Thursday, June 10, 2010

பொங்கும் ஸ்னேகா

நடிக்க வந்துவி்ட்டேன் என்பதற்காக என்னைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா... எனக்கென்று ஒரு மரியாதை உள்ளது. நடிகைகள் விபச்சாரிகள் அல்ல.." என பொங்கித் தள்ளியுள்ளார் நடிகை ஸ்னேகா. (எல்லோருக்கும் புரியுதா... அவுங்க அப்புடி இப்புடி எல்லாம் இல்ல.)

சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழில், ஸ்னேகாவைப் பற்றி தவறான செய்தி இடம் பெற்றுவிட்டதாம். குறிப்பாக கோவா படத்தில் நடித்தபோது, அவர் கர்ப்பமாகிவிட்டதாக அந்த செய்தியில் இடம் பெற்றுள்ளதாம்.(ஆமா கோவால பசங்களும் பசங்களும் தான் அப்புடி இப்புடி.. பாவம் பொண்ணுங்களுக்கு சான்சே இல்லாம போச்சு.. வெங்கட் ரொம்ப மோசம்..)

இதனால் கோபம் கொண்ட ஸ்னேகா, தனக்கெதிராக செய்தி வெளியிடுவோர் யாராக இருந்தாலும் தண்டனை வாங்கித் தருவேன் என கொதித்துள்ளார்.(பீ கேர் புல்..யாருக்கிட்ட)

இதுகுறித்து அவர் கூறுகையில், "நடிக்க வந்துவிட்டால் ஒரு நடிகையைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா... என்னைப் பற்றி நல்ல செய்தியை எழுதவோ, என் நடிப்பைப் பாராட்டி எழுதவோ ஒருவருக்கும் மனசு வருவதில்லை. (நீங்க சிரிச்சு காட்டுறத தான் நடிப்பு என்குறீங்களா...சிம்ரனை போல ஏதாவது காட்டியிருந்தா (ஐ மீன் நடிப்பை) ஏதாவது எழுதியிருக்கலாம், நீங்க அந்த காலத்துல இருந்து சேலையோட வந்து சிரிச்சுட்டு போற ஆள் ஆச்சே..அப்ப எப்புடி எழுத வரும்.. )

ஆனால் மோசமாக எழுத பலரும் துடிக்கிறார்கள்.(அது எங்களோட குல தொழில் மாடம்)

இனி என்னைக் காயப்படுத்தி எழுதும் யாரையும் மன்னிக்க மாட்டேன். தண்டனை வாங்கித் தருவேன். (தாராளமா செய்யுங்க யாரு வேணாம் என்றான்க)

நடிகைகளும் மற்றவர்களைப் போல அவர்கள் தொழிலைச் செய்கிறார்கள். ஒரு மருத்துவர், வக்கீலைப் போல. நடிகைகள் என்றாலே விபச்சாரிகள் என சிலர் புரிந்து கொள்வது தவறு...," என்றார். (ஆமா ஆமா நாங்க நினைக்கிறது தப்புத்தான்..புவனேஸ்வரி அக்காதான் எல்லாத்துக்கும் பிள்ளையார் சுளி போட்டாங்களே..அதுக்கு பிறகுமா நம்ப சொல்றீங்க..என்கென்னவோ நீங்க இப்படி சொல்றதுதான் ரொம்ப யோசிக்க வைக்குது மாடம்.)

தமிழ், தெலுங்கில் கைவசம் 6 படங்களை வைத்துள்ளாராம் ஸ்னேகா.(சரி சரி கதைய வுடுங்க உங்க 6 படத்தையும் நிறைவா முடிச்சு கொடுங்க மேடம்..பாவம் புரொடியூசர் ரொம்ப நொந்துபொய் இருப்பாய்ன்க..)

1 comment: