாமியரும் மற்ற இசுலாமியரை பார்க்கும்பொழுது அஸ்ஸலாமு அலைக்கும் ( உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) என கூறவேண்டும். இவ்வாறே ஒருவர் சந்தோசமாக இருக்கும் பொழுது அல்லாஹு அக்பர் (இறைவன் மிகப்பெரியவன்) என்றும் துக்கமாக இருக்கும்பொழுது இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன் (நாம் இறைவனிடம் இருந்தே வந்தோம், மேலும் அவனிடமே திரும்பிசெல்பவர்களாக இருக்கிறோம்) என்றும் கூற வேண்டும். இவ்வாறு தும்மும்போதும், கொட்டாவி விடும் பொழுதும், பிறருக்கு உதவி செய்யும் பொழுதும், பிறருக்கு நன்றி சொல்லும் பொழுதும் என அனைத்து நிலைகளிலும் இறைவனை நினைக்க வேண்டும். மேலும் பொதுவாக எந்த செயலை செய்ய ஆரம்பிக்கும் பொழுதும் பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருப்பெயரால்) என கூறி ஆரம்பிக்கவேண்டும்.

உணவு மற்றும் உடை

உணவுகளில் விலக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இவை ஹராம் என வழங்கப்படுகின்றன. பன்றி இறைச்சி, குருதி, மாமிசந்தின்னிப் பறவைகளின் இறைச்சி, சாராயம் போன்றவை ஹராமான உணவுகள் ஆகும். பொதுவாக அனைத்து சைவ உணவுகளும், தாவர உண்ணிப் பறவைகளின் இறைச்சியும், மீன் வகைகளும் ஹலால் என அழைக்கப்படுகின்றன. இதற்கு 'அங்கீகரீக்கப்பட்டவை' எனப் பொருளாகும்.

உடைகளைப் பொருத்தவரை ஆண்கள் எளிமையான மற்றும் வெண்மையான ஆடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டனர். மேலும் கைகளில் மணிக்கட்டு வரையும் கால்களில் கணுக்கால் வரையிலும் ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டனர். பட்டாடைகள் அணிவது ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. பெண்களைப் பொருத்த வரையில் அவர்கள் உடல் முழுவதையும் மறைக்கும் படி ஆடை அணிய அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் முகத்தை மறைப்பது கட்டாயமாக்கப்படவில்லை.

வரலாறு

இசுலாமிய வரலாற்றைப் பொருத்தமட்டில், அது முகம்மது நபியால் அறிவிக்கப்பட்ட நாள் முதல் வளர்ச்சியையே கண்டுள்ளது. முகம்மது நபியின் வாழ்நாளிலேயே அது அரேபிய தீபகற்ப்பம் முழுவதும் பரவியது. அவ்வாறு பரவிய அனைத்து இடங்களும் முகம்மது நபியின் ஆட்சியின் கீழ் வந்தது. இது தவிர மற்ற பகுதிகளிலும் இசுலாம் பரவ தொடங்கியது. முகம்மது நபிக்கு பிறகு வந்த ரசூத்தீன் கலிபாக்கள், உமய்யா கலிபாக்கள், அப்பாசிய கலிபாக்கள், ஒட்டாமன் பேரரசு மற்றும் பல இசுலாமிய பேரரசுகளின் காரணமாக இசுலாம் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவியது. இந்த இடைப்பட்ட காலங்களில் இசுலாம் தனது புகழ்நுனியை அடைந்தது. இதன் பிறகு ஐரோப்பிய காலணி ஆதிக்கங்களின் காரணமாக ஒட்டாமன் பேரரசு மற்றும் மொகலாய பேரரசுகல் வீழ்ச்சியை சந்தித்தன. இது இசுலாமிய வளர்ச்சியில் ஒரு தேக்கத்தை ஏற்படுத்தியது. இதன் பிறகும் 20ம் நூற்றாண்டில் இசுலாம் தனக்கான தனித்தன்மையோடு தொடருகின்றது.

குடும்பமுறை

குடும்பங்களை பொருத்த மட்டில் கணவனே குடும்ப தலைவன் ஆவான். குடும்பத்தின் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வது அவனது கடமை ஆகும். மனைவி அவனது உரிமையில் நிகரானவலாக இருக்கிறாள். ஒரு ஆண் அதிகப்பட்சம் நான்கு மனைவிகளை திருமணம் செய்யலாம். ஆனால் அதர்க்கு முன்பு அவன் நான்கு பெண்களையும் மனதளவிலும், பொருளாதார அளவிலும் சமமாக நடத்தும் பக்குவமும், வசதியும் பெற்றிருக்கவேண்டியது கடமையாகின்றது. ஆனால் பெண் ஒரு நேரத்தில் ஒரே கணவனுடன் வாழ மட்டுமே அனுமதி உள்ளது. மேலும் விதவை மறுமணமும் அங்கீகரீக்கப்பட்டுள்ளது

இசுலாமியப் பிரிவுகள்

இசுலாம் மதம் பொதுவாக சன்னி மற்றும் சியா என்ற இரண்டு பெரும் பிரிவாக உள்ளார்கள். இதை தவிர சுஃபி போன்ற சில பிரிவுகளும் உள்ளன.

சன்னி இசுலாம்

சன்னி இசுலாம், இசுலாமிய பிரிவுகளில் உள்ள மிகப்பெரிய உட்பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 85 சதவிகிதத்தை கொண்டுள்ளது. சன்னி என்பதற்கு அராபிய மொழியில் 'முகம்மதை பின்பற்றுதல்' என்று அர்த்தமாகும்.இராக் மற்றும் இரான் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இசுலாமியர்கள் வாழ் நாடுகளிலும் சன்னி இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. இந்த பிரிவு தன்னகத்தே மேலும் நான்கு உட்பிரிவுகளை கொண்டுள்ளது. ஃஅனபி, சாபி, மாலிக்கி மற்றும் ஃஅம்பிலி என்ற இவைகள் மத்ஃகப்புகள் என அழைக்கப்படுகின்றன. மற்ற பிரிவுகளைவிட சன்னி இசுலாமே, தீவிரமாக இசுலாமிய கொள்கைகளை பின்பற்றுகின்றது.

சியா இசுலாம்

சியா இசுலாம், இசுலாமிய பிரிவுகளில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய உட்பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் சதவிகிதத்தை கொண்டுள்ளது. இராக், இரான் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த பிரிவு, மற்ற இசுலாமிய நாடுகளிலும் கணிசமான அளவில் இருக்கின்றது. சியா இசுலாம் தன்னகத்தே அனேக உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 'பன்னிருவர் பிரிவு' முதன்மையாக உள்ளது. இதை தவிர இசுமாலி, செய்யதி போன்ற பிரிவுகளும் கணிசமான அளவில் உள்ளன. பன்னிருவர் பிரிவின் அனேக நடைமுறைகள் சன்னி இசுலாம் முறையுடன் ஒத்துப்போகின்றன.

சுஃபியிசம்

சுஃபியிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். மற்ற பிரிவுகளில் இருந்து மாறுபட்டு மிகவும் மாறுபட்ட சுதந்திர உணர்வை கொண்டவர்கள் இவர்கள். தனியே தங்களுக்கான சட்டங்கள், பிரார்த்தனை முறைகள் ஆகியவற்றை கொண்டிராத இவர்கள், பொதுவாக சன்னி மற்றும் சியா இசுலாம் முறைகளையே பின்பற்றுகின்றனர்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள் என்று பார்க்கும்பொழுது பொதுவாக எல்லோராலும் சில செயல்கள், நிகழ்வுகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமானவை தீவிரவாதம், பெண்ணடிமைவாதம் ஆகியவை ஆகும். பொதுவாக மேலோட்டமாக பார்க்கும் பொழுது, இசுலாம் மேற்கூறிய இந்த செயல்களை ஆதரிப்பது போல் தோன்றும். ஆனால் எல்லா மதங்களை போலவே இசுலாமும் இவற்றை தீவிரமாக எதிர்க்கிறது. தீவிரவாதத்தை பொருத்தவரை, அது சில இக்கட்டான சூழ்நிலைகளில் எகாதிபத்திய சக்திகளை எதிர்த்து தோன்றியது. எடுத்துக்காட்டு இசுரேல்-பாலசுத்தீனம் சிக்கல். ஆனால் இந்த போராட்டங்கள், சில பழமைவாதிகளின் தலைமையின் கீழ் செல்ல ஆரம்பித்த பொழுது அது தீவிரவாதமாக மாறியது. பொதுவாக ஆப்கானிசுத்தான், பாக்கிசுத்தான், இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் இசுலாமியர்களின் வறுமையும், அறியாமையும் அவர்களை தீவிரவாதத்தின் பக்கம் செலுத்துகின்றன. பாபர் மசூதி இடிப்பு, அமெரிக்காவின் இராக்கிய மற்றும் ஆப்கானிய ஆக்கிரமிப்பு, இசுரேல் சிக்கல் போன்றவையும் இந்த மக்கள் தீவிரவாதத்தின் பக்கம் சாய காரணங்களாக ஆகின. ஆனால் இசுலாம் இதை போன்ற தீவிரவாத செயல்களை, குறிப்பாக வெடிகுண்டு வைத்து அப்பாவிகளை கொள்ளுதல், தற்கொலைப்படை தாக்குதல் ஆகியவற்றை வன்மையாக எதிர்க்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, இசுலாமின் முதல் போரானா பத்ரு போரை கூறலாம். இந்த போரில் தாங்கள் தோற்றால் இசுலாம் மதமே அழிந்துவிடும் என்ற இக்கட்டான நிலையிலும், முகம்மது நபி தங்கள் படை வீரர்களுக்கு (அதுவரை மிகவும் கொடூரமாக போர் புரிந்துவந்தவர்களுக்கு) கீழ்க்கண்ட முக்கியமான கட்டளைகளை பிறப்பித்தார்கள்.

  • பெண்கள், குழந்தைகளை வயதானவர்களை எந்த இக்கட்டான நிலையிலும் கொல்லக்கூடாது.
  • மரங்களை வெட்டக்கூடாது
  • நீர்நிலைகளை நாசப்படுத்த கூடாது.
  • சரணடைந்தவர்களை கொல்லவோ, துன்புறுத்தவோ கூடாது

மேற்கூறிய இந்த கட்டளைகளை பத்ரு போரில் மட்டும் அல்லாது அதன் பிறகு நடந்த அனைத்து போர்களிலும் முகம்மது நபி அவர்கள் கடைப்பிடித்தனர். மேலும் இவற்றையே இசுலாமின் போர் சட்டங்களாகவும் அறிவித்தார். இது ஒன்றே இன்றைய தீவிரவாதத்திர்க்கும், இசுலாமுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை காட்டுகின்றது. மேலும் தற்கொலை செய்வதும் இசுலாமில் மிகப்பெரிய பாவமாக சொல்லப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு என்றால் இறைவனுக்கு இணை வைக்கும் அளவுக்கு சமமான மன்னிப்பே இல்லாத பாவமாக கூறப்பட்டுள்ளது. ஒரு போரில் மிகவும் காயம் பட்டு, வலி தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் இறுதி பிரார்த்தனையில் கலந்துகொள்ள மறுத்த முகம்மது நபி 'அவர் நரகத்திர்க்கே செல்வார்' என்றும் கூறினார். பெண்ணடிமை என்பதும், சில பழமைவாதிகளால் பரப்பப்பட்டதே ஆகும். இசுலாம் ஆணுக்கு நிகரான உரிமையை பெண்ணுக்கும் கொடுத்துள்ளது. பெண்கள் உடல் மறையும்படி ஆடை உடுத்துவது, ஒரு கணவன் ஒரே நேரத்தில் நான்கு பெண்களை மணப்பது ஆகியவற்றைத் தவித்த அநேக பழக்கங்கள் (பெண்கல்வி மறுப்பு, முத்தலாக் முறை) இசுலாம் ஆதரிக்காத விசயங்களே ஆகும்.

முகம்மது நபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(முஹம்மது நபி இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இவர் கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார். இவரது 40 வது வயதில் இறை தூதுகள் கிடைத்தன். அதன் பின்னர் அவர்கள் வாழ்ந்த மிகக் குறுகிய காலமாகிய 23 ஆண்டுகளிலேயே மனித வாழ்வில் வியத்தகு மாற்றங்களை நிகழ்த்திகாட்டினார்கள். இவரைப்பற்றி பிரிட்டானிகா கலைகளஞ்சியம் 'மதத்தலைவர்களில் தலை சிறந்த வெற்றியாளர்' என்று கூறுகிறது.

உலக சரித்திரத்தில் இவருடைய வரலாறே நுணுக்கமான பகுத்தாய்வுகளுடன் மிக அதிகமான நம்பகத்தன்மை வாய்ந்த ஆதாரங்களுடன் தொகுக்கப்பட்டதாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த வரலாறே ஹதீஸ் என்பதாக அழைக்கப்படுகிறது.

சிறப்புகள்

இவரது சிறப்பம்சமாக இவரை கடுமையாக எதிர்த்தவர்கள் கூட இவரது புதிய கருத்துக்காக இவரை கொல்லவும் படைஎடுத்தார்களே தவிர இவரை பொய்யர் என்று நிரூபிக்க முனையவில்லை என்பதை குறிப்பிடலாம்.

இஸ்லாமிய வரலாற்றை ஆராயும், போது இவரை உக்கிரமாக எதிர்த்த அபூஜஹில் கூட

முஹம்மதே நீர் ஒரு பொய்யர் என்று நான் கூறவில்லை; நீர் பிரச்சாரம் செய்யும் இச்செய்தி உண்மையானதல்ல என்றே நான் கருதுகிறேன்

என்று கூறியதாகவும் அறிய முடிகிறது.

மற்றொரு கடும் எதிர்ப்பைக்காட்டிய குறைஷித் தலைவன் அபுஸுப்யான் ஒரு முறை இஸ்லாத்தை பின்பற்றுவோருக்கு எதிரான தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி உரோமப் பேரரசன் ஹிராக்ளியசின் (Heraclius) அவைக்கு சென்ற போது

முகம்மத் எப்போதும் பொய் பேசியதில்லை, தாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றிட ஒரு போதும் தவறியதுமில்லை

என்று கூறியதாகவும், இதனைக்கேட்ட ஹிராக்ளியஸ்

மனிதர்களுக்கிடையிலான விவகாரங்களிலேயே பொய் பேசியதில்லை என அனுபவபூர்வமாக தெரிந்து விட்ட பிறகு இவ்வளவு பொய்யை புனைந்திருப்பார் என்று எப்படிச் சொல்ல முடியும்?

என்று அவரை கேட்டதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

இன்னும் முஸ்லிம்களின் திருக்குர்ஆன் இவரை 'முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல உலக மனிதர்கள் அனைவருக்குமாக அனுப்பப்பட்டவர்' என்பதை இப்படி கூறுகிறது.

(நபியே! ) உம்மை (உலக) மக்கள் அனைவருக்கும் இறைத் தூதராகவே நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவராவும் (பாவங்கள் குறித்து ) அச்சுறுத்தி எச்சரிக்கை செய்பவராகவும் (,அனுப்பியுள்ளோம்.) (34:28)



இறைத்தூது கிடைக்கும் முன்


தந்தையை காணும் பாக்கியம் பெறாத தம் அன்பு பேரனுக்கு பாட்டனார் அப்துல் முத்தலிப் "முஹம்மது"(புகழ்பெற்றவர்) என பெயர்ச்சூட்டினார்.

இறைத்தூது கிடைத்த ஆரம்ப காலங்கள்.


தனது 40 வது வயதிலேயே இறை அழைப்பு பணி தமக்கு கிடைக்கப்பெற்றதும் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது சமூகத்தினரை 'ஸபா' மலைக்குன்றின் அருகே முதல் முறையாக ஒன்று திரட்டினார்கள். ஸபா மலை மீது ஏறி நின்ற அவர் தனக்கு முன்னால் நிற்கும் மக்களைப் பார்த்துக் கேட்கிறார்:

இந்த மலையின் பின்னால் உங்களைத் தாக்க ஒரு படை

நிற்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

மக்கள்: ‘ஆம், நம்புவோம்’

முஹம்மத்: ‘ஏன் நம்புவீர்கள்’

மக்கள்: ‘ஏனெனில் நீர் பொய் சொன்னதில்லை’

முஹம்மத்: ‘அவ்வாறாயின் இவ்வுலகுக்குப் பின்னால் வரும் இன்னொரு வாழ்வு பற்றியும் அங்கு காத்திருக்கும் தண்டனைப் பற்றியும் நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.’

- (ஆதாரநூல்: ரஹீகுல் மக்தூம்)


"உங்களால் மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாது. எனவே மலையின் மீது நிற்கும் என்னால் பார்க்க முடியும் என்பதாலும் , என் மீதிருக்கும் நம்பிக்கையாலும் என்னை நம்புகிறீர்கள்.அது போலவே மறைவான உலகுக்கும் உங்களுக்கும் இடையே நான் நிற்கிறேன்.அவ்வுலகோடு நான் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை நம்புவீர்களாயின் நான் சொல்லும் அவ்வுலகையும் நம்புங்கள்"

இதுதான் முஹம்மத் அவர்களது நிறுவலாக இருந்திருக்க வேண்டும்.


உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ் சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே.

M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978, pp.33)


உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும் தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முகம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாயதக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவ முடிந்தது. ஆனால் முகம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின் போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகபற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள் அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிட வில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலை நாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.

- அல்போன்சு டி லாமார்ட்டின் - Historie de la Turquie, Paris, 1854, Vol II,pp 276-277)


மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும் போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத்தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணி காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல.

- மகாத்மா காந்தி - (Young India)


சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்ச்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த- ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ

- Thomas_Carlyle, Heroes_and_Hero_Worship


அவர்கள் எந்த நபித்துவ அந்தஸ்த்து தமக்குரியது என்று முதன் முதலாக வாதிடத் தொடங்கினார்களோ அதே அந்தஸ்த்தைதான் தமது ஆயுட்காலத்தின் இறுதியிலும் அவர் உரிமை கொண்டாடினார். முகம்மதை உண்மையான இறை த்தூதர் என்கிற அவரது வாதத்தை ஏற்றிட ஒவ்வரு வரும் சம்மதிப்பார்கள் என்று தைரியமாக நான் நம்புகிறேன்.

திருக்குர்ஆன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருக்குர்ஆன் இறைத்தூதர் முகம்மது நபி அவர் மூலமாக இறைவனால் அருளப்பட்டதாக முஸ்லிம்களால் நம்பப்பட்டு முஸ்லிம்களின் மூல சட்ட நூலாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

திருக்குர்ஆன் அருளப்பட்ட முறை .

இத் திரு வசனங்கள் பகுதி பகுதியாக கால சூழ்நிலைக்கேற்பவே இறக்கப்பட்டது. ஹிரா குகையில் தங்கியிருக்கும் முஹம்மது ஸல் அவர்களுக்கு இறைவன் ஜிப்ரீல் என்னும் வானவர் மூலமாக குர்-ஆன் வசனங்களை இறக்கி அருளினான். அதாவது ஜிப்ரீல் எனும் வானவரிடம் இறைவன் கூறுபவற்றை அந்த வானவர் முஹம்மது நபியிடம் அறிவிப்பார்.. முதலாவது வசனமாக சூரா அலக்கின் 5 வசனங்கள் இறக்கப்பட்டது.

அன்று முதல் 23 வருடமாக இறக்கப்பட்டு மனதில் பதியப்பட்டது. இது முற்றிலும் இறைவனது வசனங்கள் ஆகும்.

எனினும் இது மனதில் இருந்து மறைந்து விடும் என்று கருதிய நபியவர்கள், தமது தோழர்களுக்கும் இதனை கற்றுக்கொடுத்தார்கள். மிருகங்களின் தோல், எலும்புகள், ஈத்தம்பழம் விதை போன்றவற்றில் எழுதி வைக்கப்பட்டது.

நபியவர்களின் மரணத்தின் பின்பு ஆட்சியை பெற்ற கலீபா(அரசன்) அபூபக்கர் அவர்களின் காலத்தின் ஏற்பட்ட யமாமா யுத்தத்தில் குர் ஆனை மனமிட்ட பலர் உயிர் பிரிந்தனர். ஆதலால் கல்வி ஞானமுடையவர்கள் பயமுற்று தொகுக்க எண்ணினர். பின்பு உமர் அவர்களின் உபதேசதிர்ற்கு அமைய இது புத்தகங்களிலும், தோள்களிலும் தொகுக்கப்பட்டது.

தொகுக்கப்பட்டவை அப்சா(ரலி) அவர்களால் பாதுகாக்கப்பட்டது. பின்பு உஸ்மான் அவர்களின் ஆட்சியில் இஸ்லாமிய பிரச்சாரங்களின் பின்பு அக்கால மக்களால் மனனமிடப்பட்டது. அத்தோடு இதன் பிரதிகளும் அச்சிடப்பட்டு வினியோகிக்கபட்டது.

திருக்குர்ஆனினது முக்கிய சிறப்பு

அன்றைய மக்கள் "இது இறைவாக்கல்ல முஹம்மத் குர்ஆனை புனைந்துரைத்துக்கொண்டிருக்கிறார்" என்று மறுத்துரைத்து பேசியதை குர்ஆனே இவ்வாறு கூறுகிறது

(நபியே,) இவர்கள் இந்த குர்ஆன் முழுதையும் அவர் மீது ஒரேதடவையில் இறக்கப் பட்டிருக்க வேண்டாமா? எனக்கேட்கிறனர், இவ்வாறு சிறிது சிறிதாக இறக்கியதெல்லாம் உமது இதயத்தை திடப்படுத்துவதற்கே'

- (திருக் குர்ஆன்-25:32)

என்று காரணம் கூறியதோடு நின்று விடாமல் உலகிற்கு விட்ட மெய் சிலிர்க்கச்செய்யும் சவாலே ஐரோப்பியர்களான கீழைதேயவாதிகளை அரபி மொழியில் பாண்டித்தியம் பெற வைத்ததையும் ; வரலாற்றாசிரியர்கள், அறிஞர்களை எல்லாம் குர்ஆனை ஆழமாக ஆராயவும் வழியேற்படுத்திக் கொடுத்தையும் காணலாம். இருந்தும் கூட 1400 ஆண்டுகளாக இன்று வரை உலக அறிஞர்களால் இச்சவாலை முறியடிக்க முடியவில்லை என்பதே திருக்குர்ஆனின் சிறப்பம்சமாக கொள்ளப்படுகிறது. இச்சவால் நான்கு தடவைகளில் எதிர்த்தவர்களுக்கு சார்பாக மிகவும் தாழ்ந்து சென்றுள்ளதையும் அவதானிக்க்க முடிகிறது.

  • 01.இந்த குர் ஆனைப்போல ஒன்றை கொண்டு வருவதற்காக, அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலு கூட இது போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர முடியாது. - (திருக் குர்ஆன்-17:88)

என்று சவாலை முதலில் தொடங்கும் திருக்குர்ஆன், பின்னைய காலத்தில்

  • 02.அல்லது இவ்வேதத்தை அவர்(முஹம்மத்) பொய்யாக கற்பனை செய்து கொண்டார். என்று அவர்கள் கூறுகிறார்களா?அப்படியானால் நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள். நீங்கள் உண்மையாளராக இருந்தால், அல்லாஹ்வை தவிர உங்களுக்கு சத்தியமான அனைத்தயுமே துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள் - (திருக் குர்ஆன்-11:13)

என்பதாக பணிந்து வந்த பின்னும் கூட இலக்கியத்தில் பெரும் புலமை கொண்டிருந்த அக்கால அரபிகளால் முடியாது போனதையும் அதனால் திருக்குர்ஆன் மீண்டும்,

  • 03. இன்னும் (முஹம்மத் ) என்ற நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகமுடையோராக இருந்தால் (சந்தேகத்தில் )உண்மையுடையோராகவும் இருந்தால் அல்லாஹ்வை த்தவிர உங்கள் உதவியாளர்களை ( மொத்தமாக) அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.- (திருக் குர்ஆன்-2:23)

என்பதாகவும் இறுதியாக,

  • 04. ஆகவே, (எழுத, வாசிக்கத்தெரியாத நீர் இட்டுக்கட்டினீர் எனக்கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியையேனும்(வசனத்தையேனும்) அவர்கள் கொண்டு வரட்டும். - (திருக் குர்ஆன்-52:34)

எனவும் கேட்டு தனது பேராற்றலின் முன் இலக்கியவாதிகளை மொத்தமாக மண்டியிட வைத்ததை காணக் கிடைக்கிறது.மொத்தமாக 6666 வசனங்கள் கொண்ட குர்ஆனில் ஒரு வசனத்தையேனும் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்தான் என்ன என்பதை அறிய, கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகம் மூலம் அரபிலக்கியத்தில் புலமைப் பெற்ற மேற்கத்திய அறிஞர் ஆர்தர் ஜே. ஆர்பெர்ரியின் கூற்று உதவுகிறது

குர்ஆனுடைய கருத்துகளை வெளிக்கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்சிகளை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன். ஆனால் அரபு மொழியில் குர்ஆனில் இருக்கும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிக குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத்துல்லியமாக பின்னிப் பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன். குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதையுமுணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச்செய்கிறன. குர்ஆனின் இந்த வினோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது. அதனுடைய ஓசை நயமே மக்களின் கண்களை கசியச்செய்கிறது. உள்ளங்களைப் பரவசமடையச்செய்கிறது.

[Arthur J. Arberry, The Koran Interpreted, London: Oxford University Press, 1964, p. X.]

மற்றொரு பிரபல ஜெர்மனிய அறிஞர் கொய்தே (Johann Wolfgang von Goethe) இவ்வாறு கூறுகிறார்.

குர்ஆனை எத்தனை முறை பார்த்தாலும் அது முதலில் அன்னியமாக தெரிகிறது; பிறகு புதுமையாக தெரிகிறது; அடுத்து ஒரு தென்றல் போல் மனதை கவர்ந்து செல்கிறது; மதிப்பச்சத்தை ஏற்பத்த்துகிறது- அதனுடைய நடையழகு அதனுடைய கருத்துக்கு ஏற்ப கம்பீரமாகவும் வலுவானதாகவும், அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் அதன் மீது மதிப்புக் கொள்ளச்செய்வதாகவும் உள்ளது. இந்த நூல் இவ்வாறு காலங்காலமாக மக்கள் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடியதாக இருக்கின்றது.

[Goethe, quoted in T.P. Hughes' Dictionary of Islam, p. 526.]

இவ்வாறான சிறப்புகளுடன், குர்ஆஆனினது அறைகூவல் 1400 ஆண்டுகளாக இன்று வரை உலக மக்களை நோக்கி விடுக்கப்பட்டுக் கொண்டே வருவதாகவும்; பல நூற்றாண்டுகளாக அரபிலக்கியம் கற்க படையெடுத்த கீழைத்தேயவாதிகளாலும், மற்றும் எகிப்து, சிரியா, லெபனான், ஈராக், சூடான் என பலநாடுகளில் இலட்சகணக்கில் வாழும் முஸ்லிமல்லாத அரேபிய அறிஞர்களாலும் இச்சவாலை இன்று வரை முறியடிக்க முடியவில்லை என்பதும் வரலாறாகியிருக்கிறது.

திருகுர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம். திருகுர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும் முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபி அவர்களால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர்.

அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.

(அல்குர்ஆன் 69:44)

அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், 'இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்' என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்' என்று (நபியே!) நீர் கூறுவீராக.

(அல்குர்ஆன் 10:15)

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) 'நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்' என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16:101)

இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: 'நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!' என்று.

(அல்குர்ஆன் 10:37-38)

அல்லது 'இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்' என்று அவர்கள் கூறுகிறார்கள்? '(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்' என்று (நபியே!) நீர் கூறுவீராக.

(அல்குர்ஆன் 11:13)

(நபியே! நீர் இதைக் கூறும் போது:) 'இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்' என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: 'நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்¢ நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.'

(அல்குர்ஆன் 11:35)

முரண்பாடின்மை

முகம்மது நபி அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து 'அதை இறைச் செய்தி' என மக்களிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைக்கக்கூடும். முகம்மது நபி அவர்கள் தாமாக உருவாக்கி இதைக் கூறியிருக்க முடியாது என்பதற்கு ஏற்கத்தக்க நியாயமான பல காரணங்கள் உள்ளன. பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒரு நாள், இரண்டு நாட்கள் வேண்டுமானால் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக்கணக்கில் பேசிட இயலாது.

எந்த மாபெரும் அறிஞரின் ஐந்து வருடப் பேச்சுக்களை ஆய்வு செய்தாலும் ஏராளமான விசயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும்.

• முன்னர் பேசியதை மறந்து விடுதல்! • முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்! • கவலை, துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக போதுமான கவனமின்றி பேசுதல்!

  • யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்!

• வயது ஏற ஏற மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்! • விளைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்! மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதனுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாத ஒரே ஒருவரைக் கூட காண முடியாது. ஆனால் திருக்குர்ஆனை முகம்மது நபி அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதித்தார்கள். இது அவர்களின் சொந்தக் கற்பனையாக இருந்திருந்தால், 23 வருடப் பேச்சுகளில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனில்; முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை. மேலே சுட்டிக் காட்டிய பலவீனங்கள் எதுவுமே இல்லாத ஏக இறைவனின் வார்த்தையாக இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க முடியும். இறைவனிடமிருந்து வந்ததால்தான் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக்குர்ஆன் அறைகூவல் விடுகிறது. அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82 )

மிக உயர்ந்த தரம்

திருக்குர்ஆனை முகம்மது நபி அவர்கள் இறைவனின் செய்திகள் என்று அறிமுகம் செய்தார்கள். இறைவனின் செய்திகள் என்றால் அது மனிதர்களின் செய்திகளைப் போல் அல்லாமல் அனைத்து வகையிலும் அனைத்தையும் மிஞ்சும் வகையில் அமைந்திருக்க வேண்டும்.

திருக்குர்ஆன் இப்படி அமைந்துள்ளதா என்றால் அரபுமொழி அறிந்த முஸ்லிம் அல்லாதவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்தால் கூட மனிதனால் எட்ட முடியாத உயர்ந்த தரத்தில் அது அமைந்திருப்பதை அறிந்து கொள்வர்.அரபு மொழியின் மிக உயர்ந்த இலக்கியமாக திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகளாக மதிக்கப்பட்டு வருகிறது.மாபெரும் இலக்கியங்களில் பொய்களும், மிகையான வர்ணனைகளும் அவசியம் இடம் பெற்றிருக்கும். ஆனால் திருக்குர்ஆனில் பொய் இல்லை! முரண்பாடு இல்லை! ஆபாசம் இல்லை! மிகையான வர்ணனைகள் இல்லை! கற்பனைக் கலவை இல்லை! நழுவுதலும் மழுப்புதலும் இல்லை! மன்னர்களையும், வள்ளல்களையும் மிகைப்படுத்திப் புகழுதல் இல்லை!

இலக்கியத்திற்குச் சுவையூட்டும் இந்த அம்சங்கள் அனைத்தையும் அடியோடு நிராகரித்துவிட்டு உண்மைகளை மட்டுமே மிக உயர்ந்த இலக்கியத் தரத்துடன் திருக்குர்ஆன் பேசியிருப்பது, அன்றைய இலக்கிய மேதைகளையும் பிரமிப்புடன் பார்க்க வைத்தது. இன்று வரை அந்த பிரமிப்பு நீடிக்கிறது.

இவ்வளவு உயர்ந்த இலக்கியத் தரத்தில் முஹம்மது நபி அவர்கள் ஒரு நூலை இயற்ற வேண்டும் என்றால் அவர் மாபெரும் பண்டிதராகவும், அரபு மொழியில் கரை கண்டவராகவும், அவருக்கு முந்தைய இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவராகவும் இருந்திருக்க வேண்டும்.

ஆனால் முகம்மது நபி அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பது ஆச்சரியமான உண்மை.

அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம்.

(அல்குர்ஆன் 29:48)

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.

(அல்குர்ஆன் 7:157) அரபு மொழிப்பண்டிதராக இல்லாத, முந்தைய இலக்கியங்களை வாசிக்கவும் தெரியாத முஹம்மது நபி அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தால் அது எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் திருக்குர்ஆன் இல்லை. அரபு மொழிப் பண்டிதர் கற்பனை செய்தால் எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்திலும் இல்லை. மாறாக பல நூறு மடங்கு உயர்ந்த தரத்தில் இருக்கிறது. எனவே இது இறைச் செய்தியாகத் தான் இருக்க முடியும்.

படிக்காதவர்களுக்கும் புரியும் ஒரே இலக்கியம்

பொதுவாக ஒரு நூல் எந்த அளவுக்கு உயர்ந்த இலக்கியத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்படும்.மிக உயர்ந்த இலக்கியங்கள் எந்த மொழியில் இருந்தாலும் அம்மொழியின் பண்டிதர்கள் மட்டும்தான் அதைப் புரிந்து கொள்ள முடியுமே தவிர அம்மொழி பேசும் சாதாரண மக்களுக்கு அவை புரியாது. சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் ஒரு நூல் இருந்தால் நிச்சயமாக உயர்ந்த இலக்கியத்திற்குரிய அம்சங்கள் ஏதுவும் அந்த நூலில் இருக்காது.

ஆனால் திருக்குர்ஆன் அரபு மொழியைப் பேச மட்டுமே தெரிந்த மக்களுக்கும் புரிந்தது. பண்டிதர்களையும் கவர்ந்தது. அரபு மொழியில் உள்ள எண்ணற்ற இலக்கிய நூல்களை இன்றைய அரபுகளில் பலரால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அரபு மொழி பேசும் ஒவ்வொருவரும் குர்ஆனைப் புரிந்து கொள்கிறார்.

இன்றைக்கும் கூட எந்த மனிதனாலும் இத்தகைய அம்சத்தில் ஒரு நூலை இயற்றவே முடியாது. எந்த மனிதருக்கும் இயற்ற இயலாத ஒரு நூலை மக்களிடம் முன் வைத்துத் தான் 'இது இறை வேதம்' என்று முஹம்மது நபி அவர்கள் வாதிட்டார்கள். குர்ஆன் முஹம்மது நபி அவர்களின் கற்பனை அல்ல என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

இசை நயம்

எந்த இலக்கியமானாலும் அதில் ஒசை அழகும், இசை நயமும் கிடைக்க வேண்டுமானால் அதனுடைய சீர்களும் அடிகளும் ஒழுங்கு முறைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இருப்பதால் தான் அவற்றில் இசை நயத்தை நாம் உணர்கிறோம்.ஆனால் திருக்குர்ஆனில் ஒழுங்கு முறைப் படுத்தப்பட்ட அடிகள் இல்லை. மாறாக உரைநடை போலவே அதன் வசனங்கள் அமைந்துள்ளன. அவ்வசனங்களிலும் குறிப்பிட்ட அளவிலான சொற்கள் இடம் பெறவில்லை. மாறாக சில வசனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும், சில வசனங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வார்த்தைகளும், சில வசனங்களில் பத்து வார்த்தைகளும்,சில வசனங்களில் ஐந்து வார்த்தைகளும் இருக்கும். ஒரு வார்த்தையே வசனமாகவும் இருக்கும்.இப்படி அமைந்துள்ள எந்த நூலிலும் இசை நயம் அறவே இருக்காது. ஆனால் எதில் இசை நயத்தை மனிதனால் கொண்டு வர இயலாதோ அந்த நடையில் மனித உள்ளங்களை ஈர்க்கும் இசை நயம் திருக்குர்ஆனுக்கு மட்டுமே இருக்கிறது. அரபு மொழி தெரியாத மக்களும் கூட அதன் இசை நயத்துக்கு மயங்குகின்றனர். இசை நயத்துக்கு எதிரான ஒரு முறையைத் தேர்வு செய்து அதற்குள் இசை நயத்தை அமைத்திருப்பது இது முஹம்மது நபியால் கற்பனை செய்யப்பட்டது அல்ல என்பதற்கு மற்றொரு சான்று.

காலத்தால் முரண்படாதது

• முகம்மது நபி அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள். இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை. இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு தான் பெரிய மேதையாக இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும். இதற்கு காரணம் நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்: என்னென்ன கண்டு பிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது. பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை. • திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது. பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியியல் மற்றும் வானியல் குறித்து பேசும்போது, இந்த நூற்றான்டின் மாமேதையும் வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.

• அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் எனப் பல விசயங்களைக் குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதை விட அழகாகப் பேசுகிறது.

தாவரங்களைப் பற்றிப் பேசினாலும், மலைகளைப் பற்றிப் பேசினாலும், நதிகளைப் பற்றிப் பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை.

• அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பல விசயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.

• இன்று வாழும் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திக்கும் யாரும் இது முகம்மது நபி அவர்களின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

• அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.

• ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்டமேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முகம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முகம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.

• அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு ஏற்கத் தக்க அற்புதமான தீர்வுகளைக் குர்ஆன் கூறுவதும் இது முகம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.

குலம், கோத்திரம், சாதி இவற்றால் ஏற்படும் தீண்டாமை ஆகியவை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளாக உள்ளன. இந்த சிக்கலான பிரச்சனைக்கும் மிக எளிதான தீர்வை வழங்கி இவற்றை திருக்குர்ஆன் அடியோடு ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம். முகம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவையாவும் ஆதாரங்களாக உள்ளன. எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இது போல் ஒரு அத்தியாயத்தையாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று குர்ஆன் அறை கூவல் விடுகிறது. பார்க்க அல்குர்ஆன் 2:23, 10;:38, 11:13, 17:88, 52:34)

இந்த அறைகூவல் 14 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர் கொள்ளப்படவில்லை. யாராலும் எதிர் கொள்ளப்பட முடியாது எனவும் குர்ஆன் முன்கூட்டியே திட்டவட்டமாக அறிவிக்கிறது.

முகம்மது நபியவர்கள் இறைவேதம் என்று அறிமுகப்படுத்திய குர்ஆனை விட பல மடங்கு அதிகமாகப் பேசியுள்ளனர். இறைத்தூதர் என்று தம்மை அறிவித்த பின் அவர்கள் வாழ்ந்த 23 வருடங்களில் பேசிய பேச்சுகள் பாதுகாக்கப் பட்டுள்ளன.

அந்தப் பேச்சுக்களையும், குர்ஆனையும் எந்த மொழியியல் அறிஞர் ஆய்வு செய்தாலும் இரண்டும் ஒரே நபரின் கூற்றாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுவார். இரண்டுக்குமிடையே இலக்கியச் சுவையிலும், நடையிலும் பெரிய வேறுபாட்டைக் காண்பார்.

முகம்மது நபி அவர்களின் வழக்கமான பேச்சுக்கு மாற்றமாகவும், அதை விடப் பன்மடங்கு உயர்ந்தும் நிற்கின்ற அதன் அழகே இறை வேதம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

முகம்மது நபி அவர்கள் இதைக் கூறியிருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளும் ஆய்வாளர்கள், யூத கிறித்தவ சமுதாய மக்களின் வேதங்களிலிருந்து கற்று இவர் கூறுகிறார் எனக் கூறியதுண்டு. இன்றைக்கும் கூட சில கிறித்துவ நண்பர்கள் இவ்வாறு கூறுவதுண்டு.

ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன் வாழ்ந்த ஆதாம், நோவா, மோசே, யோவான், யோபு, தாவீது, ஸாலமோன், இயேசு போன்ற பல்வேறு இறைத் தூதர்கள் பற்றி யூத கிறித்தவ வேதங்கள் கூறுகின்றன. குர்ஆனும் இவர்களைப் பற்றிப் பேசுவதால் முஹம்மது நபி அவர்கள் முந்தைய வேதங்கள் வழியாக அறிந்து அதைக் கூறுகிறார் எனக் கூறுகின்றனர். பல காரணங்களால் இது தவறாகும்.

மேற்கண்ட நன்மக்களின் பெயர்களைத் தான் குர்ஆன் கூறுகிறதே தவிர யூத கிறித்தவ வேதங்கள் கூறுவது போல் அவர்களைப் பற்றிக் கூறவில்லை.

இவர் அவரைப் பெற்றார், அவர் இவரைப் பெற்றார் என்று யூத கிறித்தவ வேதங்களில் உள்ளது போல் தலைமுறைப் பட்டியல் ஏதும் குர்ஆனில் இல்லை.

மேற்கண்ட நன்மக்கள் குடி, விபச்சாரம், மோசடி போன்ற தீய பழக்க வழக்கங்கள் உடையோராக இருந்தனர் என்று மற்ற வேதங்கள் கூறுவது போல் குர்ஆன் கூறவில்லை. மாறாக அவர்கள் நன்மக்களாகத் திகழ்ந்தார்கள் என்று கூறுகிறது.

அவர்கள் வாழ்வில் நாம் படிப்பினை பெறத் தேவையான முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே குர்ஆன் கூறுகிறது. அதுவும் மற்ற வேதங்கள் கூறுவதற்கு எதிராகக் கூறுகிறது.

இவ்வாறிருக்க முந்தைய வேதங்களை முஹம்மது நபியவர்கள் காப்பியடித்து விட்டார்கள் எனக் கருத முடியாது.

யூத, கிறித்தவ வேதங்களில் மிகப் பெருமளவுக்கு வரலாறுகளும் மிகச் சிறிய அளவுக்கு சில போதனைகளும் மட்டுமே உள்ளன. வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அந்த வேதங்களில் எவ்வித வழிகாட்டுதலும் காணப்படவில்லை. ஆனால், திருக்குர்ஆன் மிகக் குறைந்த அளவில் மனிதர்கள் படிப்பினை பெற தேவையான சில வரலாற்றுத் துணுக்குகளை மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும் மனிதன் சந்திக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளிலும் ஏற்கத் தக்க தீர்வையும் கூறுகிறது. இவை யூத கிறித்தவ வேதங்களில் கூறப்படாதவை. எனவே, அவ்வேதங்களிலிருந்து திருக்குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவது அடிப்படையற்றதாகும்.

மற்ற சமுதாய மக்களைப் போலவே யூத கிறித்தவ மக்களும் அதிக அளவில் நபிகள் நாயகத்தை இறைத் தூதராக ஏற்றனர். தங்கள் வேதங்களில் உள்ளதையே காப்பியடித்துக் கூறும் ஒருவரைத் தங்கள் வழி காட்டியாக அம்மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

எனவே முற்றிலும் இது இறைவன் புறத்திலுருந்து நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட செய்தி தான் என்பதும், முஹம்மது நபி தாமாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதும் எவ்வித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது.

எதிர்பார்ப்புகள் இல்லை

முஹம்மது நபி அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தார் என்று வைத்துக் கொண்டால் கடவுளின் பெயரைப் பயன்படுத்தி அவர் கற்பனை செய்ததற்கு நிச்சயமாக ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். தாமாகக் கற்பனை செய்து அதைக் கடவுளின் வார்த்தை என்று கூறியதன் மூலம் அவர் அடைந்த லாபம் என்ன என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25ஆம் வயதில் வணிகராகவும் நாற்பதாம் வயதில் ஊரிலேயே பெரிய செல்வந்தராகவும் ஆனார்கள். இந்த வயதில் தான் தமக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாக அவர்கள் வாதிட்டனர். எனவே இதன் மூலம் செல்வம் திரட்டும் நோக்கம் ஏதும் அவர்களுக்கு இருந்திருக்க இயலாது என்பதை அறியலாம். இருக்கின்ற செல்வத்தை பெருக்கிக் கொள்வதும் நோக்கமாக இருந்ததா என்றால் அதுவுமில்லை. ஏனெனில் அவர்கள் சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் விட்டும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தாம் இறைத் தூதர் என்று கூறுவதையும், தமது பிரச்சாரத்தையும் கைவிடுவதாக இருந்தால் ஊரை விட்டு விரட்டப்படுவதிலிருந்து அவர்கள் தப்பித்திருக்க முடியும்.அந்தச் சமுதாயம் இதைத் தான் அவர்களிடம் வேண்டியது. ஆனாலும் அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள். பல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்தவருக்கு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்திருக்க முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம். பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக இறைவனின் பெயரால் கற்பனை செய்தவர் இருக்கின்ற பொருளாதாரத்தை இழப்பதற்கு முன் வர மாட்டார். ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் ஓரு ஆட்சியை நிறுவிய பிறகு அவர்கள் நினைத்திருந்தால் பொருளாதாரத்தை விரும்பிய அளவுக்கு திரட்டியிருக்க முடியும். ஏனெனில் அவர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாக இருந்தது. • இந்த நிலையிலும் அவர்கள் தமக்காக செல்வம் திரட்டவில்லை. • அரண்மனையில் வசிக்கவில்லை. • கடைசி வரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள். • அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிறார சாப்பிடவில்லை. • ஒரு மாதம் அளவுக்கு வீட்டில் அடுப்பு மூட்டாமல் பேரீச்சம் பழங்களையும், தண்ணீரையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வற்காக தைக்கப்பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன. • வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை. இருட்டிலே தான் அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள். • தமது கவச ஆடையை அடைமானம் வைத்து மீட்காமலே மரணித்தார்கள். • ஒரு நிலப்பரப்பு, குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச் சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்: தமது குடும்பத்தினர் வாரிசாகக் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.

நபிகள் நாயகத்தின் இந்தத் தூய வரலாற்றை அறிகின்ற எவரும் பொருள் திரட்டுவற்காக இறைவன் பெயரால் நபிகள் நாயகம் கற்பனை செய்தார்கள் என்று நினைக்க மாட்டார்.

மக்களிடம் புகழ், மரியாதை அடைவற்காக இப்படிக் கடவுள் பெயரைப் பயன்படுத்தியிருப்பார்களோ என்று நினைத்தால் அதுவும் தவறாகும். ஏனெனில் திருக்குர்ஆனை ஒருவர் முழுமையாக வாசித்தாலே இந்தச் சந்தேகத்திலிருந்து விடுபடுவார். புகழுக்காக ஆசைப்படும் ஒருவர் தமது மரியாதைக்கும், கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சொற்களைக் கடவுள் பெயரால் கற்பனை செய்ய மாட்டார்.


• 'கடவுள் முன்னால் நிறுத்தப்படும் போது வெற்றி பெறுவேனா என்பது எனக்குத் தெரியாது' • 'என்னிடம் கடவுளின் பொக்கிஷங்கள் இல்லை: எனக்கு மறைவானது தெரியாது' • 'தப்புச் செய்தால் நானும் கடவுளிடம் தப்பிக்க முடியாது' • 'நானும் உங்களைப் போன்ற மனிதனே' என்றெல்லாம் மனிதர்களிடம் தெளிவாகத் தெரிவிக்குமாறு திருக்குர்ஆன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகிறது.

  • நீர் எப்படி மனிதருக்கு அஞ்சுகிறீர் எனக்கு ஏன் அஞ்சவில்லை என்று கடவுள் தம்மைக் கண்டித்ததாகக் கூறினார்கள்.
  • கண் தெரியாத ஒருவரை நபிகள் நாயகம் கடிந்து கொண்ட போது, அது கண் தெரியாதவருக்குத் தெரியாத நிலையிலும் அவரிடம் தான் நடந்து கொண்ட முறையை இறைவன் கண்டித்ததாகக் கூறினார்கள்.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மக்கள் மத்தியில் தமது மரியாதை குறைவதை ஜீரணிக்க மாட்டோம். நபிகள் நாயகம் அவர்களோ தம்மைக் கண்டித்து தமது மதிப்மைக் குலைக்கும் சொற்கள் பலவற்றை இறை வார்த்தை என்று அறிவித்தார்கள். தானே கடவுள் என்று அறிவித்தாலும் நம்பும் அளவுக்கு மக்கள் அவர்கள் மீது அன்பு வைத்திருந்தும் தம்மையும் அவர்களைப் போன்ற மனிதராகவே கருதினார்கள்.

இந்த விபரங்கள் யாவும் இறைச் செய்தி என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அறிமுகம் செய்த திருக்குர்ஆனிலேயே காணப்படுகின்றன. தம்மைக் கண்டிக்கின்ற தமது மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துகின்ற செய்திகளை தமக்கு எதிராகவே ஒருவர் எவ்வாறு கற்பனை செய்வார் என்று சிந்தித்தால் திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தின் கற்பனையாகவே இருக்கவே முடியாது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

• அவர்களுக்குப் பல்லக்கு இருக்கவில்லை! • அவர்களுக்கு வாயிற் காப்போன் இருக்கவில்லை! • காலில் விழுவதை அவர்கள் அனுமதிக்கவில்லை! • தமக்காக பிறர் எழுந்து நிற்பதையும் தடுத்தார்கள்! • இயேசுவை மற்றவர்கள் புகழ்வது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்' என்று எச்சரித்தார்கள்!

மிகச் சாதாரண ஒரு மனிதன் எதிர்பார்க்கும் புகழைக் கூட அவர் விரும்பவில்லை, மக்களிடம் பெற்றதுமில்லை.மக்களிடம் மதிப்பையும், மரியாதையையும் பெறுவதற்காகக் கடவுள் வார்த்தை என்று கற்பனை செய்தார்கள் என்பதும் ஏற்க முடியாததாகும்.

மேற்கத்தியர்களின் திருக் குர்ஆன் ஆய்வுகள்.


உலகத்திலுள்ள பெரும் மத கிரந்தங்களில் குர் ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தை தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்த போதிலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும், பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத்தக்க முறையில் மாற்றியமைப்பதிலும், அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை. அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது . நவீன பண்பாட்டை உருவாக்குகிறது. அது முதலில் அரேபிய பாலைவனத்தில் சிதறிக்கிடந்த மக்களை இலட்சியத்தை பேணும் குழுவாக ஒன்றினைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாய் மாற்றியது. ஐரோப்பிய மக்களும் கிழக்கத்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்கு சமய , அரசியல் அமைப்புக்களை அது தோற்றுவித்துள்ளது.

G. மார்கோலத்-[G. Margoliouth: Introduction to J.M. Rodwell's 'The Koran', New York: Everyman's Library, 1977, p. VII.]

நான் மேலே கூறிவந்த (அவரது நூலில்) விபரங்கள் முஹம்மத் குர் ஆணைப் புனைந்தார் என்று கூறுவதை அடிப்படை யற்றது என தெளிவாக காட்டுகிறன. கல்வி அறிவில்லாத ஒருவர் திடீரென சிறந்த இலக்கிய நயம் வாய்ந்த ஒரு கிரந்தத்தின் இன்றைக்கும் அரபி இலக்கியத்தில் இணையற்று விளங்கும் ஒரு கிரந்தத்தின் ஆசிரியராய் ஆக முடியுமா? அது மட்டுமல்ல அந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத இன்றைய விஞ்சான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புகளின் எதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படித்துல்லியமாக தெரிவிக்க முடிந்தது?

Dr.மாரிஸ் புகைல்[Dr. Maurice Bucaille - author of "The Bible, the Quran and Science" 1978, p. 125]

அதனுடைய வலிமையை இலக்கிய நயம் மற்றும் முன் கூட்டியே வைத்த சில துலாக் கோள்களைக் கொண்டு பார்க்கக் கூடாது. மாறாக, அன்று அவருடன் வாழ்ந்த மக்கள் மீது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது, அந்நாட்டு மக்களிடையே அது எத்தகைய மாற்றங்களை உருவாக்கியது என்பதைக்கொண்டே அதன் வலிமையை நாம் கணிக்க வேண்டும். கருத்துகளில் முற்றிலும் மாறுபட்ட பரஸ்பர பகைமை கொண்ட மக்களின் உள்ளங்களை அது தொட்டு அவர்களின் உணர்ச்சிகளை மாற்றி, ஓர் இணக்கமான சமூகமாக பிணைத்தது என்பது வரலாற்று உண்மையாகும். இந்த உண்மையே அது அளவற்ற இலக்கிய நயம் கொண்ட வேதம் என்பதை தெளிவாக்குகிறது. பண்பாடற்ற மக்களை மிகவும் நாகரிகம் வாய்ந்த சமுகமாக மாற்றி வரலாற்றின் வெற்றிச் சிகரத்திற்கு அவர்களை இட்டுச்சென்றிருப்பதிலிருந்தே அந்த வேதத்தின் மகிமையை நாம் உணரலாம்.

Dr.ஸ்டெயின் காஸ்[Dr. Steingass, quoted in Hughes' Dictionary of Islam, p. 528]

குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனை யாகும் அதன் ஆதிக்கம் சமயம், ஒழுக்கம், விஞ்ஞானம் போன்ற அனைத்து துறைகளிலும் படர்ந்து நிற்கிறது.

சேர் வில்லியம் மூர்-[Sir. William Muir: 'The Life of Mohammed', London 1903, Ch. The Coran p.VII.]