Sunday, March 17, 2013

மாணவர்களை தூண்டுகிறாரா ஜெயலலிதா? உளவு பார்க்க வந்த உளவுத்துறை!



தமிழக அரசு கொடுத்துள்ள விளம்பரத்தின் மேல் பகுதியில் ஜெயலலிதாவின் புகைப்படம். அதன் கீழே மிரட்டும் விழிகளுடன் ஏழு புலிக்குட்டிகள் இருந்தன. புலியை சரியான நேரத்தில்தானே தொடுகிறார் ஜெயலலிதா?
ஈழப் பிரச்சினையை வைத்து தமிழகம் கொந்தளிக்கும் கடலாக மாறிக்கொண்டு இருக்கும் நேரத்தில், என்னதான் வனத்துறை விழாவாக இருந்தாலும் புலிப் படங்களைப் போட்டு விளம்பரம் செய்வதற்குத் தைரியம் வேண்டும். 'செய்துதான் பார்ப்போமே’ என்ற ஒரு உள்நோக்கமும் இருக்கலாம். இருக்கலாம்!
இதுதான் மத்திய அரசுக்கு, தமிழக அரசு மீது மிகப் பெரிய நெருடலை உருவாக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் நடக்கத் தொடங்கி இருக்கும் மாணவர் போராட்டங்களை, மாநில அரசாங்கமே மறைமுகமாகத் தூண்டிவிடுகிறதோ?’ என்ற அச்சம்தான் அது.
ஆசியத் தடகள சாம்பியன் போட்டியைத் தமிழகத்தில் நடத்த எதிர்ப்பு, உள்துறையின் தேசியத் தீவிரவாதத் தடுப்பு மையம் அமைக்கக் கண்டனம், மதக் கலவரத் தடுப்பு மசோதா மீது விமர்சனம், ஐ.ஏ.எஸ். தேர்வு விஷயத்தில் மத்திய அரசின் புதிய விதிமுறையை மாற்றக் கோருவது... என்று, அடுத்தடுத்து மத்திய அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களிலும் தனது எதிர்ப்பை முதல்வர் ஜெயலலிதா பதிவுசெய்து வருவது மத்திய அரசுக்கு நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்குப் பதிலடி கொடுப்பது மாதிரி, மின்சாரம், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் விஷயத்தில் ஏற்கெனவே தந்த அளவை மத்திய அரசு குறைத்துக்​கொண்டது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவர்களை, மாநில அரசு நினைத்திருந்தால் என்றோ அடக்கி​யிருக்க முடியும் என்பதும் மத்திய அரசாங்கத்தின் நினைப்பு.
இதன் தொடர்ச்சியாகத்தான் இலங்கைப் பிரச்னையையும் பார்க்கிறார்கள்.
முக்கிய கட்சித் தலைவர் ஒருவர், இன்னொரு தலைவரிடம் பேசும்போது, இந்த மாணவர் போராட்டத்தை அந்த அம்மாவே தூண்டிவிடுவதுபோலத் தெரியுது. மத்திய அரசாங்கத்துக்கு இதன் மூலமா நெருக்கடி கொடுக்க நினைக்குது’ என்று சொன்னாராம்.
இலங்கைப் பிரச்சினையில் நாம்தான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அரசியல் நடத்த வேண்டும். ஆனால், நாம் செய்ய வேண்டிய அனைத்தையுமே முதல்வர் ஜெயலலிதா கனகச்சிதமாய் செய்துவருகிறார்’ என்று, ஈழ ஆதரவுத் தலைவர்களும் சொல்கிறார்கள்.
அரசாங்க ஆதரவு இருப்பதால், ஈழ ஆதரவுத் தலைவர்கள் இன்னும் ஆக்ரோஷமாகப் போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டு வருகிறார்கள்’ என்றும் பேச்சு. இந்தத் தகவல்கள் மத்திய அரசுக்குப் போனது.
அதிரடிப் போராட்டங்கள் அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் அரங்கேறலாம்’ என்ற அதிர்ச்சி தகவல்களை ஐ.பி. அதிகாரிகள் மூலம் கேள்விப்பட்ட டெல்லி மேலிடம் அதிர்ந்துபோனது.
அதன் பிறகே, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் மத்திய அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதன் பின்னணியை உன்னிப்புடன் கவனிக்க ஆரம்பித்தது.
சமீபத்தில் வேளாங்கண்ணிக்கு வந்த இலங்கைப் பிரமுகர் அடித்து விரட்டப்பட்டார். தப்பித்து திருச்சிக்கு வந்த அவர் மீது முட்டை வீசப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்சவின் நெருங்கிய உறவினருக்கு இராமேஸ்வரத்தில் அடி உதை விழுந்தது. இந்தச் சம்பவங்கள் மீடியா முன்னிலையில் நடந்தன.
இலங்கை வீரர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதை ஏன் முன்கூட்டியே தமிழக பொலிஸ் தடுக்கவில்லை என்று தனது அதிருப்தியை மத்திய அரசிடம் பதிவுசெய்தது இலங்கை அரசு.
இதைப் பற்றி தமிழக உள்துறையிடம் விளக்கம் கேட்டபோது, சரிவரப் பதில் வரவில்லையாம். 'எங்களிடம் சொல்லாமல் வருகிறார்கள். மத்திய அரசும் அவர்களின் வருகையை எங்களிடம் சொல்வது இல்லை. தமிழகத்தில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கக் கூடாது' என்றெல்லாம் முதல்வர் ஜெய​லலிதா அறிக்கை விட்டதை கோபப் பார்வையுடன் மத்திய அரசு பார்க்கிறது.
முந்தைய போராட்டங்களை பொலிஸ் கண்டுகொள்ளாமல் விட்டதன் தொடர்ச்சிதான், இப்போதைய கல்லூரி மாணவர்களின் உக்கிரப் போராட்டம் என்று மத்திய அரசு கருதுகிறது.
இதைக் கண்டுகொள்ளாமல் பொலிஸை கைகட்டி வேடிக்கைப் பார்க்கச் சொல்லி, இதன் மூலம் மத்திய அரசுக்கு எதிராக மக்களின் மனோநிலை திரும்பட்டும் என்று முதல்வர் ஜெயலலிதா நினைப்பதாக அவர்கள் யோசிக்கிறார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது.
மாணவர்கள் மட்டுமா? வக்கீல்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினரும்தானே போராடுகிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழகத்​தையும் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா திருப்பி விடுவதாக மத்திய அரசு நினைக்கிறதோ?
ஆமாம். அந்தப் படலம்தான் இப்போது ஆரம்பமாகிவிட்டது. 'போராட்டங்கள்... தமிழக மாணவர்களின் உளப்பூர்வமான வெளிப்பாடு' என்பதை மத்திய அரசு முழுமையாக நம்பவில்லை.
இறுதிப் போர் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அப்போதெல்லாம் இல்லாத அளவுக்கு இப்போது மூர்க்கத்தனமாக ஏன் போராட்டம் பரவுகிறது?’ என்று, மத்திய உள்துறையிடம் ஆட்சி மேலிடம் கேட்டிருக்கிறது.
ஐ.நா. தீர்மான விஷயத்தில் மத்திய அரசுக்கு தமிழகத்தில் இவ்வளவு எதிர்ப்பா?’ என்று திகைக்கிறார்கள். இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸோ, அதனுடன் கூட்டணி சேரும் கட்சியோ மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் திட்டம்.
அதற்கான திட்டங்களை அரங்கேற்றி வருவதாக மத்திய அரசு நினைக்கிறது. இதை, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாற்ற நினைக்கிறார்கள்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இருக்கிறதா? மத்திய அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் எங்கெங்கே தாக்கப்பட்டன? அவை மீது பொலிஸ் எடுத்த நடவடிக்கைகள் என்ன? இந்த வன்முறை நிகழ்வுகளின்போது பொலிஸார் கைகட்டி வேடிக்கை பார்த்தார்களா? மாநில அரசு அவர்களுக்கு என்ன உத்தரவு பிறப்பித்திருக்கிறது? என்பதை இரகசிய ஆய்வு செய்ய, மத்திய உள்துறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள உளவுத் துறை அதிகாரிகள் கொண்ட குழு தமிழகம் வந்து சென்றதாக ஒரு தகவல் கோட்டை வட்டாரத்தில் பரவிக்கிடக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களின் பட்டியல்களையும், கூலிப் படை அராஜக சம்பவங்களையும் திரட்டினார்களாம். தாங்கள் திரட்டிய தகவல்களுடன் நேராக டெல்லிக்குப் போய்விட்டார்களாம்.
மத்திய குழு வந்து சென்றது தமிழக முதல்​வருக்குத் தெரிய வந்ததாகவும், மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவதை எரிச்சலுடன் கேட்டதாகவும் சொல்கிறார்கள்.
அடுத்த கட்டமாக, சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுவதால் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை தற்காலிகமாக மூடும்படி தமிழக அரசுத் தரப்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படலாம் என்கிறார்கள். இதுவும் செய்யப்பட்டால், நெருக்கடி இன்னும் முற்றும்.
மத்திய அரசு அலுவலகங்கள், இலங்கை தொடர்புடைய அரசு மற்றும் தனியார் நிறுவனங்​களுக்கு முதல் கட்டமாக பாதுகாப்பு கொடுப்பதற்காக மத்திய அரசு துணை நிலை இராணுவத்தை அனுப்பி வைக்கப் போகிறது.
1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகத்தில் நடந்தபோது இராணுவம் இங்கு வந்தது. ஒருவித பதற்றமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது என்று சொல்லிவிட்டு, மாறினார் கழுகார்.
இவ்வாறு ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பகுதியில் வெளியிடப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 16, 2013

பெருகி வரும் மாணவர் போராட்டம் கமல் ரஜினி ஆதரவு ?


இலங்கையில் , தனி ஈழமே தீர்வு அதற்க்கு இந்தியா தனியாக பொது வாக்கெடுப்பு நடத்த கோரி ஐநாவின் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று முதன்மையான கோரிக்கையை வைத்து தமிழகத்தில் மூளை முடுக்கெல்லாம் மாணவர்கள் போராட்டம் ,தீவிரம் அடைந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும், பத்து புது கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்து போராட்டத்தை நடத்துகிறார்கள்.
திருச்சியில் விமான நிலையத்தை முற்றுகை இட்டனர்.
மதுரையில் என்றும் காணாதபடிக்கு பத்தாயிரம் மாணவர்கள் வீதியில் பேரணி நடத்தினர் .
மத்திய அரசு அலுவலகங்களை குறி வைத்து மாணவர்கள் நகர்வது அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
இந்நிலையில் , தமது சொந்த,வியாபார , லாப நட்ட பிரச்சினைகளிற்கு வீதிக்கு வந்து போராடும் திரை துறையினர்., உலகம் முழுவதும் இவர்கள் பங்குகொண்ட ,நடித்த தமிழ் திரைப்படம் பார்த்து அவர்களிற்கு ஆதரவு அளிக்கும் தமிழர்களின் முக்கிய பிரச்சினைக்கு இதுவரை மவுனமே காத்து நிற்கின்றனர்.
அவர்களில் சிலர்., சிம்பு, இமான், இன்று அனிருத் போன்றவர்கள் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து உள்ளார்கள்.
தமது படம், விஸ்வரூபம் பிரச்சினைக்கு உள்ளான பொழுது , தமிழர்கள்தான் தமது காசை ஆயிரத்தை, பத்தாயிரத்தை கமலுக்கு அனுப்பி தமது பாசத்தை காண்பித்தார்கள்.
அதே மாதிரி முதன்மை நடிகர் ரஜினியும் தமது படத்தை தமிழில் எடுத்து தமிழ் திரையரங்கதில்தான் வெளியிட்டு வியாபாரம் பார்கிறார்.
இவர்களை எல்லாம் விட , நடிகராக இருந்து தமிழ்மக்களின் ஆதரவு பெற்று எதிர்க்கட்சி தலைவராக உள்ள விஜயகாந்த் இதுவரை கிஞ்சித்தும் இது பற்றி பேசவில்லை .
மற்றொரு நடிகர் மற்றும் கட்சி தலைவரான சரத்குமார் இது ஏதோ நேபாள நாட்டு பிரச்சினை போலவே உள்ளார்.
இங்கே இவ்வளவு போராட்டம் நடைபெறும் பொழுதும, அண்ணா ஹஜாரே வுக்கு டெல்லிக்கு சென்று அளித்த நடிகர் விஜய் , இங்கும் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் விழுப்புரம் சென்று இலவச திருமணம் என்று அரசியல் ஆசையில் படம் காட்டி கொண்டு உள்ளார்.
விஜயும் ஸ்பானிஷ் நடிகர் அல்ல தமிழ் மொழியில் வசனம் பேசி தமிழ் மொழியில் படம் எடுக்கும் நடிகர்தான் .
இவர்கள் முதலான அனைவரும் வீதிக்கு வந்து போராடவேண்டாம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என்று அறிக்கை மட்டுமாவது கொடுக்கட்டும் .
அதுதான் தமிழ் மொழியை வைத்து திரை வியாபாரம் செய்த இவர்கள், உலக தமிழர்களிற்கு காட்டும் நன்றி கடன் என்று சொல்லலாம்.
அதை செய்துதான் ஆகவேண்டும் .
அப்படி இல்லாமல் போனால் இவர்கள் இனிவரும் காலங்களில் , ஆங்கிலத்திலோ அல்லது ஸ்பானிஸ் மொழியிலோ படங்கள் எடுத்து அந்த நாட்டு தியேட்டர்களில்தான் வியாபாரம் பார்க்க முடியும் என்றே நிலைமை உள்ளது.
ஏன் என்றால் மாணவர்கள் போராட்டம் அப்படி உள்ளது. விமான நிலையத்தையே முற்றுகை இடும் இவர்களுக்கு இவர்களின் படம் ஓடும் தியேட்டர் எம்மாத்திரம் என்பதை அவர்கள் வெகு சீக்கிரம் உணர்ந்து , ஆதரவு அளிப்பார்கள் என்றே அனைவரும் எதிர்பார்கின்றனர்.manin

தமிழ்நாடு மாணவர் ஒரு ஐரோப்பிய தமிழ் கலைஞர் இருந்து ஆதரவு குரல்


Thursday, March 14, 2013

டெசோ அல்லது புஸ்ஸோ


அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யேசக்தி!



‘சாந்தா அல்லது பழனியப்பன்’ – இது கருணாநிதி போட்ட முதல் நாடகம். ‘டெசோ அல்லது புஸ்ஸோ’ – இது கருணாநிதி நடத்த ஆரம்பித்திருக்கும் இறுதி நாடகம்.
கோபாலபுரம் வீட்டு வாசலில் முதலமைச்சர் கார் வந்து நிற்க ஆரம்பித்தால், ‘தமிழினத் தலைவர்’ நாற்காலியைப் புறவாசலில் கொண்டுபோய்ப் போட்டுவிடுவதும், அந்தக் கார் காணாமல் போனால், தூசி தட்டி‘தமிழினத் தலைவர்’ நாற்காலியை எடுத்துவந்து உட்காருவதும் கருணாநிதிக்குக் கைவந்த கலை.

இந்த நூற்றாண்டின் வரலாற்றுச் சோகமான ஈழத் தமிழர் வாழ்க்கையைவைத்தும் அவர் இப்படி நாடகம் ஆடுவதைத் தான் பார்க்கச் சகிக்கவில்லை.
ஈழத்தில் கொடுமை நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. மூன்று ஆண்டுகளே முழுமையாக முடியவில்லை. அந்த அவலம் அரங்கேறியபோது, தமிழ்நாட்டின் அதிகாரம் பொருந்திய நாற்காலியில் அமைச்சர்களோடு அமர்ந்து நாளரு பாராட்டு விழா, நித்தம் ஒரு கொண்டாட்டம், கவர்ச்சி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளித்தவர் கருணாநிதி.
அப்போது அவரது கட்சியின் தயவை நம்பித்தான் மத்தியில் காங்கிரஸ் அரசாங்கம் இருந்தது.
மன்மோகன், சோனியா, பிரணாப் முகர்ஜி ஆகிய மூன்று அதிகார மையங்களிடமும் அரை மணி நேரத்தில் தொடர்புகொண்டு, தான் நினைத்ததைச் சொல்லும் சக்தி கருணாநிதிக்கு இருந்தது.
அப்போதெல்லாம் கேளாக் காதினராய், பாராக் கண்ணுடையவராய் இருந்துவிட்டு, ‘என்னது… சிவாஜி செத்துட்டாரா?’ என்று மறதி நாயகன் கேட்பதுபோல, இப்போது ‘ஈழத்தில் எவ்வளவு அவலம் பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று கேட்பது சினிமாவுக்கு வேண்டுமானால் சிரிப்பைத் தரலாம். அரசியலில் இதற்குப் பெயர் துரோகம்… பச்சைத் துரோகம்!
p38a(1)
p38b(1)
p38c
p38d
முதலமைச்சராக இருக்கும்போது ஒரு பேச்சு, எதிர்க் கட்சி ஆனதும் மறுபேச்சு. நரம்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டு மானாலும் வளையும் என்பார் கள். ஆனால், இப்படியெல்லாம் வளைய முடியுமா என்று கருணாநிதியின் அறிக்கை களைப் பார்த்து அதிர்ச்சியடை யத்தான் வேண்டும். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக கருணாநிதி எதையெல்லாம் சொல்லிவந்தாரோ, அதை எல்லாம் கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக உல்டா அடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
”இலங்கையை சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக்கொண்டு இருக்கும் ராஜபக்ஷேவை, மனித உரிமைகள், மனிதநேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளி என உலக நாடுகள் பார்க்கின்றன. அவர் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் அளவுக்குப் பேசி இருக்கிறார்.
சிங்களப் பேரினவாதத்தின் சின்னம் ராஜபக்ஷே. நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக்கொண்டு ராஜபக்ஷே வின் சுய உருவத்தையும், குணத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று இப்போது அறிக்கைவிட்ட கருணாநிதிதான் தமிழ்நாடு சட்டசபையில் ‘முதல்வராக’ இருந்தபோது, ”நாம் தமிழர்களைக் காப்பாற்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை வளமாக்கப் பாடுபடப்போகிறோமா? அல்லது ராஜபக்ஷேவை குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்போகிறோமா? வாழ்வா தாரத்தைப் பெருக்க வேண்டுமானால், இன்றைக்கு இருக்கிற சிங்கள அரசின் மூலமாகத்தான் அதைச் செய்ய முடியும். அங்கே இருக்கிற தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், நாம் இங்கே ஆத்திரப்பட்டோ அல்லது வெறுப்பு உணர்வுடனோ அங்குள்ள சிங்கள இனத்தினரைப் பற்றி ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால் நல்லதல்ல. இலங்கையிலே உள்ள தமிழனைக் காப்பாற்ற வேண்டுமானால், சிங்களவர்கள் கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும்” என்று சொல்லிச் சமாளித்தவர்.
லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்பட்டது மே மாதம் 17-ம் தேதி. கருணாநிதி இப்படிச் சொன்னது ஜூலை 1. லட்சம் பேர் செத்ததைப் பார்த்து ஆத்திரம் வரவில்லை. அனுதாபம் கூட வரவில்லை. ‘கோபப்படாதே’ என்று ஈழ தாகத்தின் வேரில் வெந்நீர் ஊற்றினார். அதற்கு ஒரே காரணம்தான். அதையும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டார். ‘இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலைக்கு மாறாக நடந்திருந்தால், என் ஆட்சியையே இழக்க வேண்டி வந்திருக்கும்’ என்பது பட்டவர்த் தனமான அவரது வாக்குமூலம். ”பதவி என் தோளில் கிடக்கும் துண்டு, கொள்கைதான் வேட்டி” என்று பேசியது எல்லாம் ஊருக்குத்தானோ?!
p38
”இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மைஎன்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால், உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்” என்று புதுக்கதை விட ஆரம்பித்துள்ளார் கருணாநிதி. அவரை இத்தனை சுலபமாக ஏமாற்ற முடியும் என்பதை அவரது எதிரிகளும் ஏற்க மாட்டார்கள். அவர் அப்போதும் இப்போதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார் என்பதே உண்மை. ‘போரை நிறுத்திவிட்டோம்’ என்று ராஜபக்ஷே சொன்னதை, ப.சிதம்பரம் நம்பலாம். ப.சி. சொன்னதை மு.க-வும் நம்பலாம்.
தவறில்லை. ”அன்றைய தினம்தான் எட்டு இடங்களில் கொத்துக் குண்டுகளைப் போட் டார்கள்” என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப் பாளர் நடேசன், பி.பி.சி. வானொலியில் அன்று இரவே கதறினாரே… அப்போது கருணாநிதி அளித்த பதில் என்ன? கருணாநிதியின் அறிவிப்பைப் பார்த்துதான் ‘பாதுகாப்பான இடத்துக்கு’ அப்பாவி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அந்த இடத்தில் குண்டு கள் போடப்பட்டு கொலைகள் நடந்தன. கருணாநிதி சொன்னதை நம்பியதால் தமிழர்கள் உயிரைவிட்டார்கள். ஆனால், இப்போது கருணாநிதி அறிக்கைவிட்டு ஊதுபத்தி ஏற்றுகிறார்.
p38zz
”நீங்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டதாகச் சொல்லி உண்ணாவிரத்தத்தை முடித்துவிட்டீர்கள். ஆனால், அன்றைய தினம்கூட குண்டுபோட்டுள்ளார்களே?” என்று மனசாட்சிஉள்ள ஒரு பத்திரிகையாளன் கேட்டபோது, ”மழைவிட்டும் தூவானம் தொடர்வது வழக்கம்தான். இதைப் போலத்தான் இலங்கையிலே இப்போதும் தொடரும் விமானத் தாக்குதல்களைக் கருத வேண்டும்” என்று கருணாநிதி சொன்ன வாசகம், மிகக் கொடூரமான சினிமா வில்லன்கள்கூடப் பேசாத வசனம். உரிமை மனோபாவம் கொண்டவன் உடலில் உடைகூட இருக்கக் கூடாது என்று நிர்வாணப்படுத்திக் கண்ணைக் கட்டி சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக் கொன்ற காட்சிகளைப் போர் முடிந்த நான்கா வது மாதம் சேனல் 4 வெளிப்படுத்தியது. ‘கொன்றுவிட்டார் கள்… கொடுமைப்படுத்தினார் கள்… சித்ரவதை செய்தார்கள்’ என்று அதுவரை சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள்.
முதன்முதலாக அந்த வீடியோ காட்சிகள், அம்பலப்படுத்தி அதிரவைத்தன. அப்போதும் ‘முதல்வர்’ கருணாநிதி, ”இந்தக் காட்சிகள் பழையவை. இப்போது எடுக்கப்பட்டவை அல்ல” என்று எல்லாம் தெரிந்தவராகச் சொன்னார். ராஜ பக்ஷேவின் கண்துடைப்பு நாடகத்தில் தானும் ஒரு பாத்திர மாகப் பங்கேற்கும் வகையில் 10 பேரை அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் தினத்திலும், ”போரின்போதுதான் சித்ரவதை கள் நடந்தன. இப்போது அல்ல.
இப்போது தமிழர்கள் யாரும் கடத்திச் செல்லப்படுவது இல்லை” என்றார். அதாவது, இலங்கை அரசாங்கத்தை, ராஜபக்ஷேவைக் குற்றம்சாட்டி யார் கேள்வி கேட்டாலும் கருணாநிதிக்குச் சுருக்கென்றது. அதனால்தான் ராஜபக்ஷேவும் மன்மோகனும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளுக்கு எல்லாம் கருணா நிதியே வலியப் போய் பதில் சொன்னார். இந்த அதீத ஆர்வத்துக்கு ஒரு பின்னணி இருந்தது. இலங்கையில் நடந்த அனைத்தும் அவருக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டன.
”இறுதிப் போர் நடந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை அமைத்தோம். எங்கள் நாட்டின் சார்பில் நானும் பசில் ராஜபக்ஷே, லலித் வீரதுங்க ஆகிய மூவரும் இடம்பெற்றோம்.
இந்தியாவின் சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர்மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் இருந்தார்கள்” என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். போர் நடந்த காலகட்டத்தில் கருணாநிதியை எம்.கே.நாராயணன் எத்தனையோ தடவை சந்தித்தார். இலங்கை போய்விட்டு இங்கே வருவார். அல்லது கருணாநிதியைப் பார்த்துவிட்டு அங்கே போவார். போரை வழி நடத்திய ஒருவர் தன்னை அடிக்கடி வந்து சந்திக்கிறாரே என்று அப்போதாவது கருணாநிதிக்குக் குற்றவுணர்ச்சி வந்திருக்க வேண்டும். ‘போர் நிறுத்தம் செய்வதற்கு இந்தியா முயற்சிக் காவிட்டால், உங்களுக்குத் தரும் ஆதரவை வாபஸ் பெறுவேன்’ என்று மானஸ்தர் சொல்லி இருக்க வேண்டும்.
”போர் நிறுத்தம் செய்யச் சொல்வது எங்களது வேலை அல்ல” என்று கருணாநிதி வீட்டு வாசலில் நின்றுகொண்டு அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொன்னபோதாவது, கருணாநிதிக்கு ஆத்திரம் வந்திருக்க வேண்டும். ”அங்கே போர் முடிவுக்கு வரப்போகிறது” என்று சந்தோஷ அறிவிப்பை நாடாளுமன்றத்தில் பிரணாப் வெளியிட்டபோதாவது, கோபம் வந்திருக்க வேண்டும். ”ராஜபக்ஷே என்ன முடிவெடுத்தாலும் இந்தியா வழக்கம்போல ஆதரிக்கும். இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று ராஜபக்ஷே சொன்னது ஒருவகையில் சரியானதுதான்” என்று சிவசங்கர் மேனன் சொன்னபோதாவது, அவமானம் வந்திருக்க வேண்டும். இத்தனை கழுத்தறுப்புகளையும் மறைப்பதற்கு டெசோ ஷோவை கருணாநிதி இப்போது ஆரம்பிக்கிறார்.
போர் உச்சகட்டத்தில் இருந்த போது, ”முதல்வர் கருணாநிதி யின் உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து” என்று சென்னை போலீஸ் கமிஷனரை வைத்து அறிக்கை விடவைத்து, முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழ்த் தியாகிகள் தங்களது தேகங்களை ஈழத் தாய்க்கு அர்ப்பணித்தபோது வேடிக்கை பார்த்ததுடன், ”அவர்கள் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கவில்லை… பொண்டாட்டியிடம் தகராறு. அதனால் தீக்குளித்தனர்” என்று கொச்சைப்படுத்தும் காரியத்தை போலீஸ்காரர்களை வைத்து முடுக்கிவிட்டு, தமிழ்நாடு ஒரே உணர்வில் இருக்கிறது என்பதைக் காட்ட கடையடைப்பு நடத்தப் பட்டபோது, ”இது சட்டப்படி குற்றம். கடையை அடைக்கச் சொன்னால் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்வோம்” என்று மிரட்டல் விடுத்து, பிரபாகரன் படத்தைப் பார்த்தாலே கிழிக்கும் வேலையை போலீஸாருக்குக் கொடுத்து… இப்படிச் செய்த அனைத்துப் பாவங்களுக்கும் இப்போது பரிகாரம் தேட நினைக்கிறார் கருணாநிதி.
சென்னையில் இருந்த இலங் கைத் தூதரக வட்டாரத்துக்கும் அன்றைய தி.மு.க. ஆட்சியின் போலீஸ் உளவுத் துறைக் கும் இருந்த பிரிக்க முடியாத பாசத்தை கருணாநிதி உணரத் தவறியதன் விளைவுதான், இன்று நித்தமும் உடன்பிறப்பு களுக்குக் கடிதம் எழுதியாக வேண்டிய அவஸ்தையைக் கொடுக்கிறது. உயிரோடு வந்த பாட்டி பார்வதியை, அநாதை யாக வானத்தில் திருப்பி அனுப்பிய சோகத்தை பேரன் பாலச்சந்திரன் படம் பார்த்து அறிக்கை வெளியிட்டுப் போக்கியாக வேண்டியிருக் கிறது. ”பாவிகளின் கொலை வெறிக்குப் பலியான பாலகன் பாலச்சந்திரன்” என்று இன்று கண்ணீர்க் கவிதை வடிப்பவர், ”விடுதலைப் புலிகள் கல்லறை கள் கட்டுவதில் காலம் கழித்து விட்டார்கள்” என்று கிண்டல் அடித்ததும், ”இன்று அனை வரும் ஒன்று சேர்ந்து போராடுவோம்” என்பவர், அன்று, ”ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய் போராட வேண்டியதுதானே. நான் கரையில் இருந்து கண்டுகளிப்பேன்” என்று வயிற்றெரிச் சலைக் கொட்டியதும் தமிழன் மறக்கக் கூடாத வாக்குமூலங்கள்.
ஊழல் வழக்கில் ஏ.சி முருகேசன் தன் கையைப் பிடித்துத் தூக்கியதால் ஏற்பட்ட சிவப்புக் காய்ப்பை 100 வீடியோ கேமராக்களுக்கு முன்னால் காட்ட வேண்டுமானால், பாளையங்கோட்டை சிறையில் பல்லி ஓடியதையே 50 ஆண்டுகள் சொல்ல முடியுமானால், வளரும் கருவை வயிற்றில் இருந்து எடுத்துப் பொசுக்கிய காட்டுமிராண்டிக் கூட்டத்தைப் பற்றி இன்னும் எத்தனை ஆண்டுகள் சொல்லித் தொலைத்தாலும் ஆத்திரம் அடங்காது. அந்த சோகத்தில்கூட அரசியல் செய்ய நினைப்பது, அந்தக் கொடூரத்தை விடக் கொடூரமானது. காங்கிரஸை மிரட்டுவதற்கு, அல்லது காங்கிரஸ் தங்களை விரட்டிவிட்டால் ஈழ ஆதரவுக் கட்சிகளைக்கொண்ட கூட்டணி அமைப்பதற்கு, அதுவும் இல்லா விட்டால் ஈழப் பிரச்னையை எதிர் அணியினர் பயன்படுத்தாமல் இருப்பதற்கு… என்று சாவு வீட்டிலும் லாபநஷ்டங்களுக்கு, கடல் தாண்டிய சொந்தங்களின் சோகத்தை முதலீடு ஆக்குவது ஆபத்தானது.
தன்னுடைய கடந்த காலத் தவறுகளை மறைக்க இன்றைக்கு கருணாநிதிக்குத் தேவை முகமூடி. ஏற்கெனவே வீரமணி, திருமாவளவன் ஆகிய இருவரும் சிக்கிவிட்டார்கள். பெரியாரைக் காப்பாற்றுவதைவிட, அம்பேத்கர் புகழைப் பரப்புவதைவிட இவர்களுக்கு கருணாநிதியை நியாயப்படுத்துவதே முழு நேரத் தொழிலாக மாறிவிட்டது. ”ஓட்டுக்காக எவனும் எதையும் செய்வான். யார் காலையும் நக்குவான். இதற்கு யாரும் விதிவிலக்கு இல்லை!” என்று தந்தை பெரியார் சொன்னார்.
அதற்காக, ஈழத் தமிழர் பிணங்களையுமா?
நன்றி – ஆனந்த விகடன்

Wednesday, April 20, 2011

வன்னி மக்களை சிறீலங்கா அரசு நடத்தும் விதம்! அதிர்ச்சிப் �படங்கள் இணைப்பு

வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள்... 30 வருட காலப் போர் முடிந்து விட்டது...


இந்தத் தகவல் உத்தியோகபூர்வமாக இலங்கையின் அரச கட்டமைப்புக்களால் அறிவிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் முடிந்து விட்டன.

ஆனால் இங்கே கையில் விபரப் பலகையுடன் நிறுத்தப்பட்ட வயதானவர்கள் வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எஞ்சிய தமிழ் மக்கள்...


இப்படி ஆட்டு மந்தைகளைப் போல கொடூரமாக எடுக்கப்பட்ட வன்னி வாழ் மக்களின் படங்கள்

இப்படியான வயதான காலத்திலும் சிறிலங்காப் படையினரால் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது போல நிறுத்தப்படுகிறார்கள்..


உளவியல் ரீதியாகச் சிதைத்தே மீதமிருப்பவர்களையும் சிறுகச் சிறுகச் சாகடிக்கிறார்கள் இந்த சிறீலங்காவின் நவீன ஜம தூதர்கள்...

அவர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் கூர்ந்து பாருங்கள்... முகங்கள் அப்படியே சுருங்கி விட்டன...


படங்களில் உள்ள அனைவருமே தங்களின் பாசத்துக்குரிய உறவுகள் யாரையாவது நிச்சயம் இழந்திருப்பார்கள்... எத்தனை நாள் உணவின்றி இருந்திருப்பார்கள்...

ஒரு தமிழனாக உயிர் வாழுவதற்காய் அவர்கள் படும் அவலத்தை பார்க்க இதை விட நேரிடைச் சாட்சியம் எங்கும் கிடையாது....


புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று கூவிக் கொண்டு திரியும் சிறீலங்கா அரசு இன்னமும் ஏன் இவர்களைச் சித்திரவதை செய்கின்றது.

இவர்களால் இனி ஆயுதம் ஏந்த முடியுமா? அப்போ எதற்காக கொலைக் குற்றவாளி போல நிற்க வைத்து இந்தக் கேவலமான படப் பிடிப்புக்கள்...

இன்றைய நிலையில் தமிழ் மக்கள் இவர்களிடம் அப்படி என்ன கேட்டார்கள்... தற்போதைக்கு இருக்க ஒரு இடமும் குறைந்தது இரண்டு வேளையாவது சாப்பாடும்....


புலிகளை முன்னின்று கொன்றொளித்த இந்தியாவுக்கும் இவர்களின் வேதனை தெரிவதில்லை... சர்வதேசத்துக்கும் புரிவதில்லை..

எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒரு சிங்களவனை இப்படியாக நிற்கவைத்து படம் பிடித்திடுமா சிறிலங்கா அரசு?

இவர்களுக்கு குறைந்தது மனிதத் தன்மை கூட இல்லையா?

சிறீலங்காவின் நவீன தண்டனைகளை நித்தமும் அனுபவித்து வரும் தமிழ் மக்களைப் பற்றிப் பேசுவதற்கு இலங்கையில் ஆட்கள் இல்லை... உண்மையும் கூட..

ஏனெனில் இவர்களுக்காகப் பேசியவர்கள், போராடியவர்களை அழித்தும் இரண்டரை வருடங்கள் ஆகி விட்டனவே... இனி யார் பேசப் போகிறார்கள்...

உலகிலேயே தனது சொந்த நாட்டு மக்களையே இப்படிக் கொடூரமாக சிறுகச் சிறுக சித்திரவதை செய்து சாகடிக்கும் அரசு உள்ள நாடு சிறீலங்கா மட்டுமே...

புலிகளை அழித்து விட்டால் தமிழர்களின் உரிமையைக் கொடுத்து விடுவோம் என்று சொன்ன சிறிலங்கா அரசு மானம் மரியாதையோடு வாழ்ந்த தமிழ் மக்களை கள்ளன், காடையர்களை போல நிற்க வைத்துப் படம் பிடிக்கிறது...

சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இத்தகைய கேவலமான செயல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன..

கொடூர கொலைக்குற்றம் செய்தவர்கள் போல இந்த அப்பாவி மக்களை நிறுத்தப்படும் கொடூரம் உலகில் உள்ள எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்படக் கூடாது...

Wednesday, March 9, 2011

நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஷார்ட்கர்ட் கீகள் (Shortcut keys)





கணணியை அடிக்கடி பயன்படுத்துபவரா நீங்கள்? நீங்கள் கட்டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.

இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி பயன்படுத்துங்கள். பின் உறக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் இவற்றை நீங்கள் சரியாகச் சொல்வீர்கள்.

CTRL+C (Copy): தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் காப்பி செய்திட. காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம்.

CTRL+X (Cut): தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் நீக்கிட. நீக்கப்பட்டவை கிளிப் போர்டு மெமரியில் இருக்கும் அதனை பேஸ்ட் செய்து கொள்ளலாம்.

CTRL+V (Paste): ஏற்கனவே தேர்ந்தெடுத்ததை, கட் செய்ததை பேஸ்ட் செய்திட. இதற்குப் பதிலாக இன்ஸெர்ட் கீயையும் பயன்படுத்தலாம்.

CTRL+Z (Undo): சற்று முன் மேற்கொண்ட செயலை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வர.

DELETE (Delete): எதனையும் அழித்துவிட. இதனை மீண்டும் கொண்டு வர ரீசைக்கிள் பின்னில் தேட வேண்டும். தேடிப் பெறாமல் பேஸ்ட் செய்திட முடியாது.

SHIFT+DELETE: நிரந்தரமாக அழித்துவிட. இந்த கட்டளை மூலம் அழிக்கையில் அது ரீ சைக்கிள் பின்னுக்குப் போகாது.

F2 Key: பைல் ஒன்றின் பெயரை மாற்றிப் புதிய பெயரிட.

CTRL+RIGHT ARROW: ஒவ்வொரு சொல்லாக கர்சரைக் கொண்டு செல்ல.

CTRL+UP ARROW: முந்தைய பாராவின் முதல் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல.

CTRL: இந்த கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால் அதில் அடைபடும் டெக்ஸ்ட் அல்லது படம் செலக்ட் செய்யப்படும்.

CTRL+DOWN ARROW: அடுத்த பாராவில் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல.

SHIFT: இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும்.

ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்திய பின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் இந்த கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

CTRL+A: அனைத்தும் செலக்ட் செய்திட.

F3 Key: பைல் அல்லது போல்டரைத் தேட.

ALT+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும். இதில் பைல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ALT+F4: அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமை மூடலாம்.

ALT+SPACEBAR: எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான ஷார்ட் கட் திறக்கப்படும்.

CTRL+F4: ஒரே நேரத்தில் பல டாகுமெண்ட்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் நீங்கள் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைலை மூடுவதற்கு உதவும்.

ALT+TAB: திறந்திருக்கும் புரோகிராம்களில் ஒவ்வொன்றாகச் செல்ல உதவும். எந்த புரோகிராம் தேவையோ அதில் கர்சரை நிறுத்தி என்டர் செய்தால் அந்த புரோகிராம் திறக்கப்படும்.

ALT+ESC: டாஸ்க் பாரில் திறக்கப் பட்டுள்ள புரோகிராம் டேப்களில் ஒவ்வொன்றாகச் செல்லும். தேவையான புரோகிராம் தேர்ந்தெடுக்கப்படுகையில் கிளிக் அல்லது என்டர் செய்தால் அந்த புரோகிராமில் உள்ள பைல் ஸ்கிரீனில் காட்டப்படும்.

CTRL+ESC : ஸ்டார்ட் மெனு திறக்க.

F10 Key: ஒரு மெனுபாரினை இந்த கீ இயக்கத் தொடங்கும்.

ESC: அப்போதைய செயல்பாட்டினைக் கேன்சல் செய்திடும்.

Monday, March 7, 2011

மம்மி

மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.

சொற்றோற்றம்

மம்மி என்ற சொல் ஆங்கிலத்தின் மம்மி என்ற சொல்லிருந்தும், அச்சொல் இலத்தீன் மொழியின் மம்மியா என்ற பதத்திலிருந்தும், இலத்தீன் மொழிச் சொல், பாரசீக மற்றும் அராபிய மொழிகளில் உள்ள மும்மியா (مومية) என்ற பதத்திலிருந்தும் தோன்றியதாக அறியப்படுகிறது. பாரசீக மொழியில் இப்பதம் நிலக்கீல் எனப் பொருள்படும். மம்மிகளின் நிறம் கருநிற நிலக்கீலின் நிறத்தை ஒத்திருப்பதாலும், எகிப்திய சடலப்பதனிடலில் இப்பொருள் உபபோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதாலும் இப்பெயர் சூட்டப்பட்டதாக அறிய முடிகிறது.

திட்டமிட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகள்


பிரிதானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மம்மி.
பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன. மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்லாது முதலை, பூனை ஆகியவற்றின் சடலங்களும் பதனிடலாக்கப் பட்டன. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் குறிப்பிலிருந்து பாரசீகத்தில் சில அரசர்களின் சடலங்களும் மெழுகை பயன்படுத்தி பதனிடலாக்கப் பட்டதாக அறிய முடிகிறது. எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், பதனிடலில் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே. சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை.மற்றொரு பழமையான மம்மி நடு சகாராவில் உள்ள உன் முகுக்கியாக் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மம்மியாகும். இம்மம்மியின் அகவை சுமார் 5500 வருடங்களாகும்.

சீனாவில் 700 வருடங்கள் பழமையான மம்மி

சீனாவின் கிழக்கு பகுதியில் சுமார் 700 வருடங்கள் பழமையானதாகக் கருதப்படும் பெண் மம்மியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சீனாவின் ஜியாங்சு மாகாணத்தின் டயிசொவு என்ற நகரில் வீதிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களே இதனை முதலில் கண்டுள்ளனர்.


கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பெண் மம்மியானது 1368- 1644 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் வாழ்ந்த சீனாவின் மிங் அரச வம்சத்துப் பெண் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த மம்மியில் அணிவிக்கப்பட்டிருந்த ஆடையும் அதனைப் பறைசாற்றுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.


இதனுடன் வேறு இரு கல்லறைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த மம்மியானது மிகவும் நுணுக்கமான முறையில் பதனிடப்பட்டுள்ளது. தலை முதல் கால்பாதணிகள் வரை ஆச்சரியப்படத்தக்க வகையில் இது பாதுகாக்கப்பட்டுள்ளது.


இதன் கண் இமைகள், முடி, உடலின் தோல் ஆகியன இற்றைக்கும் மிஞ்சி இருப்பதானது, சீனர்களும் மனித உடல் பதனிடலில் சிறந்து விளங்கியமையை எடுத்துக்காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் வலது கையில் தோலானது பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்ததுடன் அதில் மோதிரமொன்றும் காணப்படுகின்றது.

இம் மம்மியின் உயரம் 1.5 மீற்றர்களாகும். மண் நிற திரவம் அடங்கிய சவப்பெட்டி ஒன்றினுள் இருந்தே இவ்வுடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பட்டு மற்றும் சிறிது பருத்தியினால் ஆன ஆடையே இம் மம்மிக்கு அணிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பட்டு மற்றும் பருத்தியை பாதுகாப்பது கடினம் என்ற போதிலும் இம் மம்மியில் அவை சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளதாக சீனாவின் வெங் வீயினில் உள்ள நூதனசாலை அதிகாரி ஒருவர் குறிப்பிடுகின்றார்.

Friday, March 4, 2011

கம்பியூட்டர்களின் முப்பாட்டன் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்! (பட இணைப்பு)

1949ல் பாவனையிலிருந்த கணினி இயந்திரம் ஒரு நொடியில் 650 கட்டளைகளை நிறைவேற்றக்கூடியது. EDSAC என்று இவை அழைக்கப்பட்டன.

1949ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சேர்.மொரிஸ் வில்கீஸ் தலைமையிலான குழுவினரே இதை உருவாக்கினர்.

1949 மே மாதம் 6ம் திகதி இது முதற்தடவையாகப் பாவனைக்கு வந்தது. இன்றைய நவீன கம்பியூட்டர்கள் இவ்வாறான 30 மில்லியன் கட்டளைகளை நிறைவேற்றக்கூடியவை.

இருப்பினும் இன்றைய கம்பியூட்டர்களுக்கு மூல காரணியாக அமைந்த அன்றைய கணினி இயந்திரம் அந்த கால கட்டத்தின் புரட்சிகரமான கணிப்பொறியாகும். இன்றைய கம்பியூட்டர்களை விட அன்றைய இயந்திரங்கள் 50000 மடங்கு மெதுவானவை.

அவற்றின் நினைவுப் பெட்டகப் பகுதியை மட்டும் வைத்திருப்பதற்கு தனியான அறையொன்று தேவைப்பட்டது. அவை 6 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவையாகக் காணப்பட்டன.



இருந்தாலும் அந்த கால கணிப்பொறி இயந்திரங்களை விட இவை 1500 மடங்கு வேகமானவை. பல வாரங்களுக்குத் தரவுகளைச் சேமித்து வைக்க்கூடியவை. அந்த கால கணினிகள் பிரிட்டிஷ் தேசிய நூதனசாலையில் இன்னமும் பாதுகாத்து வைக்கப்படடுள்ளன.

நவீன கம்பியூட்டர்களின் வழித்தோன்றல் இங்கிருந்து தான் ஆரம்பமாகின்றது. இவை இன்றைய கம்பியூட்டர்களின் முப்பாட்டன்கள் என்று நூதனசாலை அதிகாரயொருவர் வர்ணித்துள்ளார்.

அந்தகால கணிப்பொறியொன்றை வைத்திருக்க 215 சதுர அடி நிலப்பரப்புத் தேவைப்பட்டது. 3000 வேல்வுகளை அது கொண்டிருந்தது. ஆனால் இன்றை நவீன மடிக் கணினி யொன்று இலட்சக்கணக்கான டிரான்சிஸ்டர்களைக் கொண்டுள்ளது.

கம்பியூட்டர் தலைமுறையின் நினைவாக இது பிரிட்டிஷ் தேசிய நூதனசாலையில் இன்னமும் பத்திரமாகப் பேணப்பட்டு வருகின்றது.

புதுவித சொற்களஞ்சியம் (Dictationary)!

பொதுவாக டிக் ஷனரியில் ஒரு சொல்லுக்குப் பொருள் தேடுகையில், அதே மொழியில் விளக்கம் அளிக்கப்படும். அல்லது ஒரு மொழி சொல்லுக்கு இன்னொரு மொழி சொல் மற்றும் விளக்கம் அளிக்கப்படும்.

எடுத்துக்காட்டாக, ஆங்கிலம் தமிழ் அகராதியில், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொல் தரப்பட்டு, இலக்கணக் குறிப்புகளுடன் விளக்கம் கிடைக்கும்.

இணையத்தில் இன்னொரு புதிய வகை டிக் ஷனரி ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. இது டிக்ட்ஸ் இன்போ (Dicts Info) என்று அழைக்கப்படுகிறது. இதன் இணைய தளம் சென்றால், அங்கு எந்த சொல்லுக்கு பொருளும் இன்னொரு மொழிச் சொல்லும் வேண்டுமோ, அந்த சொல்லை அதற்கான கட்டத்தில் அமைக்க வேண்டும்.

பின்னர், எந்த எந்த மொழிகளில் உங்களுக்கு பொருள் வேண்டுமோ, அந்த மொழிகளையும் தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக்காட்டாக, Computer என்ற ஆங்கிலச் சொல்லைக் கட்டத்தில் அமைத்து, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பொருள் வேண்டும் என இந்த இரண்டு மொழிகளைத் தேர்ந்தெடுத்து Search கட்டத்தில் கிளிக் செய்திட வேண்டும்.

உடன் Universal Dictionary என்ற தலைப்புடன் ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற மூன்று பிரிவுகளில் சொற்களும் பொருளும் காட்டப்படும். எடுத்துக்காட்டாக, அளிக்கப்பட்ட Computer என்ற சொல்லுக்கு, ஆங்கிலத்தில் அதற்கான விளக்கமும், தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அதற்கு இணையான சொற்களும் தரப்படுகின்றன. இத்துடன் இந்த டிக் ஷனரி நின்று விடவில்லை.

உடன், கொடுக்கப்பட்ட சொல் தொடர்பான மற்ற சொற்களும் தரப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, Computer என்ற சொல் தரப்பட்டபோது, Program, Calculator, Software, Computer Science என்ற சொற்களும், பொருளும் தரப்பட்டன.

இந்த டிக் ஷனரியைப் பெற http://www.dicts.info என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

Wednesday, February 2, 2011

இணைப்பேன் என் தமிழ் சமுதாயத்தை... - முத்துக்குமார்



அவனும் நானும் ஒரே இனம். என் சகோதர சகோதரிகள் கொல்லப்படும் போது நான் அழக் கூடாதென அச்சுறுத்துகிறது இந்தியாவின் இறையாண்மை. எம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கழுத்தறுபடும் போது வாடாதிருக்கிறது என் தேசம். இந்த அவலத்திற்கு காரணம் சீனாவின் பீரங்கிகளும், இந்தியா பாகிஸ்தானின் விமானங்கள் மட்டும் தானா? சர்வதேசத்தின் மௌனமும் தானே?
களைப்பேன் இந்த மௌனத்தை!
இணைப்பேன் என் தமிழ் சமுதாயத்தை... - முத்துக்குமார்

Wednesday, January 19, 2011

பிரபாகரன்! மகிழ்ச்சி செய்தி!

விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், ""பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது'' என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், ""பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'' என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வர... உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.

""சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்தஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள்.

பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற் கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா' அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணி களின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித் தது'' என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

இந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தி னோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது.

ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை ராணுவத்துடன் நடை பெற்ற மோதலில் இவர் மரணமடைந்து மாவீரர் ஆகிவிட்டார்.

அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப் பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன்... ""நான் தமிழீழக் கனவை நினை வாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தப்பித்துச் சென்றுகொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்'' என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். "அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார்' என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.

கடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக் கிறார்கள். "தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும் போது தலைவர் வெளி யே வருவார்' என ரூபன் சொன்ன செய்தி யைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்கள்.

அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின் போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள்.

தமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.

Tuesday, August 17, 2010

தி அண்டர்டேக்கர்

தி அண்டர்டேக்கர்
Ring பெயர்(கள்) கெய்ன் தி அண்டர்டேக்கர்[1]
"மீன்" மார்க் கலஸ்[1]
தி பணிசர்[2]
டெக்சாஸ் ரெட்[1]
(தி) அண்டர்டேக்கர்[3]
அறிவிப்பு உயரம் 6 ft 10.5 in (2.10 m)[3]
அறிவிப்பு எடை 299 lb (136 kg)[3]
பிறப்பு மார்ச் 24 1965 (அகவை 45)[4]
ஹூஸ்டன், டெக்சாஸ்
வசிப்பு ஆஸ்டின், டெக்சாஸ்
அறிவித்தது டெத் வலி[3] (1990–1999, 2004–present)
ஹூஸ்டன், டெக்சாஸ் (1984–1990, 2000–2003)
பயிற்சியாளர் Don Jardine[1]
அறிமுகம் 1984[5]

அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரரான மார்க் வில்லியம் காலவே (பிறப்பு மார்ச் 24, 1965) தி அண்டர்டேக்கர் என்ற தன்னுடைய ரிங் பெயரால் நன்கறியப்படுபவர். அவர் வேர்ல்ட் ரஸ்ட்லிங் எண்டர்டெயின்மெண்ட் (டபிள்யுடபிள்யுஇ) உடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார், தற்போது அவர் நடப்பு உலக ஹெவிவெயிட் சாம்பியனாக இருக்கும் ஸ்மாக்டவுன் பிராண்டில் மல்யுத்தம் செய்து வருகிறார்.

காலவே 1984 இல் வேர்ல்ட் கிளாஸ் சாம்பியன்ஷிப் ரஸ்ட்லிங் உடன் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 1989 ஆம் ஆண்டு வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ரஸ்ட்லிங்கில் (டபிள்யுசிடபிள்யு) "மீன்" மார்க் காலஸாக சேர்ந்தார். டபிள்யுசிடபிள்யு காலவேயின் ஒப்பந்தத்தை 1990 இல் புதுப்பிக்காததால் அவர் வேர்ல் ரஸ்ட்லிங் ஃபெடரேஷனில் (பின்னாளில் 2002 ஆம் ஆண்டில் வேர்ல்ட் ரஸ்ட்லிங் எண்டர்டெயின்மெண்ட் ஆனது) அந்த ஆண்டு நவம்பர் மாதமே தி அண்டர்டேக்கராக சேர்ந்தார். அந்த நிறுவனத்துடனே இருந்துவிட்ட காலவே தற்போது டிபிள்யுடிபிள்யுஇ இன் மூத்த உறுப்பினர்களுள் ஒருவராக இருந்துவருகிறார். ஷான் மைக்கேலுடன் இணைந்து தி அண்டர்டேக்கர் இப்போதும் இந்த நிறுவனத்துடனே இருக்கும் மண்டே நைட் ரா வின் முதல் அத்தியாயத்தில் தோன்றிய ஒரே இரண்டு முழுநேர மல்யுத்த வீரர்கள் ஆவர்.

தி அண்டர்டேக்கர் இரண்டு முரண்பாடான உத்திகளை கையாளுகிறார்: டெட்மேன் மற்றும் அமெரிக்கன் பேட் ஆஸ். தி அண்டர்டேக்கருடன் தொடர்புடைய சிறப்பு ஆட்டங்கள் (அல்லது மிகவும் குறிப்பிட்ட வகையில் அவருடைய "டெட்மேன்" ஆளுமை) கேஸ்கட் மேட்ச், பரீட் அலைவ் மேட்ச், புகழ்பெற்ற ஹெல் இன் எ செல், மற்றும் லாஸ்ட் ரைட் மேட்ச் ஆகியனவாகும். அண்டர்டேக்கரின் ஒன்றுவிட்ட சகோதரர் கேன் ஆவார், இருவரும் இணைந்து பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் மல்யுத்தம் செய்திருக்கின்றனர். தி அண்டர்டேக்கர் 17–0 என்ற வித்தியாசத்தில் ரஸில்மேனியாவில் வெற்றிபெற்றிருக்கிறார் என்பதுடன் அது டபிள்யுடபிள்யுஇ ஆல் ஏழு முறை உலக சாம்பியன் என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது, அத்துடன் நான்கு முறை டபிள்யுடபிள்யுஇ சாம்பியன்ஷிப் மற்றும் மூன்று முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறார். அவர் ஒருமுறை டபிள்யுடபிள்யுஎஃப் ஹார்ட்கோர் சாம்பியனாகவும் இருந்திருக்கிறார் என்பதோடு டபிள்யுடபிள்யுஎஃப் டேக் டீம் சாம்பியன்ஷிப்பை ஆறுமுறையும், டபிள்யுசிடபிள்யு டேக் டீம் சாம்பியன்ஷிப்பை ஒருமுறையும் வென்றிருக்கிறார். தி அண்டர்டேக்கர் 2007 ராயல் ரம்பிளின் வெற்றியாளர் என்பதுடன் 30 வது எண்ணில் இந்த ரம்பிளை வென்ற முதலாமவரும் ஆவார்.

மல்யுத்த தொழில் வாழ்க்கை

ஆரம்பகால வாழ்க்கை (1984-1990)

காலவே "டெக்ஸாஸ் ரெட்" என்ற ரிங் பெயரில் 1984 ஆம் ஆண்டு வேர்ல்ட் கிளாஸ் சாம்பியன்ஷிப் ரஸ்ட்லிங்கில் அறிமுகமானார்[5]. அவர் முதல் ஆட்டத்தில் புரூஸர் பிராடிக்கு எதிராக மல்யுத்தம் புரிந்து தோல்வியடைந்தார்.[5] 1988 இல், நான்கு வருட முன்னேற்றத்திற்குப் பின்னர் அதிலிருந்து விலகி அவர் காண்டினெண்டல் ரஸ்ட்லிங் அசோசியேஷனில் (பின்னாளில் ஜெர்ரி ஜேரட் சிடபிள்யுஏ மற்றும் டபிள்யுசிசிடபிள்யுவை ஒன்றாக இணைத்த பின்னர் யுனைட்டட் ஸ்டேட்ஸ் ரஸ்ட்லிங் அசோசியேஷன் ஆனது) இணைந்து சில உத்திகளுடன் மல்யுத்தம் செய்தார். 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 இல், "தி மாஸ்டர் ஆஃப் பெய்ன்" என்ற மேடைப் பெயரில் ஜெர்ரி "தி கிங்" லாலரை தோற்கடித்து தனது முதல் தொழில்முறை மல்யுத்தப் பட்டமான யுஎஸ்டபிள்யுஏ யுனிஃபைட் வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை வெல்ல தீர்மானிக்கப்பட்டார். "தி பனிஷ்ஷராக" செயல்பட்டபோது எரிக் எம்ப்ரே டபிள்யுசிடபிள்யுஏ டெக்ஸாஸ் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை இழந்தபோது 1989 அக்டோபர் 5 இல் காலவே அந்தப் பட்டத்தை வென்றார்.[6]

அவருடைய முதல் மையநீரோட்ட வெளிப்பாடு 1989 ஆம் ஆண்டு பிற்பகுதியில் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ரஸ்ட்லிங்கில் அவர் சேர்ந்தபோது நிகழ்ந்தது. அங்கிருக்கையில், அவர் "மீன்" மார்க் காலஸ் என்று அறியப்பட்டார் என்பதுடன் டெடி லாங்கின் நிர்வாகத்தின் கீழ் "டேன்ஜசரஸ்" டான் ஸ்பைவி உடன் "ஸ்கைகிராப்பர்ஸ்" டேக் டீமின் ஒரு பகுதியாக மல்யுத்தம் செய்தார்.[7] ஸ்கைகிராப்பர்ஸில் அவர் இருந்த காலகட்டத்தில் அவரும் ஸ்பைவியும் ரோட் வாரியர்ஸ் உடனான நீண்டபகையில் ஈடுபட்டனர்,[8] ஆனால் அந்த நீண்டபகை முடிவுக்கு வரும் முன்னரே ஸ்பைவி விலகிவிட்டார்.

அவர் ஒற்றையர்கள் போட்டிக்கு சென்றுவிட்டதால் காலவே பால் இ.டேன்ஜரஸ்லியின் வழிகாட்டுதலை பின்பற்றியதோடு கேப்பிடல் காம்பாட்டில் ஜானி ஆஸ் மற்றும் கிளாஷ் ஆஃப் த சாம்பியன்ஸில் பிரைன் பில்மேன் ஆகியோரைத் தோற்கடித்தார். 1990 தி கிரேட் அமெரிக்கன் பாஷில் என்டபிள்யுஏ யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பிற்காக லெக்ஸ் லங்கருக்கு எதிராக அவர் மல்யுத்தம் செய்தார் ஆனால் லங்கர் அவரை சுற்றுக்கம்பியில் வைத்து கட்டிவிட்டதால் அவர் தோல்வியடைந்தார். 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 இல் நடைபெற்ற ஒரு நேரடிப் போட்டியில் என்டபிள்யுஏ வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன் ஸ்டிங்கிற்கான அவருடைய கடைசி ஆட்டத்தில் அவர் தோல்வியடைந்த பின்னர் டபிள்யுசிடபிள்யு அவருடைய ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க மறுத்துவிட்டது.

டபிள்யுசிடபிள்யுவில் அவருடைய தடையின்போது, காலவே விரைவிலேயே நியூ ஜப்பான் புரோ ரஸ்ட்லிங்கில் பனிஷ்ஷர் டைஸ் மார்கனாக மல்யுத்தம் செய்தார். டபிள்யுசிடபிள்யு ஐ விட்டு விலகிய பின்னர், அவர் விரைவிலேயே யுஎஸ்டபிள்யுஏ யுனிஃபைட் வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியனைத் தீர்மானிக்கும் போட்டியில் பங்கேற்க அவர் யுஎஸ்டபிள்யுஏவிற்கு திரும்பினார்; அவர் முதல் சுற்றிலேயே பில் டண்டியை தோற்கடித்தார், ஆனால் காலிறுதி ஆட்டங்களில் ஜெர்ரி லாலரிடம் தோல்வியடைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்டோபரில், அவர் வேர்ல்ட் ரஸ்ட்லிங் ஃபெடரேஷனுடன் (டபிள்யுடபிள்யுஎஃப்) ஒப்பந்தம் செய்துகொண்டார்.

வேர்ல்ட் ரஸ்ட்லிங் ஃபெடரேஷன்/எண்டர்டெயின்மெண்ட் (1990-தற்சமயம்)

அறிமுகமும் பல்வேறு நீண்டபகையும் (1990–1994)

1990 ஆம் ஆண்டு நவம்பர் 19 இல் டபிள்யுடபிள்யுஎஃப் சூப்பர்ஸ்டார்ஸ் அறிமுகத்தின்போது "கெய்ன் தி அண்டர்டேக்கர்" என்ற பெயரில் காலவே அறிமுகமானார்.[9] தி அண்டர்டேக்கரின் முதல் டெட்மேன் ஆளுமை தோற்றமானது பழுப்பு கையுறைகள் மற்றும் காலணி உறைகளுடன் நீளமான மேல்கோட்டு கறுப்பு தொப்பியும் அணிந்து பழங்கால மேற்கத்திய திரைப்படங்களில் வரும் சவப்பெட்டி சுமப்பவரின் நினைவாக முன்மாதிரியாக அமைக்கப்பட்டது. இந்த டெட்மேன் ஆளுமையின் கீழ் அவர் "வலியால் பாதிக்கப்படாதவர்" அவருடைய எதிரிகளால் தாக்கப்படும்போது எந்தவிதத்திலும் எதிர்வினையாற்றாமல் இருக்கச்செய்யும் ஏதோ ஒன்று காலவேயுன் இருக்கிறது. அவர் தி அண்டர்டேக்கர் என்றே அழைக்கப்பட்ட டெட் டிபயாஸின் மில்லியன் டாலர் அணியின் மாயக் கூட்டாளியாக இருந்தபோது ஹீல் என்ற பெயரில் சர்வைவர் சீரிஸில் நவம்பர் 22 இல் நேரடியாக கேமரா முன்பு முதல்முறையாக காலவே தோன்றினார்.[10] ஏறத்தாழ போட்டியின் ஒரு நிமிடத்திலேயே தன்னுடைய ஃபினிஷ்ஷரான டூம்ஸ்டோன் பைல்டிரைவரைக் கொண்டு கோகோ பி.வேரை தி அண்டர்டேக்கர் தோற்கடித்தார். தோல்வியாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அவர் டஸ்டி ரோட்ஸை தோல்வியுறச் செய்தார். சர்வைவர் சீரிஸிற்கு வெகுவிரைவிலேயே, தன்னுடைய பெயரிலிருந்து "கெய்ன்" என்பதை எடுத்துக்கொண்டு அவர் வெறுமனே தி அண்டர்டேக்கர் என்று அழைக்கப்பட்டார். அந்த நேரத்தில்தான் தி அண்டர்டேக்கர் மேலாளர்களை பிரதர் லவ்விடமிருந்து பால் பியரருக்கு என்று மாற்றினார் - இந்த பால் பியரர் ஒரு வரலாற்றுப்பூர்வமான, பேய்க் கதாபாத்திரம் என்பதுடன் தி அண்டர்டேக்கர் மாய சக்தியைப் பெற்று தன்னுடைய பலத்தை உயிர்ப்பித்துக்கொள்ள எல்லா ஆட்டங்களிலும் ஒரு சாம்பல் கோப்பையை சுமந்தபடி தோன்றுபவராவார். வளையத்திற்குள் தன்னுடைய எதிரிகளை வீழ்த்திய பிறகு, வீழ்த்தப்பட்டவரை ஒரு பிண உறையில் சுற்றி திரும்ப எடுத்துச்செல்லும் ஆட்டத்திற்கு பிந்தைய ஒரு சம்பிரதாயத்தை அவர் செய்வார்.[11]

ரஸில்மேனியா VII இல் அவர் தன்னுடைய ரஸில்மேனியா அறிமுகத்தை தொடங்கினார், "சூப்பர்ஃபிளை" ஜிம்மி ஸ்னுக்காவை வெகு விரைவாக வீழ்த்தினார்.[12] இந்த வெற்றி அந்தப் போட்டியில் அவருடைய தோல்வியுறாத வரிசையில் முதலாவதாகும். அவர் தன்னுடைய முக்கியமான நீண்டபகையை, அவருடைய மேலாளரான பால் பியரரின் ஃபுனரல் பார்லர் நேர்காணல் பகுதியின் தளத்தில் தி அல்டிமேட் வாரியரைத் தாக்கி காற்றுப்புகாத கலசம் ஒன்றில் பூட்டிய பின்னர் வாரியருடன் தொடங்கினார். வாரியர், ராண்டி சாவேஜ்,[10] சர்ஜெண்ட் ஸ்லாட்டர், மற்றும் ஹல்க் ஹோகன் ஆகியோருடனான நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவர் ஹோகனை தோற்கடித்து சர்வைவர் சீரிஸில் தனது முதல் டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன்ஷிப்பை வென்றார்.[13] டபிள்யுடபிள்யுஎஃப் தலைவரான ஜேக் டுன்னே ஆறு நாட்களுக்குப் பின்னர் தி அண்டர்டேக்கர் அந்தப் பட்டத்தை மீண்டும் ஹோகனிடம் இழக்கச் செய்த திஸ் டியூஸ்டே இன் டெக்ஸாஸ் போட்டியை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவிட்டார்.[13]

பிப்ரவரி 1992 இல், தி அண்டர்டேக்கரின் கூட்டாளியான ஜேக் "தி ஸ்நேக்" ராபர்ட்ஸ் ராண்டி சாவேஜின் மேலாளர்/மனைவி மிஸ் எலிசபெத்தை ஒரு இரும்பு நாற்காலியால் தாக்க முயற்சித்தபோது தி அண்டர்டேக்கர் தடுத்து நிறுத்தி முதல்முறையாக ரசிகர்களின் விருப்பத்திற்குரியவர் ஆனார். பிறகு தி அண்டர்டேக்கர் ராபர்ட்ஸை ரஸில்மேனியா VIII இல் தோற்கடித்தார்.[12] பிறகு அவர் ஹார்வி விப்பிள்மேன் நிர்வாகத்தின் கீழ் இருந்த மல்யுத்த வீரர்களுடன் 1992 மற்றும் 1993 முழுவதும் நெடுநாட்களுக்கு நீண்டபகையில் இருந்தார், இது சர்வைவர் சீரிஸில் டபிள்யுடபிள்யுஎஃப் வரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல் சவப்பெட்டி போட்டியில் அவர் எதிர்கொண்டு தோற்கடித்த கமலா,[13][14] மற்றும் ரஸில்மேனியா IX இல் அவர் தகுதியிழப்பு போட்டியிலும், ரெஸ்ட் ஆஃப் த பீஸில் சம்மர்ஸ்லாமில் நடந்த பின்பால் போட்டியிலும் அவர் தோற்கடித்த ஜியண்ட் கோன்ஸல்ஸ் ஆகியோரையும் உள்ளிட்டிருக்கிறது.[12][14] 1994 ஜனவரியில், அவர் டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன் யோகசுனாவை ராயல் ரம்பிளில் நடந்த கேஸ்கட் போட்டியில் சவாலுக்கழைத்தார். ராயல் ரம்பிளில், வேறுசில எதிர் மல்யுத்த வீரர்களின் உதவியோடு யோகசுனா தி அண்டர்டேக்கரை ஒரு கலசத்தில் அடைத்து போட்டியை வென்றார். வீடியோ திரையில் கலசத்திற்குள்ளிருந்து தி அண்டர்டேக்கரின் "ஆவி" தோன்றி தான் மீண்டும் வருவேன் என்று எச்சரிக்கிறது.[15]

[தொகு] மறுவருகை; மேன்கைண்ட் உடன் நீண்டபகை (1994–1997)


பால் பியரர் இங்கே காணப்படுவது போன்று கையில் வைத்திருக்கும் கலசத்தால் அண்டர்டேக்கரை தாக்கி துரோகம் செய்கிறார்.

ரஸில்மேனியா Xக்குப் பின்னர், டெட் டிபியாஸ் மீண்டும் டபிள்யுடபிள்யுஎஃப்பிற்கு ஒரு அண்டர்டேக்கரை அறிமுகம் செய்தார். இருப்பினும் பிரைன் லீயால் பாத்திரமேற்கப்பட்ட இந்த அண்டர்டேக்கர் ஆள்மாறாட்ட அண்டர்டேக்கர் ("அண்டர்ஃபேக்கர் " என்று குறிப்பிடப்பட்டார்) என்பதோடு இது உண்மையான அண்டர்டேக்கர் சம்மர்ஸ்லாமிற்கு திரும்பிவர வழிவகுத்தது, பழுப்பு நிறத்தை கருஞ்சிவப்பு நிறத்திற்கு மாற்றிக்கொண்ட அவரது அசலான டெட்மேன் ஆளுமையின் புதிய வடிவமாகத் தோன்றினார். தி அண்டர்டேக்கர் போலியானவரை மூன்று டூம்ப்ஸ்டோன் பைல்டிரைவர்களுக்குப் பின்னர் தோற்கடித்தார்.[15] சர்வைவர் சீரிஸில் மற்றொரு கேஸ்கட் போட்டியாக மறுமுறை நடத்தப்பட்ட போட்டியில் யோகசுனாவைத் தி அண்டர்டேக்கர் தோற்கடித்தார். 1995 ஆம் ஆண்டின் பெரும்பாலும் டெட் டிபியாஸின் மில்லியன் டாலர் கார்ப்பரேஷன் உறுப்பினர்களோடு நீண்டபகை கொண்டிருந்தார். ரஸில்மேனியா XI இல், கிங் காங் பண்டியை அண்டர்டேக்கர் எதிர்கொள்கையில், காமா அண்டர்டேக்கரின் சாம்பல் கோப்பையைத் திருடி அதனை பெரிய தங்க நெக்லஸில் கரைத்து அவரை வெறுப்பூட்டி தாக்கினார்.[15] பின்னர், சம்மர்ஸ்லாமில் நடந்த கேஸ்கட் போட்டியில் தி அண்டர்டேக்கர் காமாவைத் தோற்கடித்தார்.[15] சில வாரங்கள் கழித்து, தி அண்டர்டேக்கருக்கு கண் வளைய எலும்பிற்கு அருகாமையில் ஏற்பட்ட காயத்தால் அவர் சர்வைவர் சீரிஸூக்கு திரும்பும்வரை அறுவை சிகிச்சைக்காக போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

தி அண்டர்டேக்கர் 1995 ஆம் ஆண்டு சர்வைவர் சீரிஸூக்கு மாயாவி போன்ற பழுப்பு மேல்புற முகமூடி அணிந்து மீண்டும் திரும்பி வந்தார். ராயல் ரம்பிளில் பிரட் ஹார்ட்டிற்கு எதிரான டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன்ஷிப் போட்டியில் டீஸல் குறுக்கிட்டதால் தி அண்டர்டேக்கரின் முகமூடி கிழி்க்கப்பட்டதானது அவர் தன்னுடைய சாம்பியன்ஷிப்பை விலையாகக் கொடுக்க வேண்டிவந்தது. இன் யுவர் ஹவுஸ்: ரேஜ் இன் த கேஜில் ஒரு மாதத்திற்குப் பின்னர் நடந்த ஒரு இரும்புக் கூண்டு போட்டியில் டீஸல் ஹார்ட்டை எதிர்கொண்டபோது தி அண்டர்டேக்கர் வளையத்தின் அடியிலிருந்து சட்டென்று வெளிவந்தது டீஸலைக் கீழே தள்ளியது ஹார்ட் வெற்றிபெற உதவியது. இந்த நீண்டபகை ரஸில்மேனியா XII இல் டீஸலுக்கும் அண்டர்டேக்கருக்கும் இடையே நடந்த போட்டியில் உச்சத்திற்கு வந்தது, இதில் தி அண்டர்டேக்கர் வெற்றிபெற்றார்.

அவருடைய அடுத்த நீண்டபகை ஜஸ்டின் ஹாக் பிராட்ஷாவுடன் அண்டர்டேக்கருக்கு போட்டி நடந்துகொண்டிருக்கையில் இடையில் வந்த மேன்கைண்ட் அறிமுகமான அடுத்த நாள் இரவே தொடங்கியது. அடுத்த சில மாதங்களுக்கு, மேன்கைண்ட் பதுங்கித் தாக்கியதானது தி அண்டர்டேக்கர் சில போட்டிகளில் தோற்கடிக்கப்படுவதற்கு காரணமானது. இந்த நீண்டபகை தீவிரமடைந்து அவர்கள் கூட்டத்தினரிடையேயும், மேடைக்குப் பின் பகுதிகளிலுள்ள பல்வேறு அரங்குகளிலும் மோதிக்கொள்ளத் தொடங்கினர். இதன் விளைவாக சம்மர்ஸ்லாமில் இவர்கள் இருவருக்கும் இடையே முதல்முறையாக பாய்லர் ரூம் பிரால் தீர்மானிக்கப்பட்டது. இந்தப் போட்டியின்போது, அண்டர்டேக்கர் பால் பியரரின் சாம்பல் கோப்பையை எட்டியபோது பியர் அதனால் அடித்து தி அண்டர்டேக்கருக்கு துரோகம் செய்தார் என்பதோடு மேண்கைண்ட் தி அண்டர்டேக்கரை மேண்டிபிள் கிளா கொண்டு "பலவீனப்படுத்தி" வெற்றிபெற உதவி செய்தார். பியரின் இந்த துரோகத்திற்குப் பின்னர் தி அண்டர்டேக்கர் மேன்கைண்டுடனான தனது விரோதத்தை புதிய மட்டத்திற்கு கொண்டுசென்றார், இது இன் யுவர் ஹவுஸ்: பரீட் அலைவில் பரீட் அலைவ் போட்டிக்கு இட்டுச்சென்றது. திறந்தவெளி கல்லறையில் நடந்த சோக்ஸ்லாமிற்குப் பின்னர் தி அண்டர்டேக்கர் வெற்றிபெற்றார், ஆனால் தி எக்ஸிகியூஷனரின் இடையீட்டிற்குப் பின்னரும் மற்ற சூப்பர்ஸ்டார்களின் உதவியாலும் தி அண்டர்டேக்கர் முடிவில் "உயிருடன் புதைக்கப்பட்டார்". உயிருடன் புதைக்கப்பட்டதற்குப் பின்னர், மேன்கைண்டிற்கு எதிராக மீண்டும் சர்வைவர் சீரிஸூக்கு தி அண்டர்டேக்கர் திரும்பினார், ஆனால் ஒரு பிரத்யேகமான ஒரு கட்டுப்பாடு இருந்தது; வளையத்திற்கு20 ft (6.1 m) மேலே பால் பியரர் ஒரு இரும்புக் கூண்டில் தொங்கவிடப்பட்டிருந்தார். அண்டர்டேக்கர் அந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் அவர் பியரருக்கு கைகொடுக்கலாம். தி அண்டர்டேக்கர் இந்தப் போட்டியில் வென்றார் என்றாலும் தி எக்ஸிகியூஷனரின் குறுக்கீட்டினால் பியரர் தி அண்டர்டேக்கரின் பிடிகளிலிருந்து தப்பிச் செல்லலாம். வந்ததிலிருந்து தனக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் தி எக்ஸிகியூனரின் பக்கம் தி அண்டர்டேக்கர் சட்டென்று தன் கவனத்தைத் திருப்பினார். இன் யுவர் ஹவுஸ்: இட்ஸ் டைம் இல் தி அண்டர்டேக்கர் ஒரு ஆர்மகடான் விதிகள் போட்டியில் தி எக்ஸிகியூஷனரைத் தோற்கடித்தார். 1996 ஆம் ஆண்டின் முடிவில் தி அண்டர்டேக்கர் வேடார் உடனான நீண்ட பகையைத் தொடங்கினார், இது புதிய பாதுகாப்பின் கீழிருப்பவரின் சார்பாக ராயல் ரம்பிளில் பியரரின் குறுக்கீட்டனால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் முற்றியது. இந்தத் தோல்விக்குப் பின்னர் தி அண்டர்டேக்கர் டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன்ஷிப்பில் தன்னுடைய கவனத்தை செலுத்தத் தொடங்கினார்.

ஹெல் இன் எ செல்; பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்ஷன் (1997–1998)



தி அண்டர்டேக்கர் தன்னுடைய லார்ட் ஆஃப் டார்க்னெஸ் உடையுடன்

ரலிஸ்மேனியா 13 இல் தி அண்டர்டேக்கர் டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன்ஷிப்பாற்கான போட்டியில் சைக்கோ சித்தை தோற்கடித்தார், இது அவரை இரண்டாவது முறையாக டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன்ஷிப்பைப் பெற்றவராக்கியது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தி அண்டர்டேக்கரின் "மிகப்பெரிய ரகசியத்தை" வெளிப்படுத்திவிடுவேன் என்ற அச்சுறுத்தலைப் பயன்படுத்தி பால் பியரர் தி அண்டர்டேக்கருடன் இணைய முயற்சி செய்தார். இந்தக் கதைத்தொடரில், தி அண்டர்டேக்கர் ஒரு கொலைகாரன் என்று பியரர் அறிவித்தார், அவர் குழந்தையாக இருக்கையில் குடும்பத் தொழிலான இறுதி அஞ்சலி ஏற்பாடு செய்தலை (அங்குதான் பியரர் பணிபுரிந்தார்) அழித்து தன்னுடைய பெற்றோர்களையும், இளம் ஒன்றுவிட்ட சகோதரனையும் கொலை செய்தார். பியரருக்கு இந்தத் தகவல் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தி அண்டர்டேக்கர் கருதினார், ஆனால் பியரர் இதனை பயங்கரமான முறையில் எரிந்தும் அச்சமூட்டப்பட்டும் வைக்கப்பட்டிருக்கின்ற ஆனால் உயிருடன் இருக்கின்ற அண்டர்டேக்கரின் ஒன்றுவிட்ட சகோதரரான கேனிடம் கூறிவிட்டதாக அறிவிக்கிறார். தான் பாதுகாத்து வைத்திருக்கும் கேனை பியரர் நெருப்பிலிருந்து தோன்றச் செய்கிறார். இத்தனை வருடங்களுக்குப் பிறகு கேன் இப்போது பழிவாங்குவதற்காக காத்திருக்கிறார். பாதுகாப்பு வழிமுறையாக, தீப்பற்ற வைப்பதில் கேன் பித்துகொண்டவர் என்றும் அவர்தான் தீயைப் பற்றவைத்தார் என்பதால் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் தி அண்டர்டேக்கர் பதிலளிக்கிறார்.

அவருடைய அடுத்த பெரிய கதைவரிசை, 1997 இல் சம்மர்ஸ்லாம் போட்டியின்போது ஆட்ட நடுவரான ஷான் மைக்கேல்ஸ் பிரட் ஹார்ட்டை அடிப்பதற்கு பதிலாக தவறுதலாக தி அண்டர்டேக்கரை ஒரு இரும்பு நாற்காலியால் அடித்து அண்டர்டேக்கர் தன்னுடைய டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன்ஷிப்பை இழக்கச் செய்ததிலிருந்து தொடங்குகிறது. இந்த நீண்டபகையானது முதல்முறையாக ஹெல் இன் எ செல் போட்டியில் தி அண்டர்டேக்கர் மைக்கேல்ஸை சவாலுக்கழைத்த இன் யுவர் ஹவுஸ்: பேட் பிளட் இல் முற்றியது. இந்தப் போட்டியின்போது தி அண்டர்டேக்கரின் கதைவரிசையான ஒன்றுவிட்ட சகோதரர் கேனின் அறிமுகம் நடக்கிறது, அவர் செல்லின் கதவை உடைத்து தி அண்டர்டேக்கருக்கு அவருடைய டிரேட்மார்க் ஃபினிஷ்ஷரான டூம்ப்ஸ்டோன் பைல்டிரைவரை கொடுக்கிறார், இது மைக்கேல்ஸை தோற்கடிக்க உதவுகிறது. இந்தப் போட்டி டேவ் மெல்ட்ஸரிடமிருந்து ஐந்து நட்சத்திர தரவரிசையைப் பெற்றது. இந்தக் கதைவரிசை வளர்ச்சியுறுகிறது, கேன், பால் பியரருடன் சேர்ந்து தி அண்டர்டேக்கரை சண்டைக்கு அழைக்கிறார் ஆனால் தி அண்டர்டேக்கர் தனது சகோதரருடன் சண்டையிட தொடர்ந்து மறுத்து வருகிறார். டி-ஜெனரேஷன் தாக்குதலிலிருந்து அண்டர்டேக்கரை கேன் பாதுகாத்த பின்னர் விரைவிலேயே தி அண்டர்டேக்கரும் கேனும் கூட்டுசேர்கிறார்கள். மைக்கேல்ஸூடனான தி அண்டர்டேக்கரின் இறுதி மோதல் ராயல் ரம்பிளில் மீண்டும் நடந்த கேஸ்கெட் போட்டியில் நடக்கிறது, அங்கு கேன் தி அண்டர்டேக்கருக்கு துரோகமிழைக்கிறார் என்பதோடு சவப்பெட்டியில் மாட்டிக்கொள்ளச் செய்து, சாம்பல் கலசத்தை பூட்டி அதைத் தீயிலிட்டு அவருடைய வெற்றிவாய்ப்பை இழக்கச் செய்கிறார். இருப்பினும் தி அண்டர்டேக்கர் சாம்பல் கோப்பையின் மூடி மீண்டும் திறந்தவுடன் காணாமல் போகிறார். இரண்டு மாத பிரிவிற்குப் பின்னர் ரஸில்மேனியா XIV இல் தி அண்டர்டேக்கர் கேனை தோற்கடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் முதல்முறையாக நடக்கும் இன்ஃபெர்னோ போட்டியான மறுபோட்டி நடக்கிறது, ஒரு மாதத்திற்குப் பின்னர்Unforgiven: In Your House தி அண்டர்டேக்கர் கேனின் இடதுகையில் தீப்பற்றவைத்து வெற்றிபெறுகிறார்.

அதன்பிறகு மேன்கைண்ட் உடனான தி அண்டர்டேக்கரின் நீண்டபகை புதுப்பிக்கப்படுகிறது என்பதுடன், அவர்கள் கிங் ஆஃப் த ரிங்கில் நடந்த ஹெல் இன் எ செல் போட்டியில் ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றனர். இந்தப் போட்டியின்போது, தி அண்டர்டேக்கர் மேன்கைண்டை செல்லின் கூரையிலிருந்து16 ft (4.9 m) ஸ்பானிஷ் அறிவிப்பு மேசைக்கு கீழே வீசியெறிந்தார், இது ஒரு முன்திட்டமிட்ட நடவடிக்கையாக இருந்தது. பின்னர் அவர் செல்லின் கூரையிலிருந்து வளையத்திற்குள்ளாக மேன்கைண்டை சோக்ஸ்லாம் செய்து முறைப்படி மேன்கண்டை மயக்கமுறச் செய்தார் என்பதுடன் மேன்கைண்டை டூம்ஸ்டோன் பைல்டிரைவிங் செய்து போட்டியை முடிவுறச் செய்தார்.


தி அண்டேர்டேக்கர் பல்வேறு முறைகள் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரரான கேன் உடன் நீண்டபகை கொண்டும் அவருடன் இணைந்தும் இருக்கிறார்.

ஃபுல்லி லோடடில் டபிள்யுடபிள்யுஎஃப் டேக் டீம் சாம்பியன்ஷிப்பை வெல்ல தி அண்டர்டேக்கரும் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினும் கேன் மற்றும் மேன்கைண்டை தோல்வியுறச் செய்தனர். டேக் டீம் சாம்பியன்களாக தி அண்டர்டேக்கர் மற்றும் ஆஸ்டினின் ஆட்சி ரா இஸ் வார் அத்தியாயத்தில் இந்தப் பட்டங்களை கேனும் மேன்கைண்டும் திரும்பப் பெற்ற பின்னர் இரண்டு வாரங்கள் மட்டுமே நீடித்தது. பின்னர் தி அண்டர்டேக்கர் சம்மர்ஸ்லாமில் நடந்த டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன்ஷிப்பிற்கான, இப்போது ஆஸ்டினிடம் இருப்பது, முதல்நிலை போட்டியாளர் ஆனார். இருப்பினும், சம்மர்ஸ்லாமிற்கு வெகுமுன்பாக தி அண்டர்டேக்கர் தானும் கேனும் சகோதரர்களாக ஒன்றாக பணிபுரிந்ததாக அறிவி்த்தார். இப்படி வெளிப்படுத்தியிருந்தாலும், தி அண்டர்டேக்கர் ஆஸ்டினுடனான போட்டியில் கேனின் குறுக்கீட்டை தான் விரும்பவில்லை என்று தெரிவித்தார் என்பதுடன், தி அண்டர்டேக்கர் இந்தப் போட்டியில் தோற்றாலும் இந்தப் போட்டிக்குப் பிந்தைய கௌரவ நிகழ்ச்சியில் ஆஸ்டினை அவருடைய பெல்ட் பேக்கை வைத்து சமாளித்துவிடுவதாகவும் கூறினார். செப்டம்பரில் இந்தக் கதைவரிசை தொடர்ந்தது, அவரும் கேனும் வின்ஸ் மெக்காஹனுக்கான பட்டத்தை பெறுவதிலிருந்து ஆஸ்டினைத் தடுக்க கூட்டு சேர்ந்ததாக அறிவித்தபோது தி அண்டர்டேக்கர் சில வில்லத்தனமான குணவியல்புகளைக் காட்டத் தொடங்கினார். Breakdown: In Your Houseஆஸ்டினின் டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன்ஷிப்பிற்காக அவருக்கு எதிராக டிரிபிள் திரட் போட்டியில் தி அண்டர்டேக்கரும் கேனும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்; மெக்காஹன் இந்த இரண்டு சகோதரர்களும் ஒன்றாக சேர்ந்து வர அனுமதியில்லை என்று குறிப்பிட்டார். தி அண்டர்டேக்கரும் கேனும் அடுத்தடுத்து இரட்டை சோக்ஸ்லாமால் ஆஸ்டினை வீழ்த்தினர், இதனால் மெக்காஹன் இந்தப் பட்டத்தை விட்டுச்சென்றார். இந்த நிகழ்ச்சி இல்Judgment Day: In Your House இந்த பட்டத்திற்காக இரண்டு சகோதரர்களுக்கிடையிலான போட்டிக்கு இட்டுச்சென்றது, இதில் ஆஸ்டின் சிறப்பு விருந்தினர் நடுவராக இருந்தார். இந்தப் போட்டி ஏறக்குறைய முடிவுக்கு வரும் தருவாயில், தி அண்டர்டேக்கரை அடிக்க ஒரு இரும்பு நாற்காலியை பால் பியரர் கேனுக்குக் கொடுத்து அவருக்கு உதவுவதாகத் தெரிந்தது, ஆனால் கேன் பின்னால் திரும்புகையில் பியரர் மற்றும் தி அண்டர்டேக்கர் ஆகிய இருவருமே அந்த நாற்காலியால் கேனை அடித்துவிட்டனர். தி அண்டர்டேக்கர் தடுத்து நிறுத்தச் சென்றார், ஆனால் ஆஸ்டின் இந்த வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள மறுத்தும் அண்டர்டேக்கரை குற்றம்சாட்டியும் இரண்டு சகோதரர்களையும் தோல்வியுற்றவர்களாக அறிவி்த்தார். முடிவில், அடுத்த நாள் இரவு ரா இஸ் வார் இல் ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக தி அண்டர்டேக்கர் வில்லன் ஆனார், பியரருடன் சமரசம் செய்துகொண்டு வேர்ல்ட் ரஸ்ட்லிங் ஃபெடரேஷனில் அவர்களுடைய மினிஸ்ட்ரி ஆஃப் டார்க்னஸை வெளிப்படுத்தவிருப்பதாக ஒப்புக்கொண்டார். இந்தப் புதிய கதைவரிசையின் ஒரு பகுதியாக, தன்னுடைய பெற்றோர்களைக் கொல்லும் வகையில் தீவைத்ததாக முன்பு கேனை குற்றம்சாட்டி வந்தது தவறு என்றும் உண்மையில் தீவைத்தது தாம்தான் என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

சர்வைவர் சீரிஸூக்குப் பின்னர், தி அண்டர்டேக்கர் தன்னுடைய முந்தைய நெடும்பகையான ஆஸ்டின் பக்கம் திருப்பினார், அவருடைய ஜட்ஜ்மெண்ட் டே பட்டத்தை சவாலுக்கழைத்த அவர், தி ராக் உடனான பட்டப் போட்டியின்போது ஆஸ்டினின் தலையை ஒரு மண்வாரியால் கடுமையாகத் தாக்கினார், ஒரு மாதத்திற்கு முன்பு நடந்ததற்கு சாதகமாக நடந்துகொள்ளும் வகையில். இந்தக் கதைவரிசையில் ஏற்பட்ட இந்த திருப்பத்தினால், மெக்காஹன் தி அண்டர்டேக்கருக்கும் ஆஸ்டினுக்கும் Rock Bottom: In Your House இல் ஒரு பரீட் அலைவ் போட்டியை நிர்ணயித்தார். ராக் பாட்டமிற்கு இட்டுச்சென்ற வாரங்களில் தி அண்டர்டேக்கர் ஆஸ்டினை உயிருடன் புதைத்துவைக்க முயற்சித்தார் என்பதோடு கேன் மனநலக் காப்பகத்திற்கு செல்ல ஒப்புக்கொள்ளவும் முயற்சி்த்தார், அத்துடன் ஆஸ்டினின் கிறிஸ்துவ குறியீட்டு சங்கிலியைப் பறித்து அதனை அரங்கிற்கு மேலாக உயர்த்தினார்.[20] இருப்பினும் தி அண்டர்டேக்கர் கேன் குறுக்கிட்டப் பின்னர் தோல்வியடைந்தார்.[21]

மினிஸ்ட்ரி ஆஃப் டார்க்னஸ் (1999)

1999 ஜனவரியில் திரும்பிவந்த அண்டர்டேக்கர் மினிஸ்ட்ரி ஆஃப் டார்க்னெஸை உருவாக்கினார். இருப்பினும் அவர் முன்பிருந்ததைக் காட்டிலும் மிக அதிகமான அளவிற்கு அபாயகரமானவராக இருந்தார் என்பதோடு தான் "மேலிருக்கும் சக்தியிடமிருந்து" உத்தரவுகளைப் பெறுவதாக விளக்கினார். அவர் தொடர்ந்து கறுப்பு மேலங்கியுடனும் சிம்மாசனம் மீது அமர்ந்தபடியும் தோன்றினார். அவருடைய கூட்டாளிகளின் உதவியுடன், அவர் பல்வேறு டபிள்யுடபிள்யுஇ சூப்பர்ஸ்டார்களுக்கு பலிகள் இட்டார், இவை சூப்பர்ஸ்டார்களின் மிகவும் தீமையான பக்கத்தை தனது மினிஸ்ட்ரிக்குள் கொண்டுவருவதற்காக இருந்தது. இந்த மினிஸ்ட்ரி ஏறத்தாழ கார்ப்பரேட் மினிஸ்ட்ரியை உருவாக்க தி கார்ப்பரேஷன் கூட்டணியுடன் இணைந்தது.[22] இந்த நேரத்தில், தி அண்டர்டேக்கர் சிறப்பு போட்டி நடுவராக ஷான் மெக்காஹனின் உதவியுடன் ஆஸ்டினின் டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன்ஷிப்பிற்காக அவரை ஓவர் த எட்ஜில் தோற்கடிக்க நிர்ணயிக்கப்பட்டார்.[23] இரண்டு வாரங்கள் கழித்து வின்ஸ் மெக்காஹன்தான் எல்லா வகையிலும் தி அண்டர்டேக்கரின் "மேலிருக்கும் சக்தி" என்பது ரா இஸ் வாரில் வெளிப்படுத்தப்பட்டது. கிங் ஆஃப் தி ரிங்,[22] நடந்த ஓரிரவிற்குப் பின்னர் தி அண்டர்டேக்கர் டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன்ஷிப்பை ஆஸ்டினிடம் இழந்தார், அத்துடன் ஃபுல்லி லோடடில் நடந்த ஃபர்ஸ்ட் பிளட் போட்டியையும் இழந்தார், மெக்காஹன் உடனான அவருடைய உறவு நீர்த்துப்போனது என்பதுடன் கார்ப்பரேட் மினிஸ்ட்ரியும் கலைக்கப்பட்டது.

டபிள்யுடபிள்யுஎஃப் டேக் டீம் சாம்பியன்ஷிப்பை இரண்டு முறை கைப்பற்றிய தி அன்ஹோலி அலையன்ஸ் என்று அழைக்கப்படும் டேக் டீமில் தி பிக் ஷோவுடன் இணைந்து தி அண்டர்டேக்கர் தனது கதைவரிசையைத் தொடர்ந்தார்.

அமெரிக்கன் பேட் ஆஸ்/பிக் ஈவிள் (2000–2003)


ரஸில்மேனியா XIX இல் அண்டர்டேக்கர் தன்னுடைய தன்னுடைய "பிக் ஈவிள்" ஜிம்மிக்குடன்.

தி அண்டர்டேக்கர் டபிள்யுடபிள்யுஎஃப் வாழ்க்கையின் இந்தப் பகுதியில் இரண்டாவது அவதாரமெடுத்தார். அவர் பழங்கால சவப்பெட்டி சுமப்பவர்-போன்ற உடை, அவருடைய இறுதியஞ்சலி வளைய இசை, இயற்கைமீறிய சக்தியின் மறைகுறியீடு மற்றும் வளையத்திற்குள் அவர் வருகையில் உடன் வரும் நாடகீயத்தன்மை ஆகிய அனைத்தையும் கைவிட்டார். தி அண்டர்டேக்கர் இப்போது பைக்கரின் ஆளுமை எடுத்திருந்தார், ஒரு மோட்டார்சைக்கிளில் கறுப்புக் கண்ணாடி அணிந்து வெள்ளைக் கைக்குட்டையுடன் வளையத்திற்கு வந்தார். அவருடைய ரிங் இசை லிம்ப் பிஸ்கிட் "ரோலின்' (ஏர் ரெய்ட் வெகிக்கிள்)" மற்றும் கிட் ராக் "அமெரிக்கன் பேட் ஆஸ்" (தி அண்டர்டேக்கரின் புதிய உத்தியின் தோற்றுவாய்) போன்ற அப்போதைய ராக் பாடல்களாக மாற்றப்பட்டது, இருப்பினும் இது தி அண்டர்டேக்கரின் அசல் இசையினுடைய தொடக்க காங் மணியின் ஒலியோடு உடனிணைந்தே வந்தது.

2000 ஆம் ஆண்டில் அவருடைய மறுவருகைக்குப் பின்னர் அவரை மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு விருப்பமானவராக மாற்றியதற்கு காரணமான மெக்காஹன் ஹெம்ஸ்லே ஃபேக்ஸன் உறுப்பினர்களை நீக்கினார். அவர் அவர்களுடைய தலைவரான டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன் டிரிபிள் ஹெச்சையும் குறிவைத்தார். கிங் ஆஃப் த ரிங்கில் தி அண்டர்டேக்கர் தி ராக் மற்றும் கேன் உடன் கூட்டுசேர்ந்து டிரிபிள் ஹெச், ஷான் மெக்காஹன் மற்றும் வின்ஸ் மெக்காஹன் ஆகியோரைத் தோற்கடித்தார்.[24] அதன்பிறகு, டபிள்யுடபிள்யுஎஃப் டேக் டீம் சாம்பியன்ஷிப்பிற்கு போட்டியிட கேன் உடன் கூட்டுசேர நிர்ணயிக்கப்பட்டார். அவர்கள் எட்ஜ் மற்றும் கிறிஸ்டியனைத் தோற்கடித்தனர் என்பதோடு எட்ஜ் மற்றும் கிறிஸ்டியன் மீண்டும் கொண்டுவரப்பட்ட டேக் பட்டத்திற்கான அடுத்த வாரமே நடைபெற்ற போட்டியில் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் உரிமையையும் பெற்றனர். ஆகஸ்ட் 14 ரா இஸ் வார் அத்தியாயத்தில் தி அண்டர்டேக்கரை கேன் இரண்டுமுறை சோக்ஸ்லாம் செய்து அவருக்கு துரோகம் செய்தார்.[25] இந்த நிகழ்ச்சி சம்மர்ஸ்லாமில் அவர்கள் இருவருக்குமான மற்றொரு போட்டிக்கு வழிவகுத்தது, இது தி அண்டர்டேக்கர் கேனின் முகமூடியை நீக்கிய பின்னர் வளையத்திலிருந்து கேன் ஓடிவிட்டதால் போட்டியின்றி முடிவுபெற்றது.[24]

தி அண்டர்டேக்கர் பிறகு சர்வைவர் சீரிஸில் டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன்ஷிப்பிற்காக கர்ட் ஆங்கிளை சவாலுக்கழைத்தார்.[26] இருப்பினும் ஆங்கிள் தன்னுடைய நிஜ வாழ்க்கை சகோதரரான எரிக் ஆங்கிளுடன் தன்னுடைய இடத்தை மாற்றிக்கொண்டதால் தி அண்டர்டேக்கர் தோற்கடிக்கப்பட்டார். தி அண்டர்டேக்கர் ஆறு பேரை ஆர்மகடானில் நடந்த ஹெல் இன் எ செல் போட்டியில் களத்திற்கு அழைத்தார். தி அண்டர்டேக்கர் அவர்களில் ஒருவரை "புகழ்பெற்றவராக்குவதாக" உறுதியளித்து செல்லின் கூரையிலிருந்து ரிகிஷியை சோக்ஸ்லாம் செய்தபோது அவ்வாறே செய்தார்.[26]

2001ஆம் ஆண்டில், தி அண்டர்டேக்கர் கேன் உடன் பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்ஷனாக மறு ஒருங்கிணைப்பு செய்து மீண்டும் டபிள்யுடபிள்யுஎஃப் டேக் டீம் சாம்பியன்ஷிப்பிற்கு சவால் விடுத்தார். அவர்கள் நோ வே அவுட்டில் இந்தப் பட்டத்திற்கு அழைக்கப்பட்டனர், எட்ஜ் மற்றும் கிறிஸ்டியனை எதிர்கொண்ட அவர்கள் பிறகு டேபிள்ஸ் மேட்சில் சாம்பியன்களான டட்லி பாய்ஸை எதிர்கொண்டனர். தி பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்ஷன் அந்தப் போட்டி முழுவதும் மேலோங்கி இருந்தனர் என்றாலும் வெற்றிபெறவில்லை.[26] தி அண்டர்டேக்கர் பின்னர் டிரிபிள் ஹெச் தன்னுடைய ரஸில்மேனியா வெற்றியை 9–0 என்ற வரிசையில் மேம்படுத்தி வைத்திருந்த ரஸில்மேனியா X-செவனில் அவரை தோற்கடிக்க நிர்ணயிக்கப்பட்டார்.[12] அவரும் கேனும் டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினும் "ஆச்சரியகரமான கூட்டணி" வைத்திருக்கும் டிரிபிள் ஹெச்சின் மீது தங்கள் கவனத்தை செலுத்துவதாக இந்தக் கதை வரிசை தொடர்ந்தது. தி பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்ஸன் டிரிபிள் ஹெச் மற்றும் ஆஸ்டினை அவர்களுடைய பட்டத்திற்காக எதிர்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர். தி அண்டர்டேக்கரும் கேனும் எட்ஜ் மற்றும் கிறிஸ்டியனிடமிருந்து[27] டபிள்யுடபிள்யுஎஃப் டேக் டீம் பட்டத்தை வென்ற பிறகு பேக்ஸ்லாஷில் கேனை ஒரு பெரிய சுத்தியல் கொண்டு டிரிபிள் ஹெச் தாக்கிய பின்னர் பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்ஷன் இந்தப் பட்டத்தை இழந்தது.[28] கேன் காயமடைந்ததால், தி அண்டர்டேக்கர் தனது டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன்ஷிப்பிற்காக விரைவிலேயே ஸ்டீவ் ஆஸ்டினுடன் நீண்டபகை கொண்டார், ஆனால் ஜட்ஜ்மெண்ட் டேயில் ஆஸ்டின் தன்னுடைய பட்டத்தை மீட்டார்.[28]

"தி இன்வேஷன்" கதைவரிசையின் ஒரு பகுதியாக, தி அண்டர்டேக்கரின் அடுத்த பழிக்குப்பழி தி அண்டர்டேக்கரின் மனைவி சாராவை தொடர்ந்து பின்தொடரும் டயமண்ட் டல்லாஸ் பேஜ் உடையதாக இருந்தது.[28] சம்மர்ஸ்லாமில் டபிள்யுசிடபிள்யு டேக் டீம் சாம்பியன்களான தி அண்டர்டேக்கரும் கேனும் பேஜையும் அவருடைய கூட்டாளி கிறிஸ் கேன்யனையும் டபிள்யுடபிள்யுஎஃப் டேக் டீம் சாம்பியன்ஷிப்பிற்கான ஒரு இரும்புக் கூண்டு போட்டியில் தோற்கடித்தனர்.[28] சர்வைவர் சீரிஸில், தி அலையன்ஸின் ஸ்டீவ் ஆஸ்டின், புக்கர் டி, ராப் வான் டேம், ஷேன் மெக்காஹன் மற்றும் கர்ட் ஆங்கிள் ஆகியோரைத் தோற்கடிக்க தி அண்டர்டேக்கர் தி ராக், கிறிஸ் ஜெரிக்கோ மற்றும் தி பிக் ஷோ ஆகியோருடன் கூட்டு சேர்ந்தார் (இது 2006 இல் அணிசேரும்வரை தி அண்டர்டேக்கரும் கேனும் கூட்டுசேரும்வரை அவர்கள் சேர்ந்திருத்த கடைசி முறையாக இருந்தது). ஆஸ்டினால் ஏற்பட்ட குறுக்கீட்டினால் ஆங்கில் தி அண்டர்டேக்கரை சாய்த்தார்.[28] இந்த அலையன்ஸ் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தி அண்டர்டேக்கர் வின்ஸ் மெக்காஹனின் பிட்டத்தை முத்தமிட வர்னணையாளரான ஜிம் ரோஸை கட்டாயப்படுத்தியதால் மீண்டும் ஒருமுறை வில்லன் ஆனார்.[29] இது தி அண்டர்டேக்கரின் புதிய அவதாரத்தினுடைய தொடக்கமாக இருந்தது, தன்னுடைய நீண்ட தலைமுடியை குறுகலாக வெட்டிக்கொண்டு தன்னை "பிக் ஈவிள்" என்று அழைத்துக்கொண்டார். வென்ஜன்ஸில், டபிள்யுடபிள்யுஎஃப் ஹார்ட்கோர் சாம்பியன்ஷிப்பை கைப்பற்ற தி அண்டர்டேக்கர் ராப் வான் டேமை தோற்கடித்தார்.[30]


தி அண்டர்டேக்கர் தன்னுடைய "பிக் ஈவிள்" அவதாரத்தின்போது

தி அண்டர்டேக்கரை பின்பக்கத்திலிருந்து வந்து டிராப்கிக்கிங் செய்து மேவன் தோற்கடிக்கச் செய்ததைத் தொடர்ந்து தி அண்டர்டேக்கரின் அடுத்த கதைவரிசை 2002 இல் ராயல் ரம்பிளில் தொடங்கியது. அடுத்தடுத்து, பதிலடியாக மேவனை தோல்வியுறச்செய்த தி அண்டர்டேக்கர் அவரை மேடைக்குப் பின்பகுதியில் வைத்து பயங்கரமான முறையில் தாக்கினார்.[30] ஸ்மாக்டவுனின் ஒரு அத்தியாயத்தில், ராயல் ரம்பிளில் தி அண்டர்டேக்கரின் நீக்கத்தை தி ராக் குறிப்பிட்டது தி அண்டர்டேக்கரை கோபமுறச் செய்தது. தி அண்டர்டேக்கர் தி ராக்கின் டபிள்யுடபிள்யுஎஃப் அண்டிஸ்பூட்டட் சாம்பியன்ஷிப்பிற்கான முதல் நிலை போட்டியாளர் என்ற தகுதியை சவாலுக்கழைத்து பதிலளித்தார்.[31] இந்தக் கதைவரிசை ஹார்ட்கோர் சாம்பியன்ஷிப்பிற்காக் மேவன் உடன் தி அண்டர்டேக்கர் போட்டியிட வேண்டும் என்று தி ராக் கோரியபோது தொடர்ந்தது.[32] இவர்கள் இருவரும் நோ வே அவுட்டில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர், அதில் ரிக் ஃபிளேரின் குறுக்கீட்டினால் தி அண்டர்டேக்கர் தோல்வியுற்றார்.[30] இந்தக் குறுக்கீடு ரஸில்மேனியா X8,[33] இல் அண்டர்டேக்கருடன் மல்யுத்தம் செய்ய மறுத்த ரிக் ஃபிளேர் உடன் ஒரு கதைவரிசையைத் தொடங்கியது, என்பதுடன் அதன் விளைவாக அண்டர்டேக்கர் அவருடைய மகன் டேவிட் ஃபிளேரைத் தாக்கினார்.[34] இதே தண்டனையை ஃபிளேரின் மகளுக்கும் தரப்போவதாக தி அண்டர்டேக்கர் அச்சமூட்டிய பிறகு ஃபிளேர் ஏறத்தாழ ஒப்புக்கொண்டார்.[34] தகுதியற்ற நிலை கிடையாது என்ற கட்டுப்பாடு இந்த போட்டிக்கு விதிக்கப்பட்டது, தி அண்டர்டேக்கர் ஃபிளேரைத் தோற்கடித்தார்.[12]

ஃபிளேர் உடனான கதைவரிசைக்குப் பின்னர், டபிள்யுடபிள்யுஎஃப் அண்டிஸ்பூட்டட் சாம்பியன்ஷிப்பிற்கான முதல் நிலைப் போட்டியாளருக்கான பேக்லாஷில் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினை தி அண்டர்டேக்கர் தோற்கடித்தார். அந்த இரவிற்குப் பின்னர், அண்டிஸ்பூட்டட் சாம்பியன் டிரிபிள் ஹெச்சுக்கு எதிரான போட்டியில் தன்னுடைய பட்டத்தை வெல்ல அவர் ஹல்க் ஹோகனுக்கு உதவினார்.[30] பிறகு தி அண்டர்டேக்கர் ஜட்ஜ்மெண்ட் டேயில் நான்கு உலகச் சாம்பியனுக்கான போட்டியில் ஹோகனை தோற்கடித்தார்.[35] ரா வின் ஜூலை 1 அத்தியாயத்தில் ஒரு ஏணிப் போட்டியில் ஜெஃப் ஹார்டியைத் தோற்கடித்து ஹார்டியின் கையை கௌரவத்தின் அடையாளமாக உயர்த்திய பின்னர் தி அண்டர்டேக்கர் மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் விருப்பத்திற்குரியவரானார். இருப்பினும் தி அண்டர்டேக்கர் கர்ட் ஆங்கிளும் சம்பந்தப்பட்ட டிரிபிள் திரட் போட்டியில் தி ராக்கிடம் வென்ஜன்ஸில் பட்டத்தை இழந்தார்.[35] தி அண்டர்டேக்கர் பின்னர் பிராக் லெஸ்னர், கிரிஸ் பெனாய்ட், மற்றும் எடி கரேரா ஆகியோருடன் ராவிலிருந்து ஸ்மாக்டவுனுக்கு! மாறினார். இரட்டை-தகுதியிழப்பில் முடிந்த அன்ஃபர்கிவன் பட்டப் போட்டியில் தி அண்டர்டேக்கர் லெஸ்னரை சவாலுக்கழைத்தார்.[35] அவர்களின் நீண்டபகை ஹெல் இன் எ செல் போட்டியில் நோ மெர்ஸி வரை சென்றது. தி அண்டர்டேக்கர் உறைந்துபோன கையுடன் இந்தப் போட்டியில் கலந்துகொண்டார் என்பதுடன் ஏறத்தாழ இந்த சாம்பியனிடம் தோற்றும் போனார்.[35]

தி பிக் ஷோ தி அண்டர்டேக்கரை மேடையிலிருந்து வெளியில் வீசியெறிந்த பின்னர் அவர் மல்யுத்தத்திலிருந்து விடுப்பில் சென்றார், இது ஒரு நீண்டபகையைப் பற்றவைத்தது.[36] தி அண்டர்டேக்கர் 2003 இல் ராயல் ரம்பிளுக்கு திரும்பினார்.[37] அவர் உடனடியாக பிக் ஷோவுடனான தனது நீண்டபகையைத் தொடங்கினார் என்பதோடு ஒரு டிரையாங்கிள் சோக் கொண்டு நோ வே அவுட்டில் அவரைத் தோற்கடித்தார். ஏ-டிரைன் இந்தப் போட்டிக்குப் பின்னர் தி அண்டர்டேக்கரை தாக்க முயற்சி செய்து இந்தக் கதைவரிசைக்குள் வருகிறார், ஆனால் நேதன் ஜோன்ஸ் அவருடைய உதவிக்கு வந்துவிடுகிறார்.[37] ஜோன்ஸை மல்யுத்தம் செய்ய தி அண்டர்டேக்கர் பயிற்சியளிப்பதிலிருந்து இந்தக் கதைவரிசை தொடங்குகிறது, அவர்கள் இருவரும் ரஸில்மேனியா XIX இல் ஒரு டேக் டீம் போட்டியில் பிக் ஷோ மற்றும் ஏ-டிரைன் ஆகியோருடன் சண்டையிட தீர்மானிக்கப்படுகிறது.[12] இருப்பினும் ஜோன்ஸ் இந்த ஆட்டத்திற்கு முன்பே நீக்கப்படுவதால் இது ஒரு ஹேண்டிகேப் போட்டி ஆகிறது, இதில் தி அண்டர்டேக்கர் ஜோன்ஸின் உதவியுடன் வெற்றிபெறுகிறார்.[37]

வருடத்தில் மீதமிருந்த நாட்களில் அவர் இரண்டு டபிள்யுடபிள்யுஇ சாம்பியன்ஷிப் வாய்ப்புக்களைப் பெற திட்டமிடப்படுகிறார். முதலாவது போட்டி ஸ்மாக்டவுனில்! செப்டம்பர் 4 அன்று கர்ட் ஆங்கிளுக்கு எதிராக நடக்கிறது, இது பிராக் லெஸ்னரின் குறுக்கீட்டினால் போட்டி இல்லாமல் முடிவுகிறது.[38] நோ மெர்ஸியில் நடந்த இரண்டாவது போட்டி தி பைக்கர் செயின் போட்டியாக தி அண்டர்டேக்கருக்கும் லெஸ்னருக்கும் இடையே நடக்கிறது, இதில் லெஸ்னர் வின்ஸ் மெக்காஹனின் உதவியோடு வெற்றிபெறுகிறார்.[39] இந்தப் போட்டி மெக்காஹனுடனான நீண்டபகைக்கு காரணமாகிறது, சர்வைவர் சீரிஸில் பரீட் அலைவ் போட்டியில் மெக்காஹனுக்கு எதிராக தி அண்டர்டேக்கர் மோதுகையில் கேன் குறுக்கீட்டினால் அவர் தோல்வியடைவதால் இந்தப் பகை முற்றுகிறது.[39] இந்தப் போட்டியைத் தொடர்ந்து தி அண்டர்டேக்கர் கொஞ்ச நாட்களுக்கு காணமல் போகிறார், கேன் அவர் "இறந்துவிட்டார் நிரந்தரமாக புதைக்கப்பட்டுவிட்டார்" என்று அறிவிக்கிறார்.[40]

டெட்மேனின் மறுவருகை (2004–2006)

ரஸில்மேனியா XX வரை நீடிக்கச்செய்த இந்தக் கதைவரிசையில் தி அண்டர்டேக்கரின் மறுவருகையை பிரகடனம் செய்யும் விக்னட்டிஸால் கேன் அச்சுறுத்தப்படுகிறார். முதலாவது ராயல் ரம்பிளின்போது தி அண்டர்டேக்கரின் மணி ஒலிக்கையில் கவனத்தை சிதறவிடுவதால் கேன் புக்கர் டியால் வெளியேற்றப்பட காரணமாகிறது.[39] ரஸில்மேனியா XX இல் தி அண்டர்டேக்கர் பால் பியரருடன் சேர்ந்து தன்னுடைய "டெட்மேன்" அவதாரத்துடன் திரும்பிவந்து கேனை தோற்கடிக்கிறார்.[41] மூன்று மாதங்களுக்குப் பின்னர், பின்னாளில் அண்டர்டேக்கரை தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட பால் ஹேமனின்,[42] தூண்டுதலால் டஸ்லி பாய்ஸ் பியரரைக் கடத்திச் சென்றுவிடுகின்றனர்.[43] தி கிரேட் அமெரிக்கன் பாஷில் தி அண்டர்டேக்கர் தோற்றால் ஹேமன் பியரரை சிமெண்ட் பூசி புதைப்பார் என்ற விதிமுறையின் கீழ் டட்லிஸிற்கு எதிராக ஒரு ஹேண்டிகேப் போட்டியில் கலந்துகொள்கிறார். தி அண்டர்டேக்கர் வெற்றிபெறுகிறார் ஆனால் பியரர் புதைக்கப்படுகிறார், பியரர் இப்போது வெறும் பொறுப்பு மட்டும்தான் என்பதோடு அவரால் இனி எந்தப் பயனும் இல்லை என்று விளக்கப்படுகிறது.


ஸ்மாக்டவுன்! அத்தியாயத்தின்போது தி அண்டர்டேக்கர் உள்ளே வருகிறார்.

டட்லி பாய்ஸை தோல்வியுறச் செய்த பின்னர், பின்னாளில் டபிள்யுடபிள்யுஇ சாம்பியனான ஜான் "பிராட்ஷா" லேஃபீ்ல்ட் (ஜேபிஎல்) உடன் சம்மர்ஸ்லாமில் நடந்த பட்டப் போட்டியில் அவரை சவாலுக்கழைத்ததன் மூலம் அவருடன் தி அண்டர்டேக்கர் நீண்டபகை கொள்ளத் தொடங்கினார், இந்தப் போட்டியில் தி அண்டர்டேக்கர் தகுதியிழப்பில் தோல்வியடைந்தார்.[41] நோ மெர்ஸியின் தி அண்டர்டேக்கரும் ஜேபிஎல்லும் முதல் முறையாக நடந்த "லாஸ்ட் ரைட்" போட்டியில் மோதினார்கள் இருப்பினும் ஹெய்டன்ரிச் குறுக்கிட்டதால் தோல்வியடைந்தார்.[41] ஹெய்டன்ரிச் உடனான சிறிய நிகழ்ச்சிக்குப் பின்னர், தி அண்டர்டேக்கர் தன்னுடைய கவனத்தை மீண்டும் டபிள்யுடபிள்யுஇ சாம்பியன்ஷிப்பை நோக்கித் திருப்பினார். எடி கரேரா மற்றும் புக்கர் டி உடன் இணைந்து ஃபேட்டல் ஃபோர்-வே போட்டியில் ஆர்மகெடனில் நடந்த மறுபோட்டியில் சாம்பியன்ஷிப்பிற்கு அவர் ஜேபிஎல்லை சவாலுக்கழைத்தார், மீண்டும் ஹெய்டன்ரிச்சின் குறுக்கீட்டினால் தி அண்டர்டேக்கர் வெற்றிபெறவில்லை.[44] இந்த நீண்டபகை ராயல் ரம்பிளில் தி அண்டர்டேக்கருக்கும் ஹெய்டன்ரிச்சுக்கும் இடையே நடைபெற்ற ஒரு கேஸ்கட் போட்டியில் முற்றியது, இதில் தி அண்டர்டேக்கர் வெற்றிபெற்று ஒரு கலசத்தில் வைத்து ஹெய்டன்ரிச்சை மூடினார்.

பிறகு விரைவிலேயே, ரேண்டி ஆர்டன் ரஸில்மேனியா 21 இல் நடந்த போட்டியில் தி அண்டர்டேக்கரை சவாலுக்கழைத்தார், தி அண்டர்டேக்கரின் ரஸில்மேனியா வெற்றித்தொடரை தான் முடிவுக்கு கொண்டுவரப்போவதாக ஆர்டன் அறிவித்ததிலிருந்து இந்தக் கதைவரிசை தொடங்குகிறது.[45] தன்னுடைய தந்தை "கௌபாய்" பாப் ஆர்டனிடமிருந்து உதவி பெற்றாலும் ரேண்டி தோல்வியுற்றார் என்பதோடு தி அண்டர்டேக்கர் தன்னுடைய ரஸில்மேனியா சாதனையை 13–0 என்ற வரிசையில் மேம்படுத்திக்கொண்டார்.[44] அவர் ஜூன் 16 ஸ்மாக்டவுன்! எபிசோடிற்குத் திரும்பிவந்தார். ஆனால் ரேண்டி ஆர்டனின் குறுக்கீட்டினால் ஜேபிஎல்லிடம் தோல்வியடைந்தார்.[46] தி கிரேட் அமெரிக்கன் பாஷிற்குப் பிறகு தி அண்டர்டேக்கர் உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பிற்கான முதல்நிலை போட்டியாளர் ஆனார், இந்தத் தகுதியை தான்தான் பெற்றிருக்க வேண்டும் என்று ஜேபிஎல் கருதினார். நீண்டபகையின் ஒரு பகுதியாக, ஸ்மாக்டவுனைத்! தொடர்ந்து, தி அண்டர்டேக்கர் மீண்டும் ஆர்டனின் குறுக்கீட்டினால் முதல் நிலைப் போட்டியாளர் தகுதிப் போட்டியை ஜேபிஎல்லிடம் இழந்தார்.[47] இதிலிருந்து தி அண்டர்டேக்கர் ஆர்டனுடனான நீண்டபகையைத் தொடங்கினார். சம்மர்ஸ்லாமில், ரஸில்மேனியா மறுபோட்டியில் ஆர்டன் தி அண்டர்டேக்கரை தோற்கடித்தார்.[48] அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கலசங்களைக் கொண்டு தாக்கிக்கொண்டதால் இந்தக் கதைவரிசை தீவிரமடைந்தது, இது நோ மெர்ஸியில் ஒரு போட்டிக்கு இட்டுச்சென்றது என்பதுடன் அதில் தி அண்டர்டேக்கர் ரேண்டியிடமும் அவருடைய தந்தை "கௌபாய்" பாப் ஆர்டனிடமும் தோற்றுப்போனார்.[48] இந்தப் போட்டிக்குப் பின்னர் ஆர்டன்கள் கலசத்தின் மீது காஸலினை ஊற்றி அதற்கு தீவைத்தனர். இருப்பினும் எரிந்த கலசம் திறக்கப்பட்டபோது மீண்டும் ஒருமுறை தி அண்டர்டேக்கர் மறைந்துபோயிருந்தார். அவர் எரிந்துபோன கலசத்திலிருந்து மீண்டும் சர்வைவர் சீரிஸூக்கு திரும்பி வந்தார்.[49] தி அண்டர்டேக்கர் ஸ்மாக்டவுனுக்கு! திரும்பினார். ஆர்டனைத் தாக்குவதற்கு டிசம்பர் முற்பாதியில் ஆர்மகெடானில் ஹெல் இன் எ செல் போட்டி அமைக்கப்பட்டது.[50] இந்தப் போட்டியில் வென்றபிறகு,[49] ஹாலவே மல்யுத்தத்திலிருந்து குறுகியகால ஓய்வு எடுத்துக்கொண்டார்.


தி அண்டர்டேக்கர் ரஸில்மேனியா 22 இல் தன்னுடைய தோற்கடிக்கப்படாத வெற்றிவரிசையை மீட்டெடுக்கிறார்.

2006 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ராயல் ரம்பிளில், மார்க் ஹென்றிக்கிற்கு எதிராக கர்ட் ஆங்கிள் வெற்றியடைந்த உலகப் பட்டத்தின் கொண்டாட்டத்தின்போது தி அண்டர்டேக்கர் திரும்பி வந்தார். அவர்களின் கதைவரிசையினுடைய ஒரு பகுதியாக, தி அண்டர்டேக்கர் நோ வே அவுட்டில் முப்பது நிமிட போட்டிக்குப் பின்னர் கர்ட் ஆங்கிளிடம் தோற்றுப்போனார். இந்தப் போட்டிக்குப் பின்னர் ஆங்கிளை அண்டர்டேக்கர் சுற்றிவளைத்தார், உற்று நோக்கிய பின்னர் அவர் இன்னும் தன்னுடைய தரநிலையில் இருப்பதாகவும் ஆங்கிளுடன் தன்னுடைய பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும் கூறினார். தி அண்டர்டேக்கர் ஸ்மாக்டவுனில்! ஆங்கிளுக்கு எதிராக நடந்த நோ வே அவுட் மறுபோட்டியில் உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். ஹென்றி தி அண்டர்டேக்கரை பின்னாலிருந்து தாக்கியதால் அவர் தனது பட்டத்தை இழக்க வேண்டி வந்தது. இது இந்த இருவருக்குமிடையிலான ஒரு தொடக்கமாக அமைந்தது, பிறகு தி அண்டர்டேக்கர் ரஸில்மேனியா 22 இல் ஒரு கேஸ்கட் போட்டிக்கு ஹென்றியை சவாலுக்கழைத்தார், ஆர்டனைப் போன்று ஹென்றி ஒரு வருடத்திற்கு முன்பு அண்டர்டேக்கரின் ரஸில்மேனியா வெற்றி வரிசையை தடுப்பதாக சபதம் செய்திருந்தார். தி அண்டர்டேக்கர் ஹென்றியை வீழ்த்தி ரஸில்மேனியாவில் 14-0 என்ற தரநிலையில் இருந்தார், இது இந்தக் கதைவரிசை தீர்க்கப்படாமல் இருக்கும்படிச் செய்தது. ஸ்மாக்டவுனின்! அடுத்த பதிப்பில் நடந்த மறுபோட்டியின்போது தி கிரேட் காளி அறிமுகமாகி தி அண்டர்டேக்கரை தாக்கியதானது, ஒரு கதைவரிசையின் முடிவையும் மற்றொன்றின் தொடக்கத்தையும் குறிப்பிடுவதாக இருந்தது.

தியோடார் லாங் தி அண்டர்டேக்கரிடமிருந்கு காளிக்கு ஜட்ஜ்மெண்ட் டே போட்டிக்கு சவாலுக்கழைத்தது ஸ்மாக்டவுனின்! மே 5 அத்தியாயம் வரை தி அண்டர்டேக்கருக்கு தெரியாது.[51] தி அண்டர்டேக்கர் காளியிடம் தோற்றுப்போனார் என்பதுடன் ஸ்மாக்டவுனின்! ஜூலை 4 அத்தியாயம் வரை மீண்டும் தோன்றவில்லை, அவர் தி கிரேட் அமெரிக்கன் பாஷில் பஞ்சாபி பிரிசன் போட்டிக்கு காளியின் சவாலை ஏற்றுக்கொண்டார்.[54] இருப்பினும் காளி போட்டியிலிருந்து நீக்கப்பட்டு இசிடபிள்யு சாம்பியனான தி பிக் ஷோ மாற்றப்பட்டார், தி அண்டர்டேக்கர் இதில் வெற்றிபெற்றார். இந்தக் கதைவரிசையி்ல், இந்தப் போட்டிக்கு வெகுமுன்பாக தி அண்டர்டேக்கர் மீதான தாக்குதலுக்கு தண்டனையளிக்கும் விதமாக காளி பிக் ஷோவால் மாற்றியமைக்கப்பட்டார்.[52] உலக ஹெவிவெயிட் சாம்பியனான கிங் புக்கருடனான தி அண்டர்டேக்கரின் போட்டியில் குறுக்கிட்ட பின்னர் சம்மர்ஸ்லாமில் நடந்த லாஸ்ட் மேன் ஸ்டேண்டிங்கில் காளி சவால்விடுக்கப்பட்டார்.[55] சம்மர்ஸ்லாமிற்கான இந்த சவாலை காளி ஏற்றுக்கொள்ளவில்லை, இருப்பினும் அதற்குப் பதிலாக லாங் இந்தப் போட்டியை ஸ்மாக்டவுன்! ஆகஸ்ட் 18 எபிசோடிற்கு அதிகாரப்பூர்வமானதாக்கினார். காளியை இரும்பு நாற்காலிகளால் அடித்தும், அதைக்கொண்டு பலமாகத் தாக்கியும் அவரை சோகஸ்லாமில் நிறைவுசெய்து தி அண்டர்டேக்கர் இந்தப் போட்டியில் வென்றார்.

பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்ஷன் மறுஇணைவு (2006–2007)



பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்ஷன் மறுஇணைவு

தி அண்டர்டேக்கரின் அடுத்த போட்டி நோ மெர்ஸியில் டபிள்யுடபிள்யுஇ யுனைட்டட் ஸ்டேட்ஸ் சாம்பியன் மிஸ்டர். கென்னடியுடன் நடந்தது, ஆனால் அவர் சாம்பியன்ஷிப் பெல்டால் கென்னடியைத் அடித்ததைத் தொடர்ந்து அந்தப் போட்டியில் தகுதியிழந்தார். ஸ்மாக்டவுனின் ! நவம்பர் 3 அத்தியாயத்தில், தி அண்டர்டேக்கர் ஐந்து வருடங்களில் முதல்முறையாக பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்ஷனை உருவாக்க கேன் உடன் மீண்டும் இணைந்தார், அவர்கள் தங்களை எதிர்த்தபடியே இருக்கும் மிஸ்டர். கென்னடி மற்றும் அந்த நேரத்தில் கேன் நீண்டபகை கொண்டிருந்த எம்விபி ஆகியோர் இணைந்திருந்த அணியைத் தோற்கடித்தனர். இந்தக் கதைவரிசையின் ஒரு பகுதியாக, கென்னடி தி அண்டர்டேக்கரை எம்விபியின் குறுக்கீட்டினால் சர்வைவர் சீரிஸில் நடந்த ஃபர்ஸ்ட் பிளட் போட்டியில் தோற்கடித்தார், ஆனால் முடிவில் ஆர்மகெடானில் நடந்த லாஸ்ட் ரைட் போட்டியில் அவர் கென்னடியைத் தோற்கடித்தார். ராயல் ரம்பிளில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான இரண்டு உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் வாய்ப்புக்களை தி அண்டர்டேக்கரை கென்னடி இழக்கச் செய்ததால் இவர்கள் இருவருக்கும் இடையிலான நீண்டபகை 2007 ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ந்தது.

உலக ஹெவிவெயிட் சாம்பியன் (2007–2008)

தி அண்டர்டேக்கர் தனது முதல் ராயல் ரம்பில் போட்டியை 2007 நிகழ்வில் வென்றார்,[60] எண் 30 இல் நுழைந்த இந்தப் போட்டியை வென்ற முதலாமவர் ஆனார்.[61] அவர் பிறகு தனது முதல் உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை வெல்ல ரஸில்மேனியா 23 இல் தோற்கடித்த பாடிஸ்டாவுடன் கதைவரிசையைத் தொடங்கினார். பேக்லாஷில் நடந்த லாஸ்ட் மேன் ஸ்டேண்டிங் போட்டியில், அவர்கள் இருவரில் எவரும் பத்து எண்ணப்படும்வரை பதிலளிக்காததால் சமநிலையில் முடிவுற்ற மறுபோட்டியில் கலந்துகொண்டனர், இதனால் தி அண்டர்டேக்கரிடமே சாம்பியன்ஷிப் இருந்தது. ஸ்மாக்டவுனின்! மே 11 அத்தியாயத்தில், தி அண்டர்டேக்கரும் பாடிஸ்டாவும் ஒரு இரும்புக் கூண்டு போட்டியில் பங்கேற்றனர், இந்தப் போட்டியில் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் தரையில் கால்வைத்ததால் சமநிலையில் முடிவடைந்தது. இந்தப் போட்டிக்குப் பின்னர் மார்க் ஹென்றி திரும்பி வந்து அண்டர்டேக்கரைத் தாக்கினார். இந்தத் தாக்குதலுக்கு மிகவும் உடனடியாக, எட்ஜ் தன்னுடைய மணி இன் த பேங்க் பட்டத்தை பணமாக்கிக்கொண்டார் என்பதோடு தி அண்டர்டேக்கர் உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை எட்ஜிடம் இழந்தார். தி அண்டர்டேக்கர் வளையத்திற்குள் சாய்கையில், மதபோதகர்கள் தோன்றி அவரை மேடைக்குப் பின்னாலுள்ள பகுதிக்கு தூக்கிச் செல்கின்றனர்.


ரஸில்மேனியா XXIV இல் எட்ஜை தோற்கடித்த பின்னர் தி அண்டர்டேக்கர்.

காலவேயின் சீர்படுத்தலின்போது, விரைவிலேயே உள்ளூர் ஜாப்பர்களை ஹென்றி தோற்கடித்ததோடு காட்சிப்படங்கள் தோன்றி தி அண்டர்டேக்கரின் மறுவருகையை மேம்படுத்தத் தொடங்கும்வரை அண்டர்டேக்கரை தான் தாக்கியது குறித்து மிகைப்படுத்திப் பேசிக்கொண்டிருந்தார். அன்ஃப்ர்கிவனுக்குத் திரும்பிய தி அண்டர்டேக்கர் வெற்றிகரமாக ஹென்றியை மீண்டும் ஸ்மாக்டவுனில்! இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தோற்கடித்தார்.[62] ரசிகர்கள் சிறப்பு விருந்தினர் நடுவராக ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினைத் தேர்வுசெய்திருந்த சைபர் சண்டேயில் பாடிஸ்டாவும் தி அண்டர்டேக்கரும் தங்களுடைய நீண்ட பகையை பற்றவைத்துக்கொண்டனர், ஆனால் பாடிஸ்டா உலகப் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.[63] அவர்கள் மீண்டும் சர்வைவர் சீரிஸில் ஹெல் இன் எ செல்லிற்குள்ளாக சண்டையிட்டனர், அங்கு பாடிஸ்டாவின் உதவிக்கு எட்ஜ் வந்ததால் உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை பாடிஸ்டாவே தக்கவைத்துக்கொண்டார்.[64] இதற்கு பதிலளிக்கும்விதமாக, பொது மேலாளர் விக்கி கரேராவிடம் தி அண்டர்டேக்கர் அடுத்துவந்த ஸ்மாக்டவுனில்! டூம்ஸ்டோன் பைல்டிரைவரைப் பயன்படுத்தினார், இது அவரை மருத்துவமனைக்கு அனுப்பியது. திரும்பிவந்த உதவிப் பொது மேலாளர் தியோடார் லாங் இந்தப் பட்டத்திற்காக ஆர்மகெடானில் டிரிபிள் திரட் போட்டியை அறிவித்தார், இதில் எட்ஜ் வெற்றிபெற்றார்.

நோ வே அவுட்டில் நடந்த எலிமினேஷன் சேம்பரில் தி அண்டர்டேக்கர் பாடிஸ்டா, ஃபின்லே, தி கிரேட் காளி, மாண்டல் வெண்டோவியஸ் போர்ட்டர் மற்றும் பிக் டேடி V ஆகியோரைத் தோற்கடித்தது அவரை ரஸில்மேனியா XXIV இல் எட்ஜின் உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பிற்கான முதல்நிலைப் போட்டியாளராக்கியது. அவர் தனது இரண்டாவது உலக் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை வெல்ல ரஸில்மேனியாவில் தனது "ஹெல்ஸ் கேட்" பிடியைப் பயன்படுத்தி எட்ஜை வீழ்த்தினார் என்பதோடு ரஸில்மேனியாவில் தன்னுடைய வெற்றிகொள்ளப்படாத 16–0 என்ற வெற்றி விகிதத்தையும் அதிகரித்துக்கொண்டார்.[65] ஒரு ரஸில்மேனியா போட்டியில் தி அண்டர்டேக்கர் தன்னுடைய உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பைத் தக்கவைத்துக்கொள்ள எட்ஜை மீண்டும் ஒருமுறை பேக்லாஷில் தி அண்டர்டேக்கர் தோற்கடித்தார்.[66] விக்கி கரேரா தி அண்டர்டேக்கரின் "ஹெல்ஸ் கேட்" விதிமுறைகளுக்கு புறம்பானது என்று அறிவித்து அந்தப் பட்டத்தை திரும்பப் பெற்றார். தி அண்டர்டேக்கர் வெற்று பட்டத்திற்காக ஜட்ஜ்மெண்ட் டேயில் எட்ஜ் உடன் மோதினார், இதில் அவர் தோல்வியாளர் அறிவிப்பு முறையில் வெற்றிபெற்றார். அந்தப் பட்டம் மீண்டும் வெற்றாகவே இருக்க விக்கி உத்தரவிட்டார், ஏனென்றால் பட்டங்கள் இந்த முறையில் கைமாறக் கூடாது. ஒரு மேசைகள், ஏணிகள் மற்றும் நாற்காலிகள் போட்டியில் ஒன் நைட் ஸ்டேண்டில் வெற்று சாம்பியன்ஷிப்பிற்காக எட்ஜும் தி அண்டர்டேக்கரும் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர், இதில் தி அண்டர்டேக்கர் லா ஃபேமிலியாவின் குறுக்கீட்டினால் தோல்வியடைந்தார். இந்தக் கட்டுப்பாட்டின் விளைவாக அண்டர்டேக்கர் டபிள்யுடபிள்யுஇ இல் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பல்வேறு நீண்டபகைகள் (2008–2009)


ரஸில்மேனியா XXV இல் ஷான் மைக்கேல்ஸை தோற்கடித்த பின்பு தி அண்டர்டேக்கர்.

ஜூலை 25, 2008 இல் ஸ்மாக்டவுன்! அத்தியாயத்தில் சம்மர்ஸ்லாமில் நடக்கும் ஹெல் இன் எ செல்லில் எட்ஜ் தி அண்டர்டேக்கரை எதிர்கொள்வார் என்று விக்கி கரேரோ அறிவித்தார்,[67] இதில் தி அண்டர்டேக்கர் வெற்றிபெற்றார். இந்தப் போட்டிக்குப் பின்னர், தி அண்டர்டேக்கர் ஏணியின் உச்சியிலிருந்து எட்ஜை சோக்ஸ்லாம் செய்து கேன்வாஸின் வழியாக வீசியெறிந்தார்.[68] இந்தப் போட்டியைத் தொடர்ந்து, ஸ்மாக்டவுனில் மன்னிப்புக் கேட்டதன் மூலம் தி அண்டர்டேக்கருடன் அமைதியை ஏற்படுத்திக்கொள்ள கரேரோ முயன்றார், ஆனால் தி அண்டர்டேக்கர் தான் மன்னிக்கும் குணம் கொண்டவன் அல்ல என்று அவரிடம் கூறினார். அன்ஃபர்கிவனில், "கரேரோவின் ஆவியை எடுத்துக்கொள்ள" வளையத்தை அணுகிய தி அண்டர்டேக்கர் அவரை கலசத்தில் எடுத்துச்சென்றார், முதலில் தி அண்டர்டேக்கருக்கு உதவுவதுபோல் தோன்றிய பிக் ஷோ பின்னர் அவருக்கு துரோகம் செய்து தாக்கினார்.[69] இந்த சண்டையின் விளைவாக, நோ மெர்ஸியில் நடந்த போட்டியில் தி அண்டர்டேக்கரும் பிக் ஷோவும் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர், இதில் தி அண்டர்டேக்கரின் பின்னந்தலையில் குத்தி அவரை போட்டியிலிருந்து பிக் ஷோ வெளியேற்றினார்.[70] சைபர் சண்டேயில், ஹெல்ஸ் கேட்டைப் பயன்படுத்திய பின்னர் லாஸ்ட் மேன் ஸ்டேண்டிங் போட்டியில் தி அண்டர்டேக்கர் பிக் ஷோவைத் தோற்கடித்தார்.[71] இந்த நீண்டபகையை முடிவுக்குக் கொண்டுவர சர்வைவர் சீரிஸில் நடந்த கேஸ்கட் போட்டியில் தி அண்டர்டேக்கர் பிக் ஷோவை வீழ்த்தினார்.[72]

நோ வே அவுட்டில் தி அண்டர்டேக்கர் டபிள்யுடபிள்யுஇ சாம்பியன்ஷிப் எலிமினேஷன் போட்டியில் ஒரு பகுதியாக இருந்தார், இந்தப் போட்டியில் டிரிபிள் ஹெச் வெற்றிபெற்றார். அவர் பிறகு ஷான் மைக்கேல்ஸ் உடனான நீண்டநாள் பகையைத் தீர்த்துக்கொள்ள நினைத்தார், உண்மை என்னவெனில் அவர் முன்பு நடந்த ஒற்றையர்கள் போட்டிகளில் மைக்கேல்ஸை தோற்கடித்ததே இல்லை. இந்த நீண்டபகை ரஸில்மேனியா XXV இல் முற்றியது, இதில் தி அண்டர்டேக்கர் தன்னுடைய ரஸில்மேனியா வெற்றிவரிசையை 17–0 என்ற வித்தியாசத்தில் முழுமையாக்கிக்கொள்ள வெற்றிபெற்றார்.[73] ரஸில்மேனியாவிற்குப் பின்னர் அவர் மறைந்துபோனார்.

மூன்றாவது உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் ஆளுகை (2009–present)


மூன்றாவது முறையாக உலக ஹெவிவெயிட் சாம்பியனாக அண்டர்டேக்கர்.

நான்கு மாத விடுப்பிற்குப் பின்னர், மேசைகள், ஏணிகள் மற்றும் நாற்காலிகள் போட்டியில் ஜெஃப் ஹார்டியிடமிருந்து உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை அப்போதுதான் வென்றிருந்த சிஎம் பன்க்கை தாக்கி ஆகஸ்டில் நடந்த சம்மர்ஸ்லாமில் தி அண்டர்டேக்கர் திரும்பிவந்தார்.[74] பிரேக்கிங் பாய்ண்டில் தி அண்டர்டேக்கர் ஒரு சப்மிஸன் போட்டியில் பன்க்கை எதிர்கொண்டார். தி அண்டர்டேக்கர் உண்மையில் தன்னுடைய ஹெல்ஸ் கேட் பிடியைப் பயன்படுத்தி அந்தப் போட்டியில் வென்றிருந்தார், ஆனால் விக்கி கரேரோ இன்னும் பதவியிலிருப்பதால் இந்தப் பிடி தடைசெய்யப்பட்டதாகிறது என்று அறிவித்து ஸ்மாக்டவுன் பொது மேலாளர் தியோடர் லாங்கால் அந்தப் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டது. அண்டர்டேக்கர் சரணடையாதபோதும் நடுவரான ஸ்காட் ஆம்ஸ்ட்ராங் அழைப்பொலியை அழைத்தபோது பன்க் தனது அனகோண்டா வைஸைப் பயன்படுத்தி இந்தப் போட்டியில் வெற்றிபெற்றார் (இது 1997 இல் இதே வளாகத்தில் நடைபெற்ற மாண்ட்ரியஸ் ஸ்க்ரூஜாப்பை நினைவுபடுத்துவதாக இருந்தது).[75] ஸ்மாக்டவுனின் செப்டம்பர் 25 அத்தியாயத்தில், உண்மையில் தி அண்டர்டேக்கரால் பிடித்துவைக்கப்பட்டிருந்த கலசத்திலிருந்து வெளிவந்த தியோடர் லாங் தடையானது அதிகாரப்பூர்வமான முறையில் நீக்கப்படுவதாக அறிவித்தார்.[76] இவர்கள் இருவருக்கும் இடையிலான நீண்டபகை ஹெல் இன் எ செல்லில் தொடர்ந்தது, ஹெல் இன் எ செல் போட்டியி்ல் தி அண்டர்டேக்கர் உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப்பை பன்க்கிடமிருந்து வென்றார்.[77] தி அண்டர்டேக்கர் ஸ்மாக்டவுனில் சிஎம் பன்க்கிற்கு எதிராக நடந்த மறுபோட்டி, பிராக்கிங் ரைட்ஸில் நடந்த ஃபேட்டல் ஃபோர் வே போட்டி, மற்றும் சர்வைவர் சீரிஸில் நடந்த டிரிபிள் திரட் போட்டி ஆகிவற்றில் வெற்றிபெற்றார். அவர் இந்த சாம்பியன்ஷிப்பிற்காக பாடிஸ்டாவை டிஎல்சி: மேசைகள், ஏணிகள் மற்றும் நாற்காலிகள் போட்டியில் எதிர்கொண்டார், பாடிஸ்டா லோ ப்ளோவைப் பயன்படுத்தி உண்மையில் வெற்றிபெற்றிருந்தாலும் லாங்கால் மறுமுறை தொடங்கப்பட்ட இந்தப் போட்டியில் தி அண்டர்டேக்கர் வெற்றிபெற்றார்.

பிற மீடியா

காலவே 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த சபர்பன் கமாண்டோ என்ற திரைப்படத்தில் தோன்றினார்.[78] அவர் Poltergeist: The Legacy [79] இன் அத்தியாயங்களிலும் 1999 இல் செலிபிரிட்டி டெத்மேட்சிலும் தோன்றியிருக்கிறார்.

தி அண்டர்டேக்கர் கதாபாத்திரத்தை வைத்து நிறைய பிரதியாக்கங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. கேயாஸ்! காமிக்ஸ் அண்டர்டேக்கர் சித்திரக்கதையை வெளியிட்டிருக்கிறது. 2005 இல், பெருமளவிற்கு கேன் குறித்து விளக்கும் பாக்கெட் புக்ஸை வெளியி்ட்டது,Journey into Darkness: An Unauthorized History of Kane ஆனால் இதில் அவருடைய சகோதரராக அண்டர்டேக்கர் தோன்றினார், இருப்பினும் அவர்கள் நிஜ வாழ்க்கையில் தொடர்புடையவர்கள் அல்ல.

தி அண்டர்டேக்கரின் கதாபாத்திரம் ஹிந்தி திரைப்படமான கில்லாடியோன் கா கில்லாடியில் வில்லனாக சித்தரிக்கப்பட்டது, இந்தக் கதாபாத்திரத்தை பிரைன் லீ (டபிள்யுடபிள்யுஎஃப் இல் போலி அண்டர்டேக்கராக வந்தவர்) ஏற்றார். அவர் 1990 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் அண்டர்டேக்கர் ஏற்றிருந்த மேற்கத்திய சவப்பெட்டி சுமப்பவர் போன்ற உடையை அணிந்திருந்தார் என்பதோடு, இந்தத் திரைப்படத்தில் இறுதிக்கட்ட உத்தியாக டூம்ஸ்டோன் பைல்டிரைவரைப் பயன்படுத்தினார். நவம்பர் 6 இல் தி அண்டர்டேக்கரின் தோற்றம் மற்றும் அவருடைய சக்திகள் குறித்து கவனம் செலுத்தும் அவருடைய சொந்தத் திரைப்படத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதில் காலவே அவராகவே தோன்றினார்.

சொந்த வாழ்க்கை


தி அண்டர்டேக்கர் ராவின் 80வது அத்தியாயத்தின்போது உள்ளே வருகிறார்.

அவர் கூடைப்பந்து அணியின் உறுப்பினராக இருந்த வால்டிரிப் ஹை ஸ்கூலில் 1983 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். காலவே முதலில் 1989 ஆம் ஆண்டு ஜோடி லின்னை திருமணம் செய்தார் அவர்களுக்கு இந்தத் திருமணம் முடிவுக்கு வரும் முன்னர் 1993 ஆம் ஆண்டில் பிறந்த கன்னர் என்ற மகன் உள்ளார். காலவே தன்னுடைய இரண்டாவது மனைவியான சாராவை கலிபோர்னியா, சாண்டியாகோவில் டபிள்யுடபிள்யுஎஃப் ஆட்டோகிராப் கையெழுத்திடும் நிகழ்வில் சந்தித்தார். அவர்கள் 2000 ஆம் ஆண்டு ஜூலை 21 இல் செயிண்ட்.பீட்டர்ஸ்பெர்க், ஃபுளோரிடாவில் திருமணம் செய்துகொண்டனர். மார்க் மற்றும் சாரவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர்: கேஸி (2002 ஆம் ஆண்டு நவம்பர் 21 இல் பிறந்தவர்), கிரேஸி (2005 ஆம் ஆண்டு மே 15இல் பிறந்தவர்).

திருமணப் பரிசாக காலவே தன்னுடைய மனைவியின் பெயரைத் தன்னுடைய தொண்டையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார், தான் செய்துகொண்டதிலேயே இதுதான் மிகவும் வலிமிகுந்தது என்று அவர் கூறினார். அண்டர்டேக்கர் வேறு பல வடிவங்களிலும் பச்சைக் குத்திக்கொண்டிருக்கிறார்: அவர் "அசலான டெட்மேன்" என்று குறிப்பிடும் கல்லறை தோண்டுபவர், மண்டையோடுகள், ஒரு கோட்டை மற்றும் ஒரு சூனியக்காரன். தன்னுடைய உடல் கலையைப் பற்றிப் பேசும்போது ஒருவகையான மத்திய காலத்தைச் சேர்ந்த விஷயங்கள் தன்னுடைய கைகளில் நடந்துகொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். தன்னுடைய கழுத்தின் பின்பகுதியில் நடனமாடும் எலும்புக்கூடி ஒன்றையும், வயிற்றில் பிஎஸ்கே பிரைட் என்று கூறும் படத்தையும் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார்.

மல்யுத்தத்திற்கும் மேலாக காலவேக்கு பல பழக்கங்களும் ஆர்வங்களும் இருக்கின்றன. அவர் ஹார்லே-டேவிட்ஸன் மற்றும் வெஸ்ட் கோஸ்ட் சாப்பர்ஸ் மோட்டார்சைக்கிள்களை சேகரித்து வைத்திருக்கிறார் என்பதோடு தனது முதல் புதிய மோட்டார்சைக்கிளை 1991 ஆம் ஆண்டு சர்வைவர் சீரிஸில் ஹல்க் ஹோகனை டபிள்யுடபிள்யுஎஃப் சாம்பியன்ஷிப்பிற்காக தோற்கடித்த பின்னர் வாங்கினார். வெஸ்ட் கோஸ்ட் சாப்பரின் நிறுவனரான ஜெஸ்ஸி ஜேம்ஸ் அவருக்கென்று உருவாக்கித் தந்த மோட்டார்சைக்கிள் ஒன்றையும் காலவே வைத்திருக்கிறார். அவர் நிக் கேவ் மற்றும் அவருடைய இசை முயற்சிகள் (தி பர்த்டே பார்ட்டி மற்றும் தி பேட் சீ்ட்ஸ்) அனைத்திற்கும் மிகப்பெரிய ரசிகராவார். அவர் சிசி சிப், ஏசி/டிசி, கிஸ், பிளாக் சபாத், கன்ஸ் என் ரோஸஸ், மெட்டாலிக்கா, யூதாஸ் பிரிஸ்ட், ஐயன் மெய்டன், மற்றும் பிளாக் லேபிள் சொசைட்டி ஆகியவற்றையும் கேட்டு ரசிக்கிறார். கண்ட்ரி மற்றும் ப்ளூஸ் ஆகியவை அவருடைய விருப்பமான மற்ற இசை வகைகளாகும். ஒரு பெருவிருப்பமுள்ள குத்துச்சண்டை ரசிகரான காலவே 2005 இல் பெக்காயோ எதிராக வெலாகுவஸ் சண்டையின்போது பெக்காயோவின் அணியை வழிநடத்திச் செல்கையில் அமெரிக்க தேசியக் கொடியைப் பிடித்துச் சென்றவர்களுள் ஒருவராவார்.[85] இது ஃபிலிப்பைன் செய்தி நிகழ்ச்சியான டிவி பேட்ரோல் வேர்ல்டில் நடந்த நேர்காணலில் சக மல்யுத்த வீரரான பாடிஸ்டாவால் உறுதிசெய்யப்பட்டது. காலவே கலப்பு தற்காப்புக் கலைகளின் தீவிர ரசிகருமாவார் என்பதோடு சில அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.

2007 ஆம் ஆண்டில் கையில் ஏற்பட்ட காயத்தால் தி அண்டர்டேக்கர் போட்டிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தபோது தன்னுடைய கூட்டாளி ஸ்காட் எவர்ஹார்ட்டுடன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். காலவேயும் எவர்ஹார்ட்டும் கொலராடோ, லவ்லேண்டில் 2.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கட்டிடத்தை கட்டி முடித்தனர். ஆடம்பரமான அலுவலக இடவசதிகளுடன் இருக்கும் இந்தக் கட்டிடத்திற்கு அவர்களுடைய பெயரின் கடைசி எழுத்துக்களை இணைத்து "The Calahart" என்று பெயரிடப்பட்டது. தொலைக்காட்சியில் பிரபலமானவராக இருப்பது நிச்சயம் தன்னுடைய தொழிலுக்கு உதவுவதாகக் குறிப்பிட்டார், அத்துடன் "எந்த வகையிலும் இது உங்கள் பேரத்தை முடக்கிவிடாது ஆனால் மக்கள் உங்களுடன் அமர்ந்து பேச விரும்புவார்கள். இது நிறைய பேரை சந்திக்க எங்களுக்கு உதவுகிறது என்பதோடு நாங்கள் எதைச் செய்ய விரும்புகிறோம் என்பதையும் தெரியப்படுத்துகிறது."[86] காலவேயும் அவருடைய மனைவி சாராவும் பெரிய எண்ணிக்கையில் நாய்களை வளர்ப்பதற்கான உயிர்காக்கும் சிகிச்சைக்கு உதவுவதற்கென்று டெக்ஸாஸ் எ&எம் காலேஜ் ஆஃப் வெட்டனரி மெடிசின் & பயோமெடிக்கல் சயின்ஸில் தி ஜூயல் காம்ப்டன் காலவே தி அனமல்ஸ் ஃபண்டை நிறுவியிருக்கின்றனர்.[87]

மல்யுத்தத்தில்

TakerTombstone.jpg
The Undertaker about to perform the Tombstone piledriver on Ric Flair at WrestleMania X8.

Undertaker oldschool.jpg
The Undertaker performs Old School (an arm twist ropewalk chop) on Heidenreich.

Undertaker-Gogoplata-Edge.jpg
The Undertaker locks Edge in the Hell's Gate.

Undertaker-Prepares-To-Legdrop-Edge.jpg
The Undertaker prepares to legdrop Edge.


  • இறுதிகட்ட ஆட்டநுணுக்கங்கள்
    • தி அண்டர்டேக்கராக
      • சோக்ஸ்லாம்
      • ஹெல்ஸ் கேட் (மேம்படுத்தப்பட்ட கோகோபிளாட்டா) – 2008–தற்போதுவரை
      • தி லாஸ்ட் ரைட் (உயர்த்தப்பட்ட பவர் பாம்) – 2000–தற்போதுவரை
      • டூம்ஸ்டோன் பைல் டிரைவர்
    • "மீன்" மார்க் காலஸாக
      • காலஸ் கிளட்ச் (தாடை பிடி)
      • ஹார்ட் பன்ச்
  • தனித்துவம் வாய்ந்த உத்திகள்
    • பிக் பூட்
    • கார்னர் குளோத்ஸ்லைன்
    • ஃபுஜிவேரா ஆம்பர்[1]
    • கிளோடைன் லெக் டிராப் எதிரியின் மார்பில் அடிப்பது[1]
    • கையை விட்ட நிலையில் மேல் கயிற்றிலிருந்து சூசைட் டிரைவ்
    • ஓல்டு ஸ்கூல் (ஆர்ம்ஸ் டிவிஸ்ட் ரோப்வால்க் சோப்)
    • ரிவர்ஸ் எஸ்டிஓ
    • ரன்னிங் டிடிடீ
    • ரன்னிங் ஜம்பிங் லெக் டிராப்[1]
    • ரன்னிங் லீப்பிங் குளோத்ஸ்லைன்[1]
    • சைட்வாக் ஸ்லாம்[1]
  • மேலாளர்கள்
    • ஜெனரல் ஸ்கேண்டர் அகபர்
    • பால் பியரர்
    • பால் இ. டேஞ்சரஸ்லி
    • தியோடர் லாங்
    • பிரதர் லவ்
    • டச் மேண்டில்l
    • டவுன்டவுன் புருனோ
  • புனைப்பெயர்கள்
    • "தி ஃபினோம்"
    • "தி டெட்மேன்"
    • "தி அமெரிக்கன் பேட் ஆஸ்"
    • "பூகர் ரெட்"
    • "தி ரெட் டெவில்"
    • "பிக் ஈவிள்"
    • "தி மேன் ப்ரம் த டார்க் சைட்"
    • "தி லார்ட் ஆஃப் டார்க்னஸ்"
    • "தி டெமோன் ஆஃப் டெட் வேலி"
    • "தி கன்சைன்ஸ் ஆஃப் டபிள்யுடபிள்யுஇ"
  • நுழைவு இசைகள்
    • "மிராக்கிள் மேன்" ஓஸி ஆஸ்பர்ன் (என்ஜேபிடிபிள்யு)
    • "சைனா ஒயிட்" ஸ்கார்பியன்ஸ் (என்டபிள்யுஏ / டபிள்யுசிடபிள்யு)
    • "தி கிரிம் ரீப்பர்" ஜிம் ஜான்ஸ்டன்
    • "கிரேவியார்ட் சிம்பொனி" ஜிம் ஜான்ஸ்டன் (1995-1998)
    • "டார்க் சைட்" ஜிம் ஜான்ஸ்டன் (1998–1999)
    • "மினிஸ்ட்ரி" ஜிம் ஜான்ஸ்டன் (1999)
    • "அமெரிக்கன் பேட் ஆஸ்" கிட் ராக் (2000)
    • "ரோலின்' (ஏர் ரெய்ட் வெகிக்கிள்)" லிம்ப் பிஸ்கிட் (2000–2002, 2003)
    • "டெட் மேன் ஜிம் ஜான்ஸ்டன் (2002)
    • "யூவார் கான்ன பே" ஜிம் ஜாம்ஸ்டன் (2002–2003)
    • "கிரேவியார்ட் சிம்பொனி" ஜிம் ஜான்ஸ்டன் (2004–தற்போதுவரை)

சாம்பியன்ஷிப்களும் தனித்திறன்களும்

  • ப்ரோ ரெஸ்லிங் இல்லஸ்ட்ரேடட்
    • பிடபிள்யுஐ ஃப்யூட் ஆஃப் த இயர் (1991) தி அல்டிமேட் வாரியர் உடன்
    • கிங் ஆஃப் தி ரிங்கில் ஹெல் இன் எ செல் போட்டியில் மேன்கைண்டிற்கு எதிராக பிடபிள்யுஐ மேட்ச் ஆஃப் த இயர் (1998)
    • 2002 ஆம் ஆண்டில் பிடபிள்யுஐ 500 இல் 500 சிறந்த ஒற்றையர் மல்யுத்த வீரர்களில் அவருக்கு 2 ஆம் இடம் அளித்திருந்தது
  • யுனைட்டட் ஸ்டேட்ஸ் ரஸ்ட்லிங் அசோசியேஷன்
    • யுஎஸ்டபிள்யுஏ யுனிஃபைட் வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் (1 முறை)
  • வேர்ல்ட் கிளாஸ் ரஸ்ட்லிங் அசோசியேஷன்
    • டபிள்யுசிடபிள்யுஏ டெக்ஸாஸ் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் (1 முறை)
  • வேர்ல்ட் ரஸ்ட்லிங் ஃபெடரேஷன் / வேர்ல்ட் ரஸ்ட்லிங் எண்டர்டெயின்மெண்ட்
    • டபிள்யுசிடபிள்யு டேக் டீம் சாம்பியன்ஷிப் (1 முறை) – கேன்[1] உடன;
    • உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் (3 முறைகள், தற்போது)
    • டபிள்யுடபிள்யுஎஃப்/இ சாம்பியன்ஷிப் (4 முறைகள்)
    • டபிள்யுடபிள்யுஎஃப் ஹார்ட்கோர் சாம்பியன்ஷிப் (1 முறை)
    • டபிள்யுடபிள்யுஎஃப் டேக் டீம் சாம்பியன்ஷிப் (6 முறைகள்) – ஸ்டீவ் ஆஸ்டின் (1), தி பிக் ஷோ (2), தி ராக் (1) மற்றும் கேன் (2)ஆகியோருடன்
    • ராயல் ரம்பிள் (2009)
    • டீஸலை பாதாளத்திற்குள் தள்ளிய டபிள்யுடபிள்யுஎஃப் கிரேட்டஸ்ட் ஹிட்டிற்காக (1996 ஸ்லாம்மி விருது
    • சிறந்த பச்சை குத்தலுக்கான ஸ்லாம்மி விருது (1997)
    • சிறந்த நுழைவு இசைக்கான ஸ்லாம்மி விருது (1997)
    • ஸ்டார் ஆஃப் தி ஹையஸ்ட் மேக்னிடியூடிற்கான ஸ்லாம்மி விருது (1997)
    • vs. Shawn Michaels at ரஸில்மேனியா XXV இல் ஷான் மைக்கேல்ஸிற்கு எதிராக அந்த ஆண்டின் (2009) போட்டிக்கான ஸ்லாம்மி விருது.
  • ரெஸ்லிங் அப்சர்வர் நியூஸ்லெட்டர் விருதுகள்
    • சிறந்த ஜிம்மிக் (1990–1994)
    • சிறந்த ஹீல் (1991)
    • அந்த ஆண்டின் நீண்டபகை (2007) பாடிஸ்டாவிற்கு எதிராக
    • மோஸ்ட் ஓவர்ரேடட் (2007)
    • வாசகர்களின் குறைந்த விருப்பமுள்ள மல்யுத்த வீரர் (2001)
    • கேன் எதிராக குரோனிக் அன்ஃபர்கிவனில்

அந்த ஆண்டின் மிக மோசமான போட்டி (2001)

    • ரஸ்ட்லிங் அப்சர்வர் நியூஸ்லெட்டர் ஹார் ஆஃப் ஃபேம் (கிளாஸ் ஆஃப் 2004)
    • ஜியண்ட் கோண்சலஸ் எதிராக

அந்த ஆண்டின் மிக மோசமான நீண்டபகை (1993)

  • தி அண்டர்டேக்கரின் தோல்வியற்ற வெற்றி வரிசையை விளையாட்டுக்களிலேயே 7வது வெற்றிவரிசை என்று தி மிர்ரர் குறிப்பிட்டிருந்தது என்பதுடன் தொழில்முறை மல்யுத்தப் போட்டியிலேயே தரவரிசைப்படுத்தப்பட்ட ஒரே வெற்றிவரிசை இதுதான்.