Monday, June 7, 2010

தானுந்து

தானுந்து அல்லது கார்(Car) (automobile) என்பது தானே இழுத்துச் செல்லும் போக்குவரத்து வண்டியாகும். ஒரு காலத்தில் வண்டிகளை, மாடுகளும் குதிரைகளும் இழுத்துச் சென்றன. ஏறத்தாழ கி.பி. 1890 ஆண்டு வாக்கில் எந்த விலங்கும் இல்லாமல் தானே இழுத்துச் செல்ல வல்ல வண்டிகளை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கண்டு பிடித்தனர். 1900 ஆண்டுத் தொடக்கத்தில் பெரும் விந்தையாகவும் வேடிக்கையாகவும் இருந்த இத் தானுந்துகள் 20ஆம் நூற்றண்டின் தொடக்கத்திலிருந்து மனிதனின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகின்றன.

தானுந்துகளின் வரலாறு


'சாகுவார் (Jaguar) 1937

இன்றைய தானுந்துகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பன்முக ஆய்வுகள் நடத்தப்பட்டு பெரு வளர்ச்சியடைந்துள்ள வண்டிகள். வருங்காலத்தில் இன்னும் வெவ்வேறு கோணங்களிலே தானுந்துகள் வளர்ச்சியுற இருக்கின்றன. எரியெண்ணை (அல்) பெட்ரோல் இல்லாமலும், பறக்கும் ஆற்றலுடையனவாகவும் ஓட்டுனர் துணையில்லாமலும், என்று பற்பல கோணங்களில் வளர்ச்சி பெற இருக்கின்றன. ஆனால் முதலில் எப்படித் தொடங்கி எப்படி வளர்ச்சியடைந்தது என்று பார்க்கலாம்.

1770 ஆம் அண்டு முதன் முதலாக தானே உந்திச் செல்லும் நீராவியினால் இயக்கப்பட்ட மூன்று சக்கரம் (ஆழி) கொண்ட ஒரு தானுந்தை பிரான்சு (‘விரான்சு) நாட்டு காப்டன் நிக்கொலாசு சோசப்பு க்யூனொ (Nicolas Joseph Cugnot) என்பார் ஓட்டிக்காட்டினார். முன் சக்கரம் கொண்ட ஒரு கட்டைவண்டியிலே ஒரு பொறியைப் பொருத்தி இருந்தவாறு அது காட்சி அளித்தது. அது சுமார் மணிக்கு 5 கி.மீ விரைவோடு ஓடக்க்கூடியதாகவும், 10-15 மனித்துளிகளுக்கு ஒருமுறை வண்டியை நிறுத்தி நீராவி மீண்டும் பெருகி மீண்டும் உந்துதல் தரும் வண்ணமும் இருந்தது. இதனை படத்தில் காணலாம்.


முதல் நீராவி தானுந்துCugnot

பழைய தானுந்துகள்


முதல் நீராவி தானுந்து வரைபடம் (Cugnot)

பென்சு 1886

பென்சு 1894

டொயோட்டா

No comments:

Post a Comment